வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம்..!

Updated On: February 2, 2026 5:54 PM
Follow Us:
எப்படி குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்
---Advertisement---
Advertisement

குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் | How to Choose Names For New Born Baby | Pirantha Kulanthai Peyar Vaipathu Eppadi

வணக்கம், இந்த பகுதியில் எப்படி பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்பதை காண்போம். நிறைய பேருக்கு குழந்தை பிறந்தவுடன் வரும் முதல் குழப்பங்கள், என்ன பெயர் குழந்தைக்கு வைக்கலாம் என்பதுதான்.

இதில் நிறைய பெற்றோர்கள் தங்களின் குழந்தையின் பெயர் ஜாதக ரீதியாக இருக்க வேண்டும் என்றும், சில பெற்றோர்கள் தங்களின் தாத்தா, பாட்டி, தமிழ் பெயர், குலதெய்வத்தின் பெயர் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்குள் நாம் போகவில்லை.

குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்.? 

குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்

பலருக்கும் இருக்க கூடிய கேள்வி குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் என்பது தான். சில பேர் முன்னோர்களின் பெயர்களை வைப்பார்கள். சில பேர் ஜாதகம் பார்த்து பெயர்களை வைப்பார்கள். நம்முடைய குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் நம்முடைய குழந்தைக்கு பெயர் வைப்பதை பொறுத்து தான் அவர்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. அதனால் எப்படி பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தால் கல்வி, செல்வம், புகழ், உயர்வு, நோயின்மை ஆகியவை கிடைக்கப்பெறும் என்பதை இப்போது காண்போம்.

ஒரு குழந்தை பிறக்கிறது, ஆணோ, பெண்ணோ அதற்கு பெற்றோர்கள் எந்த பெயர் வைத்தாலும் அதில் தெய்வத்தின் புனை பெயர் அல்லது இயற்கையின் புனை பெயர் நிச்சயமாக இருக்க வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தெய்வத்தின் பெயரை நேரடியாக வைக்க வேண்டாம். உதாரணத்திற்கு ஜெயலட்சுமி, ஜோதிலட்சுமி என்று வைக்க வேண்டாம்.

சரி எப்படி பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்..?

  • மூன்று மிக முக்கியமான விஷயங்களை பார்த்து நம் குழந்தைக்கு பெயர் வைக்கலாம்.
  • அதில் ஒன்று பிறந்த குழந்தையின் நட்சத்திர எழுத்து. இரண்டாவது தமிழ் சொற்களான நெடிலில் இருக்க வேண்டும், மூன்று ஒரே பெயரில் தான் முடிய வேண்டும்.
  • முதலில் குழந்தை பிறந்த நட்சத்திரத்தை நாம் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு எழுத்து இருக்கின்றது. அதையும் நாம் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • அதில் ஒன்றைத் தான் நாம் குழந்தைக்கு பெயராக வைக்க வேண்டும். பொதுவாக நட்சத்திரத்தில் பெயர் வைக்கும் போது நிறைய பாதகங்கள் இருக்காது.
  • இரண்டாவதாக தமிழில் குறில், நெடில் என்று இருக்கிறது. பெயர்களை வைக்கும்போது நெடில் பெயர்களை தான் வைக்க வேண்டும்.
  • அதிலும் பெயர்களில் முதலில், நடுவில், கடைசியில் கண்டிப்பாக நெடில் சொற்கள் இருக்க வேண்டும் மற்றும் அதன் பொருள் தெரிந்து வைக்க வேண்டும்.
  • உதாரணத்திற்கு ராமன் என்று வைத்து கொண்டால் முடியும் சொல் மண் என்று வருகின்றது. அதனால் அதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.
  • மூன்றாவதாக ஓரே பெயர் தான் குழந்தைக்கு வைக்க வேண்டும்.
  • ஆக ஒரு பெயரை தேர்ந்து எடுக்கும் போது மூன்று விஷயங்களை பார்த்து தேர்ந்து எடுங்கள். எல்லாம் நன்மைகளாக நடைபெறும்.

குழந்தைக்கு பெயர் வைக்கும்போது கவனிக்க வேண்டியவை:

ஜோதிடம் என்பது பல ஆயிரம் கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தி வரக்கூடிய ஒரு முறை ஆனால் எண் கணிதம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு தான் வந்து. இந்த எண் கணிதம் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தால் கூட சுலபமாக ஒரு மனிதனுடைய ஆயுளில் இருந்து, குணங்கள், வாழ்க்கையில் நடக்க இருக்கும் விஷயங்கள் வரை கணக்கிடக்கூடியதாக அதனை அமைத்துள்ளனர்.

சரி இந்த எண் கணிதம் எதனை அடிப்படையாக கொண்டு நமக்கு கொடுத்துள்ளனர் என்றால் இதுவும் கிரகங்களை அடிப்படியாக கொண்டு தான் நமக்கு கொடுத்துள்ளனர்.

ஆக 1-யில் இருந்து 9 வரை இருக்க கூடிய எண்கள் ஒவொரு கிறதோடு தொடர்புடைய கிரகங்கள் ஆகும். அவற்றில் ஒன்று என்பது சூரியனை குறிக்கும், இரண்டு என்பது சந்திரனை குறிக்கும், மூன்று என்பது குருவை குறிக்கிறது, நான்கு ராகுவை குறிக்கிறது, ஐந்து புதனை குறிக்கிறது, ஆறு சுக்கிரனை குறிக்கிறது, ஏழு கேது, எட்டு சனி, ஒன்பது செவ்வாய் ஆகிய ஒன்பது நவகிரங்களை கிரங்களை இந்த எண்களில் அடக்கி, நவகிரகங்களின் ஆற்றல் இந்த ஒவ்வொரு எண்களிலும் உள்ளது.

ஒன்றில் பெயர் அமைந்தால் அது சூரிய ஆதிக்கத்து உரியவராக இருப்பார்கள். உதாரணத்திற்கு அவர்கள் பிறந்த தேதி, பிறந்த மாதம், அவர்கள் பிறந்த வருடம் இவை அனைத்தையும் கூட்டி கழித்து கடையில் ஒன்று வந்தால் அவர்கள் சூரிய ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சூரியனை போன்று இருப்பார்கள். அவர்களுக்கு சூரியன் உச்சமாக இருப்பார், உயர் பதவிகளில் சிறந்து விளங்குவார்கள் என்று அனைத்துவிதமான பலன்களையும் இந்த எண் கணிதத்தில் சொல்லலாம். அது தான் நியூமராலஜி.

இருப்பினும் குழந்தைக்கு பெயர் வைப்பதாக இருந்தால் ஜாதகம் முறைப்படி பெயர் வைப்பது தான் மிகவும் சிறந்தது.

குழந்தை வளர்க்க சிரமப்படுகிறீர்களா.. கவலை வேண்டாம் -இத செஞ்சு பாருங்க

புதுமையான தமிழ் பெயர்கள்
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now