சனியால் நன்மை மற்றும் தீமை இரண்டையுமே பெறும் ராசிகள்
சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த ராசியிலே 2 1/2 ஆண்டுகளுக்கு இங்கயே இருப்பார். இதனால் எல்லா ராசிகளில் தாக்கம் ஏற்படும். இருந்தாலும் சில ராசிகள் மற்றும் நன்மை மற்றும் தீமை இரண்டையும் பெறுவார்கள். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 3-ம் மற்றும் 4-ம் இடங்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். இவர் தற்போது 5-ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைக்கிறார். அலுவலகத்தில் ஏற்றம், இறக்கம் காணப்படும். அதனால் நீங்கள் பணியில் எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும் சரி, அதனை தைரியமாக செய்வது சிறந்தது. உங்களின் பணிகளில் இடமாற்றம் காணப்படும். இதனால் நல்ல பலன்கள் காணப்படும். மேலும் உங்களின் பணிகள் மூலமாக உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். வீட்டில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்களின் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. ஏனென்றால் அப்போது தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். இதற்கு நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் விட்டு கொடுத்தல் செல்வது நல்லது. ஏனென்றால் அப்போது தான் இந்த சுப காரியமானது நல்லபடியாக நடக்கும்.உங்களின் ஆரோக்கியத்தில் இரத்த அழுத்தம், பரம்பரை சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. பெண்களுக்கு ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.
பரிகாரம்: நீங்கள் அதிகமான தீமைகளை பெறாமல் இருப்பதற்கு முருகனை வணங்குவது சிறந்தது. ஒருமுறை வைத்தீஸ்வரன் கோயில் சென்று வணங்கிவிட்டு வருவது, விசேஷ நன்மை தரும்.
சனி பகவானால் சில ராசிக்காரர்களுக்கு 2025 படாத பாடா இருக்க போகுது
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு 9-ம் இடத்திற்கு 10-ம் இடத்திற்கு வருகிறார். தற்போது 11-ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த 11-ம் இடமானது லாபமான இடமாக இருக்கும். இதன் மூலம் பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். மேலும் இந்த நேரத்தில் உங்களுக்கு சோர்வு தனம் ஏற்படக்கூடும். அப்போது நீங்கள் மனம் தளராமல் உழைக்க வேண்டும். மேலும் நீங்கள் எதிர்பார்த்த பதவியும், சம்பளமும் கிடைக்கும். உங்களின் கூட பிறந்தவர்களிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.
நீங்கள் எந்த செயல் செய்தாலும் வீட்டில் உள்ளவர்களிடம் அறிவுரைகளை கேட்டு நடந்து கோல்சத்து சிறந்தது. நீங்கள் வெளியே செல்லும் பொது பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக எடுத்து செல்ல வேண்டும். ஏனென்றால் இவைகள் ஏதும் இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வாகனத்தில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை உடனே பார்ப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் பார்ப்பதை தள்ளி போட்டால் பிரச்சனைகள் அதிகமாகலாம். ஆரோக்கியத்தில் அடிவயிறு, மூட்டு வலிஏற்படக்கூடும்.
பரிகாரம்: இந்த நேரத்தில் நீங்கள் மகாலட்சுமியை வழிபடுவது சிறந்தது. அதே சமயம் கஞ்சனூர் சுக்ரஸ்தலத்துக்குச் சென்று வழிபடுவது உங்களுக்கு நன்மையை அளிக்க கூடும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |