உங்களுக்கு இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா ? சில இயற்கை வழி முறைகள்
இரட்டை குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்(twins baby pregnancy in tamil)..? குழந்தை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் ஒரு வீட்டில் ஒரு பெண் தாய் ஆகிறாள் என்ற செய்தியை கேட்கும் போது அந்த வீட்டில் இருக்கும் அனைவருமே மிகவும் குஷியாக இருப்பார்கள். அதுவும் இரட்டை குழந்தை பிறக்கப்போகிறது என்றால் சொல்லவே வேண்டாம், அதை விட சந்தோஷம் தரக்கூடிய விஷயம் வேறு எதுவும் இல்லை.
ஆமாம் இப்போது 10-ல் 4 பேர் இரட்டை குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றனர், ஆனால் அனைவருக்குமே இந்த அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
இருந்தாலும் பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் இப்போது இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்பை அதிகரிக்கும் சில விஷயங்களை கண்டுபிடித்துள்ளனர்.
பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்!
இரட்டை குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும் – வழி முறைகள்:

சர்க்கரைவள்ளி கிழங்கு:
தங்களுக்கு இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா..? அப்போ தினமும் அதிகளவு சாப்பிட்டு வாருங்கள், சர்க்கரைவள்ளி கிழங்கில் சில வகை ரசாயன கலவை உள்ளதாம், எனவே இரட்டை குழந்தை பிறக்க (twins baby pregnancy in tamil) ஆசைப்படுபவர்கள் சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உள்ளதாம்.
முன்பு இவற்றை வலுவான கர்ப்பபைக்கும் மற்றும் பல்வேறு கர்ப்பபை பிரச்சனைக்கும் மருந்தாக கொடுக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
30 வயதுக்கு மேல்:
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கருவுறும் போது இரட்டை குழந்தை பெரும் வாய்ப்பு அதிகம் இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது 30 வயதுக்கு மேல் ஒரு பெண் கருவுறும் போது உடலில் FSH-யின் அளவு அதிகமாக இருக்கும். அப்போது கருப்பையில் ஒன்றுக்கு மேற்பட்ட கருமுட்டைகள் உருவாகிவிடும். இதனால் இரட்டை குழந்தை பிறக்க (twins baby pregnancy in tamil) அதிக வாய்ப்பு உள்ளது.
ஃபோலிக் ஆசிட்:
ஃபோலிக் ஆசிட் மாத்திரையை அதிகம் உட்கொள்ளும் பெண்களுக்கு இரட்டை குழந்தை அதிக வாய்ப்பு உள்ளது.
இரட்டை குழந்தை பிறக்க (twins baby pregnancy in tamil) மருத்துவர்களால் கருத்தரிக்க பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 400 மைக்ரோகிராம் கணக்கில் தந்து பின் கருதரித்ததும் 600 மைக்ரோகிராம் ஆக அளவை அதிகரித்து எடுத்துக்கொள்ள சொல்வார்கள்.
இந்நிலை பெரும்பாலும் இரட்டை குழந்தை ஊக்குவிக்கும் என்று ஆராய்ச்சி சொல்கிறது.
பிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..! முழு வளர்ச்சி அட்டவணை
கருத்தடை மாத்திரை:
கருத்தடை மாத்திரையை எடுத்துக்கொள்ளும் பெண்கள், அந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதை கைவிட்ட உடனே கருவுற முயற்சித்தால் இரு கரு உருவாக வாய்ப்பு இருக்கிறது.
காரணம் மருந்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருப்பையானது, மருந்தை நிறுத்திய உடனே தடுமாறும். ஒரே நேரத்தில் இரண்டு கருமுட்டைகளை வெளியிடும். இதனால் இரு குழந்தைகள் சாத்தியமாகும்.
செயற்கை கருவுறும் முறை:
செயற்கை கருவருத்தலின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறக்க வேண்டுமெனில் செயற்கை கருத்தரிப்பு முறைகள் (IVF) மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை கருப்பையில் செலுத்துவது ஒரு வழியாகும்.
குறிப்பு:
இரட்டை குழந்தை (twins baby pregnancy in tamil) பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் சிறந்த மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர்களது வழிமுறைகளை பின்பற்றவும்.
மருத்துவரது ஆலோசனைகள் அனைத்தையும் நீங்கள் பின்பற்றினாலே போதும், இரட்டைகுழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.
| Twins baby names in tamil..! |














