சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏன் 18 படிகள் உள்ளது.? அந்த 18 படிகளுக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

Advertisement

ஐயப்பன் 18 படி தத்துவம் | Sabarimala 18 Steps Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படிகளின் விவரங்கள் பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். சபரிமலையில் உள்ள 18 படிகளில் ஏறி ஐயப்பனை முழு மனதோடு தரித்தால் ஐயப்பன் நம் வாழ்வை படிப்படியாக உயர்த்துவார். இந்த 18 படிகளில் 18 வகையான தேவதைகள் இருப்பதாகவும், 18 விதமான குணங்களை குறிப்பதாகவும் கூறப்படுகிறது. கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் போன்ற காவல் தெய்வங்களாக இந்த 18 படிகளை காத்து வருகிறார்கள். 18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

இந்த 18 என்ற எண்ணுக்கு ஒரு வரலாற்று சிறப்புண்டு. பாரத போர் நடைபெற்றது 18 நாட்கள், இராமாயண போர் நடைபெற்றது 18 மாதங்கள், தேவ அசுரர் போர் நடைபெற்றது 18 ஆண்டுகள். சபரிமலையில் உள்ள ஒவ்வொரு படியும் ஒரு அர்த்தத்தை குறிக்கிறது. அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

18 Steps of Sabarimala Meaning in Tamil:

ஐயப்பன் 18 படி தத்துவம்

சபரிமலை 18 படி தெய்வங்கள்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படிகளில் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், பிரம்மா, விஷ்ணு, ரங்கநாதர், காளி, எமன், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு(வியாழன்), சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய 18 தேவைகள் இருந்து அருள் புரிவதாக சொல்லப்படுகிறது.

முதல் படி – சூரிய பகவான்
இரண்டாம் படி – சிவன்
மூன்றாம் படி – சந்திர பகவான்
நான்காம் படி – பராசக்தி
ஐந்தாம் படி- அங்காரக பகவான்
ஆறாம் படி- முருகன்
ஏழாம் படி- புதன் பகவான்
எட்டாம் படி- விஷ்ணு
ஒன்பதாம் படி- குரு பகவான் (வியாழன்)
பத்தாம் படி- பிரம்மா
பதினோராம் படி- சுக்கிர பகவான்
பன்னிரண்டாம் படி- இலட்சுமி
பதிமூன்றாம் படி- சனி  பகவான்
பதினான்காம் படி- எம தர்ம ராஜன்
பதினைந்தாம் படி- இராகு பகவான்
பதினாறாம் படி- சரஸ்வதி
பதினேழாம் படி- கேது பகவான்
பதினெட்டாம் படி- விநாயக பெருமான்

ஐயப்பன் 108 சரணம் கோஷம்..!

ஐயப்பன் 18 படி உணர்த்தும் தத்துவம்:

முதல் படி: 

விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர்ந்து இறையருளால் முக்தி அடைய வேண்டும் என்ற ஆத்ம உணர்வினை அளிப்பதே முதல் படியாகும். இதுவே, விஷாத யோகம் ஆகும்.

இரண்டாம் படி:

சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவதை உணர்த்துகிறது.

மூன்றாம் படி:

கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவத்தை மூன்றாம் படி உணர்த்துகிறது.

நான்காம் படி:

ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறும் பாதையை காட்டுவது நான்காம் படி ஆகும்.

ஐந்தாம் படி:

சன்னியாச யோகம். நான் தான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்து, இறை சிந்தனை ஒன்றை மட்மே வாழ்க்கை இலட்சியமாக கொண்டு செயல்படும் வழியினை உணர்த்துகிறது.

ஆறாம் படி:

யான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடாமல், இறைவன் அளித்த ஐம்புலன்களையும், நல்ல விதமாக பயன்படுத்தும் வழியினை காட்டுவதே ஆறாம் படி.

ஏழாம் படி:

ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான். அதாவது, எல்லாமே கடவுள்தான் என்பதை உணர்த்துகிறது.

எட்டாம் படி:

அட்சர பிரம்ம யோகம். எப்போதும்  இறைவனைப் பற்றிய சிந்தனையில் இருந்து வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பதை உணர்த்துகிறது.

ஒன்பதாம் படி:

ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி என்பதை உணர்த்துகிறது.

பத்தாம் படி:

விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.

பதினோராம் படி:

விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளும் பக்குவத்தை பெறுவது ஆகும்.

பன்னிரண்டாம் படி:

பக்தி யோகம். இன்பம் – துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எஅனைத்திலும் சமத்துவத்தை காண செய்கிறது.

பதிமூன்றாம் படி:

ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர செய்கிறது.

பதினான்காம் படி:

குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதை உணர்த்துகிறது.

பதினைந்தாம் படி:

தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்து கொண்டு, நமக்கு தெய்வாம்சத்தை வளர்த்து கொள்வதை உணர்த்துகிறது.

பதினாறாம் படி:

சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்பதை உணர்த்தி, யாரிடமும் அகங்காரம் இல்லாமல் உணர வைப்பது ஆகும்.

பதினேழாம் படி:

சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெற வழிகாட்டுவது பதினேழாம் படி ஆகும்.

பதினெட்டாம் படி:

மோட்ச சன்யாச யோகம்.  உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது ஆகும்.

பதினெட்டு படிகளையும் படிப்படியாய் அடியெடுத்து கடந்து வந்து, நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன், மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார். என்பதே ஐய்யப்பனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

ஐயப்பனின் இருமுடி கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்..!

ஐயப்பனின் 18 கருவிகள்:

ஐயப்பன் சுவாமி தனது 18 கருவிகளை கொண்டு 18 படிகளை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த கருவிகள் பின்வருமாறு:

  1. வில்
  2. வாள்
  3. வேல்
  4. கதை
  5. அங்குசம்
  6. பரிசு
  7. பிந்திபாவம்
  8. பரிசை
  9. குந்தம்
  10. ஈட்டி
  11. கை வாள்
  12. முன் தடி
  13. கடுத்தி வை
  14. பாசம்
  15. சக்கரம்
  16. ஹலம்
  17. மழு
  18. முஸலம்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement