One Line Proverbs in Tamil
பொதுவாக பழமொழிகள் என்றால் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். நாம் அனைவருமே பழமொழிகளை பற்றி படித்திருப்போம். அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள், யாரையாவது ஏதாவது சொன்னால், அதை பழமொழியின் வழியாக சொன்னார்கள். அப்படி அவர்கள் கூறிய ஒவ்வொரு பழமொழிக்கு ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அதுபோல நாமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள பழமொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவின் வாயிலாக ஒரு வரிகளில் இருக்கும் பழமொழிகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
50 பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்துகொள்வோம்
அ ஒரு வரி பழமொழிகள்:
- அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
- அகல் வட்டம் பகல் மழை.
- அகல உழுகிறதை விட ஆழ உழு.
- அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
- அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
- அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
- அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப்பெண்ணும் சமைக்கும்
- அட்டை கொழுத்துப்போய் அருவாமணையில ஏறுச்சாம்
- அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
- அடக்கமே பெண்ணுக்கு அழகு.
- அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
- அக்கரைக்கு இக்கரை பச்சை.
- அடாது செய்தவன் படாது படுவான்.
- அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்.
- அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
- அடியாத மாடு பணியாது.
- அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
- அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்.
- அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
- அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
- அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
- அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா
- அந்தி மழை அழுதாலும் விடாது.
- அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
- அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
- அய்யர் வர்ற வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா!?
- அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
- அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
- அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்
- அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
- அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
- அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
- அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
- அலை மோதும்போதே தலை முழுகு.
- அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
- அழிய உழுது அடர விதை.
- அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
- அழுத பிள்ளை பால் குடிக்கும்.
- அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
- அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
- அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
- அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
- அற்ப அறிவு அல்லற் கிடம்.
- அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
- அறச் செட்டு முழு நட்டம்.
- அறமுறுக்கினால் அற்றும் போகும்.
- அறிய அறியக் கெடுவார் உண்டா?
- அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
- அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
- அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
- அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
- அறுக்கத் தெரியாதவனுக்கு ஆயிரம் கதிர் அறுவாள்.
- அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
- அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
- அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா..?
- அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
“ஆ” ஒரு வரி பழமொழிகள்:
- ஆசை வெட்கமறியாது.
- ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருக்கு.
- ஆடத் தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
- ஆடத் தெரியாதவளுக்குக் கூடம் போதாதாம்.
- ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்
- ஆடு பகையாம். குட்டி உறவாம்.
- ஆபத்துக்குப் பாவமில்லை.
- ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
- ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன்.
- ஆரால் கேடு, வாயால் கேடு.
- ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
- ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
- ஆழமறியாமல் காலை இடாதே.
- ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
- ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
- ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
- ஆளைக் கண்டால் நரி ஆசனம் போடுமாம்.
- ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
- ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
- ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
- ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
- ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
- ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
- ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
- ஆனைக்கும் அடிசறுக்கும்.
- ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
“இ” ஒரு வரி பழமொழிகள்:
- இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
- இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
- இஞ்சி இலாபம் மஞ்சளில்.
- இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
- இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
- இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
- இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
- இடுக்கண் வருங்கால் நகுக.
- இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
- இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
- இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
- இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
- இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
- இராச திசையில் கெட்டவனுமில்லை
- இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
- இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
- இருவர் நட்பு ஒருவர் பொறை.
- இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
- இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
- இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
- இளங்கன்று பயமறியாது
- இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
- இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
- இறங்கு பொழுதில் மருந்து குடி
- இறுகினால் களி, இளகினால் கூழ்.
- இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
- இறைத்த கிணறு ஊறும், இறையாத கேணி நாறும்.
- இனம் இனத்தைச் சேரும்.
- இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
- இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
தமிழ் பழமொழிகள் மற்றும் அதன் விளக்கம்
“ஈ” ஒரு வரி பழமொழிகள்:
- ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
- ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
- ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
- ஈர நாவிற்கு எலும்பில்லை.
“உ” ஒரு வரி பழமொழிகள்:
- உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
- உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
- உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
- உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
- உப்பில்லா பண்டம் குப்பையிலே.
- உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
- உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
- உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
- உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
- உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
- உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
- உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
- உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
- உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
- உலை வாயை மூடினாலும் ஊர்வாயை மூடேலாது.
- உலோபிக்கு இரட்டை செலவு.
- உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
- உளவு இல்லாமல் களவு இல்லை.
- உள்ளது சொல்ல ஊருமல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
- உள்ளது போகாது இல்லது வாராது.
- உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
- உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
- உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
- உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
- உள்ளூர் மாடு விலை போகாது.
“ஊ” ஒரு வரி பழமொழிகள்:
- ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
- ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.
- ஊண் அற்றபோது உடலற்றது.
- ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
- ஊமை ஊரைக் கெடுக்கும். கூழைஅம்பு பேரைக் கெடுக்கும்.
- ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
- ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
- ஊர் வாயை மூட உலைமூடி இல்லை.
- ஊரோடு ஒத்து வாழ்.
- ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
உங்களை ஊக்குவிக்கும் பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
“எ” ஒரு வரி பழமொழிகள்:
- எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
- எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
- எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
- எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்கலாகாது.
- எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?
- எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
- எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
- எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
- எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
- எதார்த்தவாதி வெகுசன விரோதி.
- எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
- எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
- எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
- எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
- எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
- எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
- எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
- எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
- எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
- எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
- எலி அழுதால் பூனை விடுமா?
- எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
- எலி எண்ணைக்கு அழறது எலிப் புழுக்கை எதற்கு அழறது?
- எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
- எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
- எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
- எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
- எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்?
- எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
- எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
- எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
- எழுத்தறச் சொன்னாலும் பெண்புத்தி பின்புத்தி.
- எள் என்றால் எண்ணையாய் நிற்க வேண்டும்.
- எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
- எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
- எள்ளு என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
- எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
- எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.
- எறும்புந் தன் கையால் எண் சாண்
“ஏ” ஒரு வரி பழமொழிகள்:
- ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
- ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
- ஏரி நிறைந்தால் கரை கசியும்.
- ஏழுழவு உழுதால் எருப்போட வேண்டாம்.
- ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
- ஏழை என்றால் எவர்க்கும் எளிது
- ஏழை பேச்சு அம்பலம் ஏறாது
“ஐ” ஒரு வரி பழமொழிகள்:
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
- ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.
- ஐயர் வருகிற வரை அமாவாசை நிற்குமா?
“ஒ” ஒரு வரி பழமொழிகள்:
- ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
- ஒரு முறை சேமித்த பணம், இருமுறை சம்பாதித்த பணத்திற்குச் சமம்.
“ஓ” ஒரு வரி பழமொழிகள்:
- ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
- ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
- ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
- ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
- ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
- ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
- ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
- ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
- ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
- ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
- ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
- ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
- ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
- ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
- ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
- ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்
- ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
- ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
- ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா
“ஔ” ஒரு வரி பழமொழிகள்:
- ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |