இரண்டு வரி வாழ்க்கை தத்துவம் | Iru Vari Valkai Thaththuvam in Tamil..!
பொதுவாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் மொத்தமாக 7 பிறவிகள் என்று கூறுவார்கள். அதில் ஒரு பிறவியாக நாம் மனித வாழ்க்கையினை வாழ்ந்து வருகிறோம். இத்தகைய வாழ்க்கை முறையில் நாம் மகிழ்ச்சியாக இருப்பதை விட வாழ்க்கையில் நடக்கும் சோகமான நிகழ்வு மற்றும் துன்பங்களை நினைத்து தான் அதிக அளவில் கவலைப் பட்டு கொண்டு இருக்கின்றோம். அதோடு மட்டும் இல்லாமல் என்னடா வாழ்க்கை இது என்று புலம்பவும் செய்வோம். அது மட்டும் இல்லாமல் இத்தகைய நிலையில் இருக்கும் போது ஏதேனும் வாழ்க்கை தத்துவம் மற்றும் பொன்மொழிகளை கூறுவது மற்றும் கேட்பதன் மூலம் மனது கொஞ்சம் லேசாகி விடும் என்பது நம்முடைய ஒரு எண்ணமாக இருக்கிறது.
வாழ்க்கை தத்துவம் 2 வரிகள்:
சிறந்தவனாக இரு, சிறந்ததை வைத்திரு, சிறந்ததை செய்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, நீ மற்றவர்கள் மனதில் வாழும்வரை.
அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
போகும்போதே என்னை ரசித்து கொண்டே போ, திரும்பி வரமாட்டேன் உனக்காக. இப்படிக்கு – வாழ்க்கை.
யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள். ஏனெனில் இந்த உலகிலேயே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பதுதான்.
இழக்கும் வரை ஒருவரின் அருமை நமக்குப் புரிவதில்லை.
இரு வரி தத்துவங்கள்:
புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை!
புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை
அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே.
உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே…
அழைப்பு வரும் வரை
உழைப்பு அவசியம்
அன்பை பிச்சை எடுக்க கூடாது
அக்கறையை கேட்டு வாங்க கூடாது
எதையும் மனம் விட்டு
பேசாத வரை எல்லாம்
மன அழுத்தமே
தூக்கிவிட்ட வரை மறக்காதே
தூக்கி போட்ட வரை
கனவில் கூட நினைக்காதே
இரு வரி தத்துவம்:

- நல்ல வழிகாட்டுதலாக மாறாதவரை தண்டனை என்பது மதிப்பற்றதே.
- எளிமையானதாக மாறுவதற்கு முன் அனைத்து விஷயங்களும் கடினமானதே.
- நாம் அழுதுகொண்டே பிறக்கின்றோம், குறை சொல்லியே வாழ்கின்றோம், ஏமாற்றத்துடன் இறக்கின்றோம்.
- பணம் முட்டாளுக்குக் கூட அறிவாளி நண்பனை ஏற்படுத்திக் கொடுத்து விடும்.
- அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
- உழைப்பதற்கு அஞ்சாதவர்களே எதிர்காலத்தில் சக்திமிக்க மனிதர்களாகத் திகழ்வர்.
- உன்னுடைய நம்பிக்கையை அறிவென்று எண்ணுவது தவறில்லை. ஆனால், பிறர் நம்பிக்கையை மிதிக்காதே.
- பலருக்கு கண்களுண்டு, பகுத்தறியும் ஆற்றல் சிலருக்கே உண்டு.
- அறிவுத் தேவையைவிட, கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கிவிடுகிறது.
- சிரிக்கத் தெரியாதவனும், சிந்திக்கத் தெரியாதவனும் வாழ்வில் சிறப்புப் பெறுவதே இல்லை.
- இலக்கு என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய பொருள்.
| தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF |
இரண்டு வரி பொன்மொழிகள்:

- கருணைதான் பெருந்தன்மையின் அடையாளம்.
- பலவற்றை கேளுங்கள், ஒரு சிலவற்றை மட்டும் பேசுங்கள்.
- தைரியமே நம்முடைய மிக நெருங்கிய நண்பன்.
- தர்மம் செய்வதால் நல்வாழ்வு அமைவதோடு வாழ்வின் இறுதிக்காலம் நிம்மதியாக அமையும்.
- மூன்றாம் பிறைக்கு அதன் வளைவே அழகு சேர்க்கிறது. மனிதனுக்கும் பணிவே பெருமை சேர்க்கிறது.
- ஒவ்வொரு உன்னதமான பணியும் முதல் யோசனையில் சாத்தியமற்றதே.
- வாழ்வில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் உருவாகிவிட்டால் அது சமுதாயம் முழுவதும் பிரதிபலிக்கும்.
- இலக்கு இல்லாத மனிதன், சுக்கான் இல்லாத கப்பலைப் போன்றவன்.
- ஞானிகள் விலகியிருப்பது உலகத்தை வெறுக்க அல்ல; அதனை அறியவேதான்.
- தவறு என்று எதையும் உணராமல் இருப்பதே தவறுகளில் தலையாயது ஆகும்.
| குழந்தைகளுக்கான அடிப்படை தமிழ் சொற்கள் |
இரண்டு வரி கவிதைகள்:

- அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே!
உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்..? நீயே உன் காவலன் - அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே..! உன் மனதில்
உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே..! - இதுவரை ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தாத ஒன்று எது தெரியுமா அன்பு.
காரணம் அன்பென்றால் அகிலமும் அடங்கிவிடும் என்பதனால். - புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை..!
புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை..! - உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்- ஆனால்
எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே..! - உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விட
உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே சிறந்த கூற்று..! - சிரிக்கின்ற உதடுகள் தான்..!
சிதைக்க பட்ட இதயத்தின் வாசல்..! - உன்னை அடையாளம் கண்டேன்
என் அடையாளத்தை தேடுகிறேன்..!
வாழ்க்கை தத்துவம் 2 வரிகள்:
உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்!
ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே….
உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படித்தான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.
உருவத்தில் எப்படி இருந்தாலும் உள்ளத்தில் குழந்தையாய் இரு, இந்த உலகமே உன்னை நேசிக்கும்.
நட்பையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க அருகிலிருப்பவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்.
தவறே செய்யாத மனிதன் இல்லை, தவறை திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை
2வரி வாழ்க்கை தத்துவம் :
ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவுகொள்ளாது
போகும்போதே என்னை ரசித்துக்கொண்டே போ,திரும்பி வரமாட்டேன் உனக்காக
எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டால் ஏமாற்றம் பெரிதாக இருக்காது
உன்னை மட்டும் வாழ்வில் நம்பு
அன்பால் உணர்ந்தால் தான் உறவுகள் நிலைக்கும்.
| இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |









