தமிழ் வருடப்பிறப்பு உணவுகள்

Advertisement

சித்திரை வருடப்பிறப்பு உணவுகள்

ஆங்கில வருடப்பிறப்பு என்றால் கேக் வெட்டி கொண்டாடுவோம். இந்த பண்டிகையானது இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் இரண்டு நபருமே கொண்டாடுவார்கள். ஆனால் தமிழ் வருடப்பிறப்பு ஆனது இந்துக்கள் மட்டும் தான் கொண்டாடுவார்கள். இதனை தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் மலேசியா இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் வீட்டை முதல் நாளே சுத்தம் செய்து விட்டு கழுவி விடுவார்கள். தமி புத்தாண்டு அன்று காலை எழுந்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். அன்றைய இந்துக்கள் வீட்டில் சைவ உணவாக தான் இருக்கும். இந்த சைவ உணவுகளிலும் கண்டிப்பாக சிலவற்றை சமைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

அறுவகை சுவை:

Tamil varuda pirappu unavugal menu

இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து சாப்பிட வேண்டும். மதிய உணவில் வேப்பம்பூரசம், மாங்காய் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு பாயாசம், மசால் வடை போன்ற உணவுகள் வைத்து சாப்பிட வேண்டும்.

ஏனென்றால் மனிதனின் வாழ்க்கையானது இனிப்பு, கசப்பு இரண்டும் கலந்து இருக்க வேண்டும். அதாவது இன்பம் மற்றும் துன்பம் இரண்டும் கலந்து இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உணவுகளை அன்றைய நாள் எடுத்து கொள்ள வேண்டும்.

மஞ்சள் பூசணிக்காய் சாம்பார்:

தமிழ் வருடப்பிறப்பில் பருப்புடன் பூசணிக்காய் சேர்க்கப்படுகிறது. மேலும் அரிசி மற்றும் பூசணிக்காய் சாம்பார் சிறந்த உணவாக இருக்கிறது.

மசால் வடை:

அன்றைய மசால் வடை செய்து சாப்பிட வேண்டும். அதில் உளுத்தப்பருப்பு வடை, கடலை பருப்பு வடை சைடிஷ் ஆக சட்னி அல்லது சாம்பார் வைத்து சாப்பிடலாம்.

பருப்பு பாயசம்:

பாசிப் பருப்பு, வெல்லம், தேங்காய்ப்பால் கொண்டு தயாரிக்கப்படும் பாயாசம் இதுவாகும். இனிப்பு சுவைக்காக இது பரிமாறப்படும்.

மாங்காய் பச்சடி:

இவை மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் பச்சடி செய்து சாப்பிடலாம். இந்த பச்சடி ஆனது இனிப்பு, புளிப்பு போன்ற சுவைகளை தருகிறது.

ரசம்:

சாம்பார் சாப்பிட்ட பிறகு அடுத்ததாக சாப்பிட வேண்டியது ரசம் தான். இந்த ரசத்தில் சிறிதளவு வேப்பிலை இலைகளை அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பிறகு போட  வேண்டும். ஏனென்றால் கசப்பு சுவைக்காக வேப்பிலையை போட வேண்டும்.

மோர்:

பாயாசத்திற்கு அடுத்ததாக மோர் போடுவது வழக்கமானது. அன்றைய தினம் புளிப்பு சுவைக்காக மோரை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மேல் கூறியுள்ள முறைகளில் தமிழ் புத்தாண்டு அன்று சமைத்து சாப்பிடுங்கள். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு தின வாழ்த்துக்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement