வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெட்டுடையார் காளியம்மன் வரலாறு

Updated On: March 25, 2025 1:43 PM
Follow Us:
vettudaiyar kaliamman temple history in tamil
---Advertisement---
Advertisement

வெட்டுடையார் காளியம்மன் வரலாறு – vettudaiyar kaliamman temple history in tamil

நமது பதிவில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களை பற்றி அறிந்து வருகின்றோம். அதாவது அந்த ஆலையத்தின் சிறப்பு, தோற்றம், புகழ், அந்த ஆலயம் திறக்கும் நேரம், அமைந்துள்ள இடம், அங்கு நடைபெறும் திருவிழாக்கள் போன்ற முழுமையான தகவல்களை வழங்கி வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது வெட்டுடையார் காளியம்மன் கோயிலின் வரலாறை பற்றியது.

தோற்றம்:

முன்னொரு காலத்தில் சிவகங்கையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கொல்லங்குடி கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு பக்தருடைய கனவில் அய்யனார் தோன்றி தான் ஒரு ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூசிக்குமாறும் கூறினாராம்.

அந்த பக்தரும் மறுநாள் காலையில் தற்போது கோவில் இருக்கும் இடத்தில் இருந்த இடத்தில் ஒரு ஈச்சமரத்தின் அடியில் தோண்டினார். அப்போது கோடாரியால் வெட்டியதும் சிலை ஒன்று தென்பட்டதை அடுத்து அய்யனார் சிலை வெளியே எடுத்தனர். கோடாரியால் பட்ட வெட்டோடு அய்யனார் தோன்றியதால் “வெட்டுடைய அய்யனார் “ என்ற நாமத்தோடு கோவில் அமைத்து பூஜை செய்து வந்துள்ளனர்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பண்ணாரி மாரியம்மன் கோவில் வரலாறு..!

வெட்டுடையார் காளியம்மன் தோற்றம்:

வீரமங்கையான வேலு நாச்சியாரை ஆங்கிலேயர்கள் துரத்தி கொண்டு சென்றனர். சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி அருகேயிருக்கும் அரியாக்குறிச்சியிலிருக்கும் காட்டுப்பகுதிக்குள் தன்னுடைய படைகளுடன் தப்பித்து சென்றுவிடுகிறார் வேலு நாச்சியார்.

அப்போது அந்த ஏடத்தில்  12 வயது உடையாள் என்ற சிறுமி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தாள். அந்த இடத்திற்கு ஆங்கிலேயர்கள் வந்தார்கள். படை தளபதி அந்த சிறுமியை கூப்பிட்டு, ‘நீ வேலு நாச்சியாரை பார்த்தாயா? அவர்கள் எந்தப் பக்கமாகப் போனார்கள்’ என்று கேட்கிறார்.

அதற்கு அந்த சிறுமி நான் வேலு நாச்சியாரை பார்த்தேன் ஆனால் அவர் எந்த பக்கம் சென்றார் என்பதை என்னால் கூற முடியாது என்று கூறிவிட்டாள். இதனை கேட்டதும் அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. அவர் எங்கே சென்றாள் என்பதை கூறவில்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என்று கூறியுள்ளார். இதனை கூறியும் என்னை வெட்டி கொள் ஆனால் அவர் எங்கே சென்றார் என்பதை என்னால் கூறமுடியாது. இதனை கேட்டதும் அந்த சிறுமியை இரண்டாக வெட்டி விட்டனர்.

இந்த செய்தியை அறிந்ததும் வேலு நாச்சியார் அந்த இடத்திற்கு வந்து காளியம்மன் கோயிலை கட்டினார். இந்த கோவில் தான் இன்று வரை வெட்டுடையார் காளியம்மனாக இருக்கிறது. அந்தப் பெண் தெய்வமே இந்த வெட்டுடையார் கோவிலில் காளிதெய்வமாக வந்து அமர்ந்தாள் என்கின்றனர்.

தெய்வ சிலையின் அமைப்பு:

வெட்டுடைய அய்யனாருக்கு நேர் எதிரில் மேற்கு நோக்கியவாரு காளியம்மன் அருள்பாலிக்கிறாள். எட்டு திருகரத்துடன், வலது காலை மடக்கி இடது காலை அரக்கன் மீது ஊன்றி கருணை பொங்கும் முகத்தோடு காட்சியளிக்கிறாள். பக்தர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கிறாள்.

நீதி வழங்கும் காளியம்மன்:

இக்கோவிலில் காளி அநீதிக்கு உடனடியாக தண்டனை அளிக்கிறாள். நல்லவர்களுக்கு தீமைகளை விளைவிப்பார்கள், திருடுபவர்கள், ஏமாற்றுபவர்கள், கற்பழிபவர்கள் என எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும் நீதிமானாக விளங்குகிறாள் காளியம்மன்.

மேலும் இந்த கோவிலில் காசு வெட்டி போடுதல் என்கிற வழக்கம் உள்ளது. ஒருவருடைய கோரிக்கை நியாயமானதாக இருந்து இந்த காளி தெய்வத்திடம் முறையிட்டால் நிச்சயம் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பாராம், மற்றபடி பிரிந்த கணவன் மனைவி ஒன்றுசேர, பிள்ளைவரம் கிடைக்க, நல்ல கணவன் அமைய என அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுகிறாள் இந்த வெட்டுடையார் காளி.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அருள்மிகு சதுரகிரி மகாலிங்கம் கோவில் வரலாறு..!

கோவில் திருவிழாக்கள்:

இந்த கோயிலில் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுமாம். ஆடிப் பெருக்கில் பூச்சொரிதல் நடைபெறுமாம். தினமும் அன்னதானம் நடைபெறுமாம்.

மேலும் பௌர்ணமி பூஜை, நவராத்ரி, ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமை தோறும் விழாக்கள் கொண்டாடுகின்றனர்.

கோயில் அமைந்துள்ள இடம்:

  • சிவகங்கை அருகே 10 கி.மீ. தொலைவில் கொல்லங்குடி.

கோயில் திறக்கப்படும்:

  • காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை. பௌர்ணமியில் இரவு 10 வரை திறந்திருக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now