நாய் கடித்தால் என்னென்ன சாப்பிட கூடாது | Dog Bite Food to Avoid in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் நாய் கடித்தால் என்னென்ன உணவு பொருட்களை சாப்பிட கூடாது என்று தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே எல்லா இடங்களிலும் நாய்களின் அட்டகாசங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். அதிலும் வெறிநாய்கள் என்றாலே அதில் ஒரு பயம், சில தெருக்களில் உள்ள நாய்கள் சிங்கத்தை போல யாரும் வர மாட்டார்களா என்று வேட்டை ஆடுவதற்கு காத்திருக்கும்.
இதில் வெறிநாய் எது என்றும் சாதாரண நாய் எது என்றும் கணிக்கவே முடியாது. நாய்கடிகளுக்கு மருந்துகள் அதிகமாக இருந்தாலும், சிலருக்கு நாய் கடியின் காயம் அதிகமாக இருந்தாலும் பிழைப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். நாய் கடித்தால் கவனமாக இருப்பது மிகவும் அவசியம், நாய் கடியின் காயம் பயங்கரமாக இருந்து கவனிக்காமல் வந்தால், அவர்களும் விலங்குகளை போல மாறிவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது நாய் சாப்பிடுவது போல சாப்பிடுவது, நாய்களின் குணங்கள் பாதி நாய் கடித்த மனிதனையும் மாற்றிவிடும். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் தண்ணீர் குடிக்க மாட்டர்கள் அந்த வகையில் நம் பதிவில் நாய் கடித்தால் என்னென்ன சாப்பிடக்கூடாது என்னென்ன செய்யக்கூடாது என்பதை நம் பதிவில் தெளிவாக காணலாம் வாங்க.
உலகில் நாய்களே இல்லாத நாடு எது என்று உங்களுக்கு தெரியுமா..?
நாய் கடித்தால் என்ன செய்வது:
- வீட்டில் இருக்கும் நாயாக இருந்தாலும் சரி அல்லது தெருவில் இருக்கும் நாயாக இருந்தாலும் சரி உங்களை கடித்துவிட்டால், அதை அலட்சியப்படுத்தாமல் ஒரு காட்டன் துணிகளை எடுத்து நாய் கடித்த இடத்தை சுத்தம் செய்த்துவிட்டு, இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவது நல்லது. அடுத்ததாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அதற்கான ஊசிகளையும் போடுவது மிகவும் அவசியம்.
- மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசிகளை போடுவது நல்லது. நாய் கடி முழுமையாக குணமாகும் வரை உடலிலும், உணவுகளிலும் கட்டுப்பாடுகள் அதிகம் தேவை. நோய்த்தொற்றின் அறிகுறிகளை அடிக்கடி கவனித்து கொள்வது மிகவும் அவசியம்.
- நாய் கடித்த பிறகு உடலில் பல விதமான கோளாறுகளும்வரு கின்றன, வாந்தி, காய்ச்சல், நாம் சாப்பிடும் உணவுகளை உடலில் எடுத்து கொள்ளாமல் பல விதமான பிரச்சனைகளை ஏற்படுகிறது.
- நாய் கடித்தவுடன் உடனடியாக நாய் கடித்த இடத்தைசுத்தம் செய்து, சோப் பயன்படுத்தி நீரில் குறைந்தது பத்து முறை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் தான் நோய் தொற்று எளிதில் பரவாது. இரத்தம் அதிகமாக வந்தால் துணியை வைத்தது துடைத்து இரத்தம் வெளியேறாமல் இருக்க கட்டு போட வேண்டும். அதன் பிறகு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டு கொண்டு மருத்துவர்கள் கூறிய முறையில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- முடிந்தவரை குழந்தைகள் மற்றும் மற்றவர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்க்க வேண்டும்.
நாய் கடித்தால் சாப்பிட கூடாத உணவுகள் | Nai Kadithal Enna Sapida Kudathu:

- நாய் கடித்தால் பால், பால் சார்ந்த உணவுகள், காரணமான உணவுகள், கொத்தமல்லி கலந்த உணவுகள், உருளைக்கிழங்கு, பருப்பு வகை உணவுகள், தக்காளி, இறைச்சி வகைகளை சேர்ந்த மீன், கோழி, ஆடு, ஆல்கஹால் போன்ற இறைச்சிகளை சாப்பிடக்கூடாது. இது போன்ற உணவுகளை தவிர்ப்பதில் கவனம் அதிகம் தேவை.
- நாய் கடிக்கு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம், இவர்கள் தண்ணீர் அதிகமாக குடித்தால் உயிர் பிழைத்து கொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
நாய் கடித்தால் எத்தனை ஊசி போட வேண்டும்:
நாய் கடித்த 3,5,7,14,28-வது போன்ற நாட்களில் 5 தவணைகளாக ரேபிஸ் தடுப்பூசி போடப்படுகிறது. காயம் கடுமையாக இருக்கும் பட்சத்தில் 6-வது ஊசியாக 90-வது நாட்களில் போட்டு கொள்ளலாம். இந்த ஊசிகளை அரசு மருத்துவமனையிலே இலவசமாக போடப்படுகிறது.
வீட்டு நாய் வளர்ப்பவர்களும ரேபீஸ் தடுப்பூசியை போட வேண்டும். நாய்க்குட்டிக்கு 3 மாதம், 4 மாதம் முடிந்ததும் 2 தவணைகள் தடுப்பூசி நாய்க்குட்டிக்கு போட வேண்டும். அடுத்ததாக ஆண்டுக்கு ஒருமுறை பூஸ்டர் ஊசி போட வேண்டும்.
நாய் துரவுத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா..?
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |













