வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எந்த கிழமையில் எந்த கலர் ட்ரெஸ் அணிய வேண்டும்..

Updated On: March 11, 2025 6:21 PM
Follow Us:
which day which colour dress we wear in tamil
---Advertisement---
Advertisement

எந்த கிழமையில் எந்த கலர் டிரஸ் அணிந்தால் வெற்றி

பொதுவாக ஆடை என்பது நமது விருப்பத்தின் படி தான் இருக்கும். ஒரு கடைக்கு சென்றால் கூட நமக்கு எந்த நிற ஆடை பிடித்திருக்கிறதோ அந்த ட்ரஸை தான் எடுப்போம். நாம் அணிந்திருக்கும் ஆடையை பொறுத்து தான் நமக்கு தைரியம் மற்றும் ஆளுமை திறன் போன்றவை காணப்படும்.  அது போல நம்முடைய நிறம் மற்றும் அளவுக்கு ஏற்றது போல் தான் ஆடைகளை தேர்வு செய்வோம்.

அது போல சில பேருக்கு செண்டிமெண்ட் ட்ரெஸ் என்று இருக்கும், அந்த ட்ரஸை யார் கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். லக்கி ட்ரெஸ் என்று இருக்கும். இந்த லக்கி ட்ரசை நாம் பரீட்சை அல்லது Interview-க்கு செல்லும் போது அந்த ட்ரஸை தான் அணிந்து செல்லுவோம். ஏனென்றால் அந்த ஆடையை அணிந்து செல்லும் போது நமக்கு வெற்றி கிடைக்கும். அந்த வகையில் இந்தத்த கிழமைகளில் இந்த நிற ஆடைகளை அணிந்தால் வெற்றி கிடைக்குமாம். அதனை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.

Which Day Which Colour Dress We Wear in Tamil: 

ஆன்மிகத்தில் நம் அணிய கூடிய ஆடைகளுக்கு ஏற்றவாறு பலன்கள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதனை பற்றி தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

கிழமை  நிறங்கள் 
ஞாயிறு ஆரஞ்சு
திங்கள் வெள்ளையில் சிவப்பு
செவ்வாய் சிவப்பு
புதன்  பச்சை 
வியாழன் மஞ்சள்
வெள்ளி வெள்ளையில் நீலம்
சனி கருநீலம் அல்லது கருப்பு

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமானது மங்களகரமானதாக இருக்கிறது. இதனால் நீங்கள் செய்யும் செயல்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைஏற்படுத்தும்.

வெள்ளை மற்றும் சிவப்பு நிறமானது நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். மேலும் வெள்ளை நிறமானது தூய்மையை உணர்த்துகிறது.

சிவப்பு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். மேலும் தைரியத்தை கடவுக்காக கூடிய நிறமாக இருக்கிறது.

பச்சை நிறமானது வளர்ச்சியை குறிக்கிறது. கருப்பு  நிறம் சுறுசுறுப்பாக செயல்படுவதை குறிக்கிறது.

நாட்களும் பயன்படுத்தக்கூடாத உடையின் நிறங்களும்..!

எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த கடவுளை வணங்க வேண்டும்:

  • ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வணங்கலாம். இவருக்கு விரதம் இருந்து, அபிஷேகம் செய்வதால் வாழ்க்கையில் மிகுந்த பலனை கொடுக்கும்.
  • திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாக இருக்கிறது, அதனால் இந்த நாளில் பால் மற்றும் சர்க்கரை, அரிசி போன்றவற்றை வைத்து வணங்க வேண்டும்.
  • செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு உகந்த நாளாக இருக்கிறது, அதனால் இந்த நாளில் ராகு நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.
  • புதன்கிழமை கிருஷ்ணருக்கு உகந்த நாளாக இருக்கிறது, அதனால் இந்நாளில் இவருக்கு துளசியை வைத்து வழிபட வேண்டும்.
  • வியாழக்கிழமை குருவிற்கு உகந்ததாக இருக்கிறது. இந்த நாளில் கொண்டக்கடலை அவித்து குருவிற்கு வழிபட்டால் உங்களின் வாழ்க்கையில் சீரும் சிறப்புமுமாக இருப்பீர்கள்.
  • வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்கு உரிய நாளாக இருக்கிறது, இந்த நாளில் இவரை வழிபடுவதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும்.
  • சனிக்கிழமை ஆஞ்சேநேயருக்கும் உரிய நாளாக இருக்கிறது, ஆகையால் இந்நாளில் விரதம் இருந்து இவரை வழிபடுவதன் மூலம் அவரின் அருள் முழுமையாக கிடைக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now