Ragukala Durga Ashtakam Lyrics in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களது வாழ்க்கையை குறித்த பயம் இருக்கும். அப்படி நமது பயங்கள் அனைத்தையும் போக்கி நமது வாழ்க்கையை காப்பதற்காக பல கடவுள்கள் இருக்கின்றன. அப்படி நம்மை பாதுகாப்பதற்காக உள்ள பல கடவுள்களை ஒருவர் தான் இந்த துர்காதேவி. இவர் மிகவும் சாந்தமான ஒரு கடவுள் ஆனால் தன்னை நம்பி வந்தவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் பாதுகாப்பதற்கு முதலில் வரும் தெய்வம் இவராகத்தான் இருப்பார். அப்படிப்பட்ட இவரின் அருளை பெறுவதற்கு அவருடைய போற்றிகள், மந்திரங்கள், அஷ்டோத்திரம் மற்றும் சில பாடல்கள் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். எனவே தான் உங்களுக்கு உதவுவதற்காக வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து துர்கா தேவியின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.
ரட்ச ரட்ச ஜகன்மாதா பாடல் வரிகள்
Valvu Anaval Durga Song Lyrics in Tamil
வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைப்பதால் என்னென்ன பலன் கிடைக்கும் தெரியுமா
செம்மையானவள் துர்கா ஜெபமும் ஆனவள்
அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள்
இம்மையானவள் துர்கா இன்பம் ஆனவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
உயிருமானவள் துர்கா உடலும் ஆனவள்
உலகமானவள் துர்கா எந்தன் உடமை ஆனவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்றும் பழுத்த துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
துன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையும் ஆனவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
செல்வ செழிப்பை அதிகரிக்க கல் உப்பில் இதை மட்டும் மறைத்து வையுங்க
குருவும் ஆனவள் துர்கா குழந்தை யானவள்
குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே
திருவும் ஆனவள் துர்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துர்கையே எனைக் காக்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
கன்னி துர்கையே இதய கமல துர்கையே
கருணை துர்கையே வீரக் கனக துர்கையே
அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே
அன்பு துர்கையே ஜெய துர்க்கை துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
ராகுகால துர்க்கை அம்மனின் அஷ்டகம் வரிகள் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |