வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஈகை பொருள் விளக்கம் | Eegai Meaning in Tamil

Updated On: November 20, 2025 5:15 PM
Follow Us:
Eegai Meaning in Tamil
---Advertisement---
Advertisement

ஈகை என்றால் என்ன | Eegai Endral Enna | ஈகை தமிழ் அர்த்தம்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் ஈகை என்பதற்கு அதன் அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகின்றோம். பொதுவாக நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் அதனுடைய சரியான அர்த்தம் அனைவருக்கும் தெரியும் என்று சொல்ல முடியாது. தெரியாத வார்த்தைக்கு அதன் சரியான அர்த்தத்தை தெரிந்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.

ஈகை என்பது தன்னிடம் இல்லாததை மற்றவருக்கு கொடுத்து உதவுக்கும் செயல் ஆகும். ஆகவே, நம்முடைய பதிவில் தினந்தோறும் பல வகையான அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஈகை என்பதற்கான அர்த்தத்தை பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம்.

நீரின்றி அமையாது உலகு திருக்குறள் பொருள்

Eegai Meaning in Tamil:

ஒன்றை வேண்டுபவர்க்கு, அவர் தேவையை அறிந்து இல்லை என்று கூறாமல் கொடுப்பது தான் ஈகை என்று கூறுகிறோம்.

குறள் 221:

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

கலைஞர் விளக்க உரை:

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.

மு.வ விளக்க உரை:

வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

குறள் விளக்கம்:

திருவள்ளுவர் இந்த குறள் மூலம் நமக்கு என்ன சொல்கிறார் என்றால் வறுமை நிலையில் வாழும் ஒருவருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வதே கொடை அளிப்பதாகும். மற்றவர்களிடமிருந்து கைமாறு எதிர்பார்க்காமல், புண்ணியம் எதிர்பார்க்காமல் உதவி செய்வதே கொடை. இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

அன்பும் அறனும் திருக்குறள் பொருள்

முழுப்பொருள்:

மிகவும் வறுமை நிலையில் இருந்து உதவி என்று கேட்பவர்க்கு இல்லை என்று கூறாமல் நம்மால் இயன்ற உதவியை செய்தல், பசியால் வாடுபவர்களுக்கு பசி தீர்க்கும் உணவைக் கொடுப்பது ஈகை எனப்படும். ஒரு பொருளும் இல்லாத ஏழை எளியவர்களுக்கு தங்களிடம் இருக்கும் ஒரு பொருளைக் கொடுத்து உதவி செய்வதும் ஈகை பண்பாகும். புகழ் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்று ஈதலால் புகழ் பெறலாம் என்று ஈகையைப் புகழோடு இணைத்துச் சொல்வார். இல்லாதவர்களுக்கு உதவி செய்வதில் நம்மிடம் பெரும் மகிழ்ச்சி ஏற்படும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now