வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்
இந்துக்கள் முறையில் சாஸ்திரம் சம்பிரதாயம் பார்ப்பார்கள். நாட்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் வாங்குவதற்கு, செடிகள் வளர்ப்பது போன்றவற்றில் நல்லது எது, கெட்டது எது என்று ஆராய்ந்து தான் செய்வார்கள். வீட்டில் முன் கற்றாழை செடியை வளர்த்தால் திருஷ்டி இருக்காது என்று கூறுவார்கள். இது போல நிறைய செடிகளை வளர்க்கலாம். அது போல் யார் வீட்டிலும் மரம் இல்லாமல் இல்லை. ஒரு மரமாவது இருக்கும். அப்படி உள்ள மரங்களில் சில மரங்கள் வீட்டில் இருக்க கூடாதாம். அவை என்னென்ன மரங்கள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்:
வில்வ மரம்:
வில்வ மரமானது சிவபெருமானுக்கு உகந்த மரமாகஇருக்கிறது. ஆகையால் இந்த மரத்தை வீட்டில் வைத்திருக்க கூடாது. ஏனென்றால் இந்த மரமானது மிகவும் புனிதமானது அதனால் இதை தீட்டும் கலங்கமும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் பிரச்சனை தான் ஏற்படும்.
முருங்கை மரம்:
முருங்கை மரத்தை வீட்டில் வளர்க்கலாம், ஆனால் இதை எழுந்து பார்க்க கூடிய வகையில் இருக்ககூடாது. வீட்டில் அருகே வைக்காமல் பின்புறம் வைத்து கொள்ளலாம்.
மாங்காய் மரத்தையும் வீட்டில் வளர்க்கலாம், ஆனால் இதை நீங்கள் தூங்கி எழுந்து பார்க்க கூடிய வகையில் இருக்ககூடாது. வீட்டில் அருகே வைக்காமல் பின்புறம் வைத்து கொள்ளலாம்.
வாஸ்துப்படி பெட்ரூமில் இந்த பொருட்களை வைக்காதீங்க
கருவேப்பிலை மரம்:
உங்க வீட்டில் ஒரே ஒரு ஆண் குழந்தை இருந்தால் கருவேப்பிலை மரத்தை வளர்க்க கூடாது.
அரசமரம்:
அரசமரம் புனிதமான மரமாக ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட மரத்தை சரியாக கவனிக்கவில்லை என்றால் பிரச்சனை ஏற்படும்.
தென்னை மரம்:
தென்னை மரத்தை வீட்டில் வளர்க்கலாம், ஆனால் ஒற்றை மரமாக வளர்க்க கூடாது.
அது போல ஒற்றை பனைமரமாகவும் வளர்க்க கூடாது.
புளிய மரம்:
புளிய மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது, ஏனென்றால் வீட்டில் எதிர்மறையான ஆற்றலை ஏற்படுத்தும். அதனால் இதை வளர்க்க கூடாது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |