தோடகாஷ்டகம் வரிகள் | Totakashtakam Lyrics in Tamil..!
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…! நம் பொதுநலம்.காம் பதில் தினமும் தோறும் நிறைய ஆன்மீக பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அத்தகைய பதிவுகள் அனைத்தும் மிகவும் ஆன்மீகத்தில் உள்ள பலன்களையும், மற்ற பரிகாரங்கள் மற்றும் மந்திரங்களை கூறும் வகையில் இருக்கும்.
இந்த வரிசையில் ஒவ்வொரு கடவுகளுக்கு என்று இருக்கும் ஆன்மீக பாடல் வரிகளையும் பார்த்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்றைய பதிவில் ஒரு பாடல் வரிகளை தான் பார்க்க போகிறோம். ஆகவே பதிவை முழுவதுமாக படித்து தோடகாஷ்டகம் பாடல் வரிகளை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
தோடகாஷ்டகம் வரிகள்:
விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோப நிஷத் கதிதார்த நிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்
கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகில தர்சன தத்வ விதம்
பவ சங்கர தேசிக மே சரணம்
பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்
பவ சங்கர தேசிக மே சரணம்
பவ எவ பவானிதி மெனிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா
மம வாரய மோஹ மஹா ஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்
சுக்ருதே உதிக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா
அதி தீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்
ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரன்தி மஹாமாஹ ஸச்சலத:
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக மே சரணம்
குருபுங்கவ புங்கவகேதன தே
ஸமதாமயதாம் நஹி கோபி ஸுதீ:
சரணாகத வத்ஸல தத்வ நிதே
பவ சங்கர தேசிக மே சரணம்
விதிதா நமயா விதைக கலா
ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ
து மேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்
Totakashtakam Lyrics Meaning in Tamil:
அறியப்பட்ட எல்லா சாஸ்திரங்களுக்கும் திருப்பாற்கடல் போன்றவரே! மேன்மைபொருந்திய உபநிஷத்துக்களாற் பிரதிபாதிக்கப்பட்ட அர்த்தங்களுக்கு இருப்பிடமானவரே! தேவரீருடைய பரிசுத்தமான திருவடிகளை இருதயத்தில் தியானிக்கின்றேன். சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!
அருள்நிறைந்த ஆலயமே! ஜனன மரண சமுத்திரத்தில் துக்கத்தால் அலைகின்ற சித்தத்தையுடைய என்னைக் காப்பாற்றியருள்வீராக. சகல சாஸ்திரங்களின் உண்மையை உணர்பவனாக என்னைச் செய்தருவீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!
ஜீவேசுவரர்களை விசாரித்தறியும் ஞானமுடையவனாக என்னைச் செய்தருள்வீராக.
சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!
தேவரீரே பரமேசுவரரென்று என்மனதில் ஆனந்தமுண்டாகின்றது. என்னுடைய மோகமாகிய பெருங்கடலை நீக்கியருள்வீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!
ஓ புண்ணியமூர்த்தியே! உலகங்ளை ஆள்பவரே ! தேவரீரிடமிருந்து சமதிருஷ்டியாகிய சந்தோஷமானது பல பிரகாரமாக அனைவருக்கும் உண்டாயிற்று. மிகத் துக்கியாகிய இந்த என்னைக் காப்பாற்றி யருள்வீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!
ஓ குருமூர்த்தியே! உலகங்களை இரட்சித்தருளத் தேவரீருடைய மஹாமஹிமை வாய்ந்த திருவிளையாடல்கள் உன்னதமாய் விளங்குகின்றன. தேவரீரும் இங்கு சூரியனுக்குச் சமானமாக விளங்குகின்றீர். சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!
தங்களிடம் அடைக்கலம் புகுந்தவரிடத்தில் அன்புடையவரே! உண்மைப்பொருளுக்கு இடமானவரே! ஓ குரவர் சிகாமணியே! மேலோருக்கும் மேலாயிருப்பவரே! தேவரீருக்குச் சமானமாம் தன்மையை, விரிவாகத்தெளிந்த எந்த அறிஞனும் அடைந்ததில்லை. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!
ஓ குருமூர்த்தியே! ஒரு சாஸ்திரமேனும் தெளிவுடையதாய் என்னால் அறியப்படவுமில்லை; சிறிது பொன்னுமில்லை; தங்களுடன் பிறந்த கருணையைச் சீக்கிரம் தந்தருள்வீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |