Veetil Iruka Vendiya Vaasthu Porulkal
இன்றைய பதிவில் வீட்டிற்கு வீட்டில் இருக்க வேண்டிய முக்கிய வாஸ்து பொருள்கள் பற்றி பார்க்க போகிறோம். உங்கள் வீட்டில் சில வாஸ்து பொருள்களை வைத்திருப்பது உங்கள் வீட்டில் நேர்மறையான ஆற்றலை கொண்டுவரவும், உங்கள் வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களில் உங்களுக்கு நன்மைகள் நடக்கவும் உதவுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி சில பொருள்களை உங்கள் வீட்டில் வைப்பதன் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம்,செல்வம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். குறிப்பாக வீட்டின் நுழைவு வாசல் கிழக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருப்பது சிறந்தது. நுழைவு வாசல் சுத்தமாக வெளிச்சமாகவும் இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. வாஸ்து படி வீட்டிற்கு சிறந்த வாஸ்துபொருள்கள் பற்றி பார்க்கலாம் வாங்க…
புத்தர் சிலை :

வீட்டிற்கு சிறந்த வாஸ்து பொருள்களில் ஒன்றான புத்தர் சிலை வீட்டிற்கு மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இந்த புத்தர் சிலைகள் சாய்ந்த புத்தர், பிரார்த்தனை புத்தர், தியான புத்தர் போன்ற வடிவங்களில் உள்ளன.
புத்தர் சிலையை தரையிலோ அல்லது தாழ்வான பென்ச் போன்ற இடங்களில் வைக்க கூடாது. வாஸ்து சாத்திரங்களின் படி உங்கள் கண்மட்டத்திற்கு மேல் வைக்க வேண்டும்.
குளிர்சாதன பெட்டி போன்ற இடத்தில் புத்தர் சிலையை வைத்தால் வீட்டில் எதிர்மறையான ஆற்றலை ஏற்படுத்தும். புத்தர் சிலையை வைக்கம் போது அது வீட்டின் உள்நுழைவை பார்த்து இருக்க வேண்டும். கிழக்கு பார்த்து வைப்பது நல்லது.
காற்று மணி :

வாஸ்து படி உங்கள் வீட்டில் காற்று மணி பயன்படுத்துவதன் மூலம் வீட்டில் அமையான சூழல் உண்டாகும். இது வீட்டில் இருப்பதன் மூலம் இனிமையான இசை வீட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்தி தரும்.
வடமேற்கில் வைக்கும் காற்று மணி உங்கள் வாழ்வில் நம்பகமான பயனுள்ள நபர்களை கொண்டுவரும். இதில் மர காற்று மணி பீங்கான் காற்று மணி போன்ற பல்வேறு வகைகளில் உள்ளன.
மீன் தொட்டிகள்:

வீட்டிற்கு சிறந்த வாஸ்து பொருள்களில் ஒன்றான புத்தர் சிலை வீட்டிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது.
நீங்கள் மீன் தொட்டி வீட்டில் வைத்தால் அதை சுத்தம் செய்து பாசி படியாமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம்உங்கள் வீட்டில் நேர்மறையான ஆற்றல் அதிகரிக்கும்.
வடகிழக்கு திசையில் மீன் தொட்டிகள் வைப்பதன் மூலம் வீட்டில் அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் அளிக்கிறது.
உங்கள் வீட்டில் அரோவா மீன் சிலையை வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பதன் மூலம் உங்கள் வீட்டில் நேர்மறையான ஆற்றலை உறுதிசெய்கிறது.
வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்..! Vastu Plants..!
வீட்டு வாஸ்து படி வீட்டில் வைத்திருக்க கூடாத பொருள்கள்:
இறந்த செடிகள்:
உங்கள் வீட்டில் இறந்த செடிகள் வைக்க கூடாது. இப்படி இருப்பதன் மூலம் வீட்டில் எதிர்மறையான ஆற்றல் வளரக்கூடும் என்று கூறப்படுகிறது.
பழைய கடிகாரம்:
உங்கள் வீட்டில் பழைய கடிகாரம் போன்றவற்றை வீட்டில் வைக்க கூடாது. இப்படி இருப்பதன் மூலம் வீட்டில் எதிர்மறையான ஆற்றல்உருவாகக் கூடும் என்று கூறப்படுகிறது.
போர் ஓவியங்கள் :
வீட்டில் போர் ஓவியங்களை வைத்திருக்க கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும். மேலும், மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற ஓவியங்களை வைத்திருக்க கூடாது.
தாஜ்மஹால்:
வாஸ்துபடி தாஜ்மஹால் எந்த வடிவமாக இருந்தாலும் உங்கள் வீட்டில் அதை வைக்க கூடாது. இது அடக்கம் செய்யப்பட்ட இடம்’மற்றும் அபசகுனமாக கருதப்படுகிறது.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |











