அட்சய திருதியை 2025 கோடிகளில் புரள போகும் ராசிகள்
அட்சய திருதி ஆனது ஒரு மங்களகரமான விஷயமாக இருக்கிறது. இந்த நாளில் நகை வாங்கினால் நகை சேரும் என்பது ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அதனால் இந்த நாளில் நகை கடையில் கூட்டம் அள்ளும். அதுமட்டுமில்லாமல் சில ராசிக்காரர்களுக்கு இந்த அட்சய திருதி ஆனது ரொம்ப விஷேசம் என்றே கூறலாம். ஏனென்றால் இந்த நாளில் 6 யோகங்களான கஜகேசரி ராஜயோகம், மாளவ்ய ராஜயோகம், ரவியோகம், சதுர்கிரக யோகம், சர்வார்த்த சித்தி யோகம் மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகம் போன்றவை ஒன்றாக இணைகிறது. இந்த பார்வை ஆனது 12 ராசிகளிலும் பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த அபதவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
சிம்மம்:
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த 6 யோகங்களானது அனைத்து விதத்திலும் நன்மையை தரக்கூடியது என்றே கூறலாம். இந்த நேரத்தில் தொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த லாபத்தை விட அதிகமாக கிடைக்கும். நீங்கள் ஏதேனும் தொழிலில் புதியதாக திட்டம் வைத்திருந்தால் அதனை செய்வதற்கு இந்த நேரம் உகந்தாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் சம்பள உயரவும் கிடைக்கும். இதன் மூலம் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆசைப்பட்டதை வாங்கி தருவீர்கள். அதுமட்டுமில்லாமல் உங்களுடைய நீண்ட நாள் ஆசையையும் நிறைவேற்றி கொள்வதற்கான நேரமாக இருக்கும்.
50 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் ராஜயோகம் இதனால் 3 ராசிகளுக்கு யோகம் அடிக்க போகுது
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த 6 யோகங்களானது உங்களுக்கு சிறப்புடையதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். மேலும் உங்களுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆசைப்பட்டதை வாங்கி தருவீர்கள். இதனால் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு ஆனது அதிகரிக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த 6 யோகங்களானது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் பதவி உயர்வும் கிடைக்கும், இதனால் சம்பள உயர்வு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய செல்வ நிலையானது அதிகரிக்கும். இதனால் வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பானது அதிகரிக்கும். உங்களுக்கு பொறுப்புகள் ஆனது அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் யாரேனும் வெளிநாடு செல்ல வேண்டும் நினைத்தாலும் சரி அல்லது அதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தாலும் சரி அந்த வாய்ப்பானது கிடைக்கும். நீங்கள் எல்லா செயல்களையும் முழு நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |