வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருச்செந்தூர் முருகன் ராஜ அலங்காரம் நேரம் மற்றும் மற்ற பூஜைகள் நேரம்

Updated On: September 5, 2025 5:26 PM
Follow Us:
Thiruchendur Murugan Alangaram Timings
---Advertisement---
Advertisement

Thiruchendur Murugan Alangaram Timings | திருச்செந்தூர் முருகன் ராஜ அலங்காரம் நேரம் | திருச்செந்தூர் முருகன் தரிசனம் நேரம்

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் முருகன் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகரின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவில் ஆகும். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வந்தால் தீராத துன்பமும் நீங்கும்.இந்த கோவில் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

தீராத கடன் பிரச்சனை, குடும்ப பிரச்சனை, வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்கிறவர்கள் திருச்செந்தூர் சென்று முருப்பெருமானை வழிபட்டு வர வேண்டும். திருச்செந்தூருக்கு பக்தர்களின் கூட்டமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் எப்போதும் கோவில் ஆனது கூட்டமாக இருக்கிறது.  முருகனுக்கு செய்யும் அலங்கார நேரத்தை பற்றி அறிந்து கொண்டால் அந்த நேரத்திற்கு கடவுளை சென்று தரிசனம் செய்யலாம்.  ஆகையால், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்பவர்கள் முருகன் கோவில் அலங்காரம் மற்றும் பூஜை நேரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

திருச்செந்தூர் முருகன் கோவில் நடை திறக்கும் நேரம்:

திருச்செந்தூர் முருகன் அலங்காரம் நேரம்

  • திருச்செந்தூர் முருகன் கோவில் திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
  • இக்கோயிலில் குமார தந்திர முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூஜை மற்றும் சிலை ஊர்வலம் நடைபெறும்.
  • ஒன்பது பூஜை காலங்கள் கடவுளுக்கு அலங்காரம் செய்ய 30 நிமிட இடைவெளியுடன் தினமும் அனுசரிக்கப்படுகின்றன.

முருகன் 1008 பெயர்கள்

திருச்செந்தூர் முருகன் அலங்காரம் நேரம்:

சுப்ரபாதம் – இறைவனின் கதவு திறக்கப்படும் நாளின் முதல் பிரார்த்தனை பொதுவாக சுப்ரபாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பூஜை அதிகாலை 5.00 மணிக்கு நடைபெறும்.

விஸ்வரூபம் – இந்த தரிசனம் பக்தர்களுக்கு அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

உதயமார்த்தாண்டம் – இந்த பூஜை தினமும் காலை 6.15 முதல் 7.00 மணி வரை நடைபெறுகிறது.

முதல் காலசந்தி – காலை 7.30 முதல் 8.30 வரை கர்ப்பகிரகத்தின் அருகாமையில் அபிஷேகம் பார்க்கிறோம்.

உச்சிகாலம் – உச்சி கால பூஜை நண்பகலில் நடத்தப்படுகிறது.

சாயரட்சை – இந்த பூஜை மாலை 5.00 மணிக்கு தொடங்கி, அதாவது, அன்றைய சூரிய அஸ்தமன நேரத்துக்கு 90 நிமிடங்களுக்கு முன்பு தொடங்க வேண்டும்.

அர்த்த ஜாமம் – இந்த பூஜை மூடுவதற்கு முன் தினமும் இரவு 8.00 மணிக்கு செய்யப்படுகிறது.

ஏகாந்தம் – இந்த பூஜை கோவில் மூடும் நேரத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

பள்ளியறை தீபாராதனை – இது பொதுவாக இரவு 9.00 மணிக்கு நடக்கும் இறுதி பூஜையாகும்.

முருகனை எப்போது ஆன்டி கோலத்திலும் ராஜ அலங்காரத்திலும் தரிசிக்க வேண்டும் என்று தெரியுமா.?

திருச்செந்தூர் பூஜை நேரம்:

நேரங்கள் பூஜை/ தரிசன விவரங்கள்
காலை 5:00 கோவில் திறக்கும் நேரம்
காலை 5:10 – காலை 5:30 மணி சுப்ரபாதம் – திருப்பள்ளி எழுச்சி
5:30 am – 5:45 am விஸ்வரூப தரிசனம்
காலை 5:45 முதல் 6:15 வரை த்வஜஸ்தம்ப நமஸ்காரம்
காலை 6:15 – 7:00 மணி உதய மார்த்தாண்ட அபிஷேகம்
காலை 7:00 – 8:00 மணி உதய மார்த்தாண்ட தீபாராதனை
காலை 8:00 முதல் 8:30 வரை காலசந்தி பூஜை
காலை 10:00 – 10:30 மணி கலச பூஜை
காலை 10:30 – 11:00 மணி உச்சிகால அபிஷேகம்
பிற்பகல் 12.00 மணி உச்சிகால தீபாராதனை
மாலை 5:00 சாயரட்சை பூஜை
இரவு 7:15 மணி அர்த்தசாம அபிஷேகம்
8:15 pm – 8:30 pm அர்த்தசாம பூஜை
8:30 pm – 8:45 pm ஏகாந்த சேவா
இரவு 8:45 – இரவு 9:00 மணி ரகசிய தீபாராதனை, பள்ளியறை பூஜை
இரவு 9:00 மணி நடை திருக்காப்பிடுதல்
இரவு 9:00 மணி கோவில் மூடும் நேரம்

பழனி முருகனுக்கு செய்யும் அலங்காரம் மற்றும் அதனுடைய நேரம் தெரியுமா.?

தினசரி தரிசனம் நேரங்கள்:

  • விஸ்வரூப தரிசனம்: காலை 5:30 முதல் 6:15 வரை
  • காலை தரிசனம்: 6:15 முதல் 12:00 மணி வரை
  • மாலை நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

திருச்செந்தூர் முருகன் ராஜ அலங்காரம் நேரம்:

மாலை 5:00 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை ஆகிய நேரங்களில், முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

திருச்செந்தூர் ஆடை விபரம்:

திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களுக்கு என்று தனி டிரஸ் கோடு இருக்கிறது. அதனை பின்பற்றி தான் ஆடை அணிந்து முருகரை வழிபட வேண்டும்.

  • ஆண்கள்- பேண்ட், வேஷ்டி அணிந்து வரலாம், ஆனால் சட்டை மற்றும் பனியன் அணிய கூடாது.
  • பெண்கள்- புடவை, பாவாடை தாவணி, சுடிதார், சல்வார் போன்றவை அணிந்து வரலாம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now