தாய் பற்றிய திருக்குறள் | Annai Thirukkural in Tamil

Advertisement

Thaimai Thirukkural in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! திருக்குறள் பற்றி அறியாதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். நாம் அனைவருமே திருக்குறள் படித்திருப்போம். தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட நூல் தான் திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறளை கொண்டுள்ளது. இந்த குறள்கள் அனைத்தும் ஒவ்வொரு பொருளை தர கூடியதாக இருக்கிறது. அதில் எல்லா குறளுக்கான அர்த்தங்கள் தெரியுமா என்றால் தெரியாது. ஆனால் சில குறளுக்கான அர்த்தத்தை அறிந்திருப்போம். அந்த வகையில் வரும் மே மாதம் 12 ஆம் தேதி அன்று அன்னையர் தினம் வருகிறது. ஆகவே அன்னையை போற்றும் திருக்குறள் பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

அம்மா பற்றிய கவிதை 4 வரிகளில்

தாயை போற்றும் திருக்குறள்: 

பொதுவாக அம்மா இல்லையென்றால், இவ்வுலகமே இயங்காது. அம்மா என்ற வார்த்தை எவ்வளவு புனிதமானது என்று நம் அனைவருக்குமே தெரியும். இவ்வுலகில் அனைவருக்கும் இருக்கும் ஆறுதலான வார்த்தை என்றால் அது அம்மா தான். அம்மா என்ற வார்த்தைக்கு ஈடாக எதுவுமே இருக்க முடியாது.

அம்மா என்றாலே ஆனந்தம் தான். நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் உண்மையான அன்பை காண வேண்டும் என்றால், அது தாயின் கண்களில் மட்டுமே காண முடியும். வாழ்க்கையில் எது மாறினாலும், தாயின் அன்பு மட்டும் மாறாத ஒன்றாக இருக்கிறது. அம்மாவின் அன்பு தூய்மையானது. தாயின் அன்பிற்கு நிகரான உண்மையான பாசம் இந்த உலகில் வேற எதுவும் இல்லை. இந்த அம்மாவின் பாசம் என்பது ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு மட்டுமில்லை ஐந்தறிவு படைத்த விலங்கினலுக்கும் அம்மாவின் பாசம் அறிய கூடிய ஒன்றாக இருக்கிறது. தாயை பற்றி தாயின் பெருமைகளை பற்றி கூற இந்த ஒரு பதவி போதாது. இந்த பதிவில் திருக்குறள் மூலம் திருவள்ளுவர் தாயை போற்றி திருக்குறளும் எழுதியுள்ளார். அந்த திருக்குறளையும், அதன் பொருளையும் தற்போது காண்போம்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

மு.வ விளக்க உரை:

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

கலைஞர் விளக்க உரை:

நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

 சிவயோகி சிவக்குமார் விளக்கம்:

பிறக்கும் பொழுது பெருமை கொண்ட தன் மகனை அறிவாளி என்று கேள்வி பட நினைப்பால் அன்னை

வீ. முனிசாமி உரை:

தன் மகனைக் கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோன் என அறிவுடையோர் சொல்லக் கேட்க தாயானவள் பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியினை விடப் பெருமகிழ்ச்சி அடைவாள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement