Advertisement
அகராதி பயன்பாடு | Tamil Dictionary
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் முக்கியமான ஒன்றை பற்றிதான் பார்க்க போகிறோம். அது என்னவென்றால் தமிழ் அகராதி. நம்மில் சிலருக்கு தமிழ் அகராதி என்றால் என்ன என்பது தெரியாது. அதனை பற்றி நாம் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. தமிழில் முக்கியமான வார்த்தைக்கு அர்த்தம் சொல்வது இந்த அகராதிதான். அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொண்டு குழந்தைகளுக்கு இதனை சொல்லி கொடுத்து வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.
அகராதி சிறுகுறிப்பு:
- அகராதி என்பது ஒரு மொழியில் உள்ள சொற்கள் அவற்றிற்கான பொருளையும் கூறுவது அகராதி ஆகும்.
- அகரம், ஆதி என்ற இரண்டு பொருள்களை கொண்டு அகரம் + ஆதி = அகராதி என்று பெயர்ந்துள்ளது.
- அகராதியின் வேறு பெயர் அகரமுதலி என்று கூறுவர். இதன் பெயர் போல் இந்நூலில் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும்.
தொல்காப்பியம் வரலாறு |
அகராதி வகைகள்:
- ஒரு மொழி அகராதி
- இரு மொழி அகராதி
- ஒரு பொருட் பன்மொழி அகராதி
- எதிர்ப்பத அகராதி
- இலக்கிய அகராதி
- புலவர் அகராதி
- அடுக்கு மொழி அகராதி
- பழமொழி அகராதி
- உவமை அகராதி
- சிலேடை அகராதி
- கலைச்சொல் அகராதி
- ஆட்சி சொல் அகராதி
- சட்ட அகராதி
- அறிவியல் அகராதி
- மருத்துவ அகராதி
- சிறப்புப் பெயரகராதி
- மூலிகை அகராதி
- வட்டார்ச்சொல் அகராதி
- தொகை அகராதி.
தமிழ் இலக்கிய அகராதி:
- சொல் அகராதி
- தொகை அகராதி
- பிரபந்த அகராதி
- நூல் அகராதி
- புலவர் அகராதி.
ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி கட்டுரை |
அகராதி வரலாறு:
- ஒரு சொல்லுக்கு பொருள் கிடைப்பது உரிச்சொல் நிகண்டு.
- இது நமக்கு ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து கிடைத்திருக்கிறது.
- உரிச்சொல் நிகண்டு பொருள் வரிசையில் பகுத்து வரிசைப்படுத்திருந்தார்கள். அகரவரிசைபடுத்தப்பட்ட நிகண்டு நமக்கு 1594-ல் பதினாறாம் நூற்றாண்டு நமக்கு அகரவரிசை நிகண்டு கிடைத்தது.
- உரிச்சொல் நிகண்டு நமக்கு 16-ம் நூற்றாண்டு கிடைத்தாலும் அது அகராதி நிகண்டுகளாக மாறுவதற்கு ஏழு நூற்றாண்டு ஆகிவிட்டது. அதற்கு பிறகு முதல் நிகண்டு நூல் நமக்கு 1819-ஆம் ஆண்டு கிடைத்தது. அதன் பெயர் வீரமா முனிவர் எழுதிய சதுரகாதி அதனால் அவரை சதுரகாதிகளின் தந்தை என அழைக்கப்பட்டார்.
- தமிழ் அகராதி இயலின் தக்கார் என குறிப்பிடுகிறார்கள்:
- தமிழ் அகராதிக்கலை தந்தை சுந்தர சண்முகனார்.
- ஈரோடு சதாசிவம் இவர் 30 ஆண்டு காலம் தமிழ் அகராதிகளுக்காக உழைத்தவர்.
ஜெயதேவன் என்பவர் தமிழ் அகராதி இயல்கள் தந்தவர். - இவர்கள் மூவரும் தமிழ் அகராதிக்காக அயலாது உழைத்தவர்கள். அதற்காக பேச கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ் அகராதியின் தக்கார் என அழைக்கப்படுகிறார்கள். தமிழில் வெளிவந்த அகராதி இயலின் கட்டுரை papers on tamil studies என்ற நூலில் சாமி சுப்ரமணியம் தமிழ் அகராதிகளை சார்ந்த கட்டுரை எழுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தின் மணி விழா 1982-ஆம் ஆண்டில் நடந்தது.
- தமிழின் முதல் பேரகராதி: யாழ்ப்பாண அகராதி இது 1938 -ஆம் வெளிவந்தது. இதில் 58,500 சொற்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.
- இதனை மாநுதல் தமிழ் அகராதி, மணி பாய் அகராதி என யாழ்ப்பாண அகராதியை அழைக்கிறார்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
Advertisement