Can Diabetics Fast In Ramadan in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! தினம் ஒரு பயனுள்ள தகவலை நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். பொதுவாக இப்போது இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு தொடங்கிவிட்டது. அதாவது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு மார்ச் 12 முதல் துவங்கி உள்ளது. இந்த தேதியில் இருந்து அவர்கள் நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள்.
அதிகாலையில் மட்டும் சாப்பிட்டுவிட்டு, அன்று முழுவதும் விரதம் இருப்பார்கள். இந்த ரமலான் நோன்புவை அனைவருமே கடைபிடிக்க வேண்டும். ஆனாலும் இந்த ரமலான் நோன்புவிலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் இருக்கின்றன. அது என்னவென்று தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும். சரி வாங்க நண்பர்களே இன்று என்ன பதிவை பற்றி பார்க்கப்போகிறோம் என்று பார்க்கலாம்.
ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் இந்த விதிமுறைகளை Follow பண்ணுங்க..
சர்க்கரை நோயாளிகள் ரமலான் நோன்பு இருக்கலாமா..? இருக்க கூடாதா..?
சர்க்கரை நோயாளிகள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், சர்க்கரை நோயாளிகள் சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதான் நலம் ஆரோக்கியமாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சரியான நேரத்தில் உணவு எடுக்காவிட்டால் அவர்களுக்கு Low Sugar போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இப்போ சிலருக்கு ஒரு சந்தேகம் எழலாம் இப்படி இருக்கையில் இஸ்லாமியர்கள் எப்படி ரமலான் நோம்பி எடுப்பார்கள் என்று. இந்த கேலவிக்கான பதிலை இன்றைய பதிவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
சர்க்கரை நோயாளிகள் உணவு ஆரோக்கியமாக எடுத்து கொள்ள வேண்டும், அதேசமயத்தில் அவர்கள் சில ஆன்மீக செயல்களிலும் ஈடுபட வேண்டும். இதற்கு ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு வழிபாடு முறை பின்தொடரப்படுகிறது. ஆனால் எல்லா மதங்களிலும் உடல் நலம் சரி இல்லாதவர்கள் உபவாசம் இருப்பதில் கட்டாயம் இல்லை என்ற கொள்கையும் உள்ளது.
பொதுவாக குர்ஆனின் புனித நூலின் படி, கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ரமலான் நோன்பிலிருந்து விதி விலக்கு அளிக்கப்படுகிறது.
ரம்ஜான் நோன்பு எடுக்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..
இருந்தாலும் நீரிழிவு நோயாளிகள் ஒவ்வொரு 4-6 மணி நேரத்திற்கும் ஒருமுறை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் ரமலான் நோன்பானது 11- 16 மணிநேரம் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.
இப்படி இருக்கையில் சர்க்கரை நோயாளிகள் எப்படி நோன்பு இருக்க முடியும். மேலும் சர்க்கரை நோயாளிகள் நோன்பு இருந்தால் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். அதை என்னவென்று இப்போது பார்க்கலாம்.
- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைகிறது.
- இரத்த குளுக்கோஸ் அளவை பெரிய அளவில் பாதிக்கும்.
- நீரிழிவு கெட்டோஅசிடோசிஸையும் நீங்கள் அனுபவிக்கலாம்.
- போதுமான அளவு குளுக்கோஸ் கிடைக்காவிட்டால், உடல் ஆற்றலுக்காக கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது.
- இதனால் கீட்டோன்கள் எனப்படும் கழிவுப் பொருட்கள் உருவாகிறது.
- இது இரத்தத்தை அமிலமாக்குகிறது.
- மேலும் நோன்பு இருந்தவர்கள் விரதம் முடிந்த உடன் அதிகமாக சாப்பிட்டால், அது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்க செய்கிறது.
- தண்ணீர் குடிக்காமல் நோன்பு இருப்பதால் அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.
எனவே சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் புனித நூலான குர்ஆனின் படி, கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ரமலான் நோன்பிலிருந்து விதி விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அவர்களின் மருத்துவரின் ஆலோசனை பெற்று ரமலான் நோன்பு இருக்கலாம்.
ரமலான் நோன்பு காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்..
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |