Avoid These 5 Food Combinations With Curd In Tamil
கோடை காலம் ஆரம்பித்துவிட்டதால் இந்த காலங்களில் நாம் உணவு விஷயத்தில் அதிகமாகவே கவனம் செலுத்துவோம். கோடை காலத்தில் நாம் மிகவும் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வோம். தினமும் தயிர் சாப்பிடுவதும் நம் உடலை மிகவும் குளுமையாக வைத்துக்கொள்வோம். அப்படி தயிர் சாப்பிடும் போது எந்தெந்த உணவுகளை நாம் சாப்பிட கூடாது என்று தெரியுமா? அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் இந்த பதிவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
நாம் தினமும் தயிர் எடுத்துக்கொள்ளும் போது இந்த உணவுகளை மட்டும் சேர்த்துக்கொள்ளாதீர்கள் ஏனென்றால் இது உங்கள் உடல் நிலையை மோசமாகிவிடும். அது என்ன என்ன உணவுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
தினமும் தயிர் சாப்பிடுவதால் பல நன்மைகள்
தயிருடன் எந்தெந்த உணவுகளை சேர்க்க கூடாது:
மீன்:
தயிர் மற்றும் மீன் இரண்டும் ஒன்றாக கலக்க கூடாது. மீனில் புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இருப்பினும், தயிர் குளிர்ச்சியான தன்மையைக் கொண்டிருப்பதால், இந்த இரண்டின் பண்புகளும் வெவ்வேறாக இருக்கிறது. தயிர் மற்றும் மீன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று அசௌகரியம் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும். ஆயுர்வேதத்தின்படி, இரண்டையும் ஒன்றாகச் சாப்பிட்டால் உடலில் வெப்பம் மற்றும் குளிர் சமநிலையை மோசமாக்குகிறது. இதனால், தோல் சிவப்பு, தடிப்புகள் போன்ற பாதிப்புகள் காணப்படும். மீன் சாப்பிட்ட பிறகு, குறைந்தது இரண்டு மணி நேர இடைவெளியில் தயிர் சாப்பிட வேண்டும்.
மாம்பழம்:
மாம்பழத்தை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் நச்சுக்கள் ஏற்படக்கூடும். மாம்பழம் உடலை சூடுபடுத்தும், தயிர் குளிர்ச்சியை தரும். எனவே இரண்டின் பண்புகளும் எதிர்மாறாக இருப்பதால் இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சருமத்தில் ஒவ்வாமை ஏற்படலாம். மாம்பழம் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கழித்து தயிர் சாப்பிடுவது நல்லது.
பால்:
பால் மற்றும் தயிரை ஒன்றாக சாப்பிட கூடாது. தயிர் மற்றும் பால் இரண்டும் பால் பொருட்கள் என்றாலும், அவற்றை ஒன்றாக சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும். பால் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். தயிர் எளிதில் ஜீரணமாகும். இந்த வெவ்வேறு செரிமான செயல்முறைகள் வயிற்றில் வாயு மற்றும் அமிலத்தன்மையை அதிகரிக்கின்றன. உடலில் ஏற்படும் இந்த அசௌகரியம் சருமத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. சருமம் எண்ணெய் பசையாக மாறி முகப்பரு ஏற்படலாம். ஆயுர்வேத நிபுணர்கள் இந்தக் கலவையை முற்றிலுமாக தடை செய்துள்ளனர். பால் குடித்த பிறகு, சிறிது நேரம் கழித்து தயிர் சாப்பிட வேண்டும்.
எண்ணெய் உணவுகள்:
பரோட்டா, பூரி போன்ற எண்ணெய் உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிடுவது வழக்கம். இந்த கலவை செரிமானத்தை மெதுவாக்குகிறது. தயிர் விரைவாக ஜீரணமாகும் தன்மையைக் கொண்டுள்ளது. இது வீக்கம் மற்றும் சோம்பலை ஏற்படுத்தும். இது சருமத்தில் எண்ணெய் பசை முகப்பருவுக்கு வழிவகுக்கும். எண்ணெய் பசை நிறைந்த உணவுகளை உண்ணும்போது தயிரைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக, லேசான உணவுகளுடன் தயிர் சாப்பிட்டால், உடல் சுகமாக இருக்கும். இது சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
வெங்காயம்:
வெங்காயம் மற்றும் தயிர் கலந்த ரைத்தா பலரின் விருப்பமான உணவாகும். இந்த கலவையானது உடலில் உள்ள வெப்பம் மற்றும் குளிர் சமநிலையை மோசமாக்குகிறது. வெங்காயம் சூடான தன்மையைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் தயிர் உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது. இவை இரண்டும் இயற்கையில் எதிர்மாறாக இருப்பதால், செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். தோல் வெடிப்புகள் மற்றும் தடிப்புத் தோல் அழற்சி பிரச்சனைகள் ஏற்படும்.
தயிரை காலையிலோ அல்லது மதியம் சாப்பிடுவது சிறந்தது. இரவில் சாப்பிடுவது சளி அபாயத்தை அதிகரிக்கும். தேன், நெல்லிக்காய் மற்றும் பருப்புடன் தயிர் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |