Vinayagar Kavasam Lyrics in Tamil | விநாயகர் கவசம் வரிகள்
பொதுவாக இந்து சமயத்தின் முழுமுதற் கடவுள் என்றால் அது விநாயகர் தான். அதனால் எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்னால் இவரை முதலில் வணங்கிவிட்டு செய்ய வேண்டும் என்பார்கள். அதேபோல் இவரை வணங்கிவிட்டு தொடங்கும் எந்த ஒரு காரியமும் சிறப்பாக முடியும். ஆனால் அதற்கு இவரின் முழு அருளும் ஆசிர்வாதமும் நமக்கு இருக்க வேண்டும். அவரின் முழு அருளும் ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நாம் அவருக்கு மனமார பூஜை செய்ய வேண்டும்.
அவ்வாறு பூஜை செய்யும் பொழுது அவரின் போற்றிகளை, கவசம், மந்திரம் ஆகியவற்றை பாடி அவரின் மனதை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். எனவே தான் இன்றைய பதிவில் முழுமுதற் கடவுளான விநாயகரின் கவச வரிகளை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து விநாயக பெருமானின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.
Vinayagar Kavasam in Tamil:
தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்க
வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க
வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தரதேக மகோற்கடர் தாம் அமர்ந்து காக்க
விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க
புருவந் தம்மைத் தளர்வின் மகோதரர் காக்க
தடவிழிகள் பால சந்திரனார் காக்க !!
உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்க
கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
காலங் கணக்கிரீடர் காக்க
நவில் சிபுகம் கிரிசை சுதர் காக்க
நனிவாக்கை விநாயகர் தாம் காக்க
அவிர்நகை துன்முகர் காக்க
வளர் எழில் செஞ் செவி பாச பாணி காக்க
தவிர்தலுறாது இளங் கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்திதார்த்தர் காக்க !!
முகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு காக்க
காமுரு பூமுகந்தன்னைக் குணேசர் நனி காக்க
களங் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்கு கந்த
பூர்வசர் தாம் மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசர் காக்க
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
அகத்தினைத் துலங்கு ஏரம்பர் காக்க !!
ஸ்ரீ ராமரின் அஷ்டோத்திர வரிகள்
பக்கங்கள், தொண்டை காக்க
பக்கம் இரண்டையுந் தராதரர் காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரர் காக்க
விளங்கிலிங்கம் வியாள பூடணர் தாம் காக்க
தக்க குய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க
சகனத்தை அல்லல் உக்க கணபர் காக்க
ஊருவை மங்கள மூர்த்தி உவந்து காக்க
முழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள் காக்க
தாள்முழந்தாள் மகாபுத்தி காக்க
இரு பதம் ஏகதந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க
முன்கையை வணங்குவார்நோய்
ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல் பதும அந்தர் காக்க
கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க !!
திக்குகள் அனைத்திலிருந்தும் காக்க
அக்னியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர் தென் திசைகாக்க
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க
விக்கினவர்த்தனர் மேற் கென்னுந் திக்கதனிற் காக்க
வாயுவிற் கச கர்ணர் காக்க
திகழ்உதீசி தக்கநிதி பர் காக்க
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க !!
பகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்க
ஏகதந்தர் பகல் முழுதும் காக்க
இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
ஓகையின் விக்கினகிருது காக்க
இராக்கதர் பூதம் உறு வேதாளம்
மோகினிபேய் இவையாதி உயிர்திறத்தால்
வருந்துயரம் முடிவிலாத
வேகமுறு பிணி பலவும் விலக்கு பாசாங்குசர் தாம் விரைந்துகாக்க !!
மானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்க
மதிஞானம் தவம் தானம் மானம் ஒளி
புகழ்குலம் வண்சரீரம் முற்றும்
பதிவான தனம் தானியம் கிருதம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க
காமர் பவுத்திரர் முன்னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க !!
படிப்போர் நோயற்றவராய் வாழ்வார்
வென்றி சீவிதம் கபிலர் காக்க
கரியாதி எல்லாம் விகடர் காக்க
என்று இவ்வாறிதுதனை முக்காலமும்
ஓதிடினும் பால் இடையூறொன்றும்
ஒன்று உறா முனிவர் அவர்காள் அறிமின்கள்
யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங்கவர்தேகம் பிணியற
வச்சிர தேகம் ஆகி மின்னும் !!
விநாயகரின் கவசம் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |