வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள் | Puthir Vidukathaigal | Riddles in Tamil

Updated On: September 5, 2025 5:59 PM
Follow Us:
Puthir Vidukathaigal in Tamil
---Advertisement---
Advertisement

புதிர் விடுகதைகள் | Puthir Vidukathaigal in Tamil

சிறுவயதில் நம்மிடம் பாட்டிகள் கேட்கும் கேள்விகள் வித்தியாசமாகவும் நமது மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாகவும் இருக்கும். இதனால் குழந்தைகள் வளரும்போதே புத்தி கூர்மையாக இருக்கும். ஆனால் இப்போது உள்ள குழந்தைகள் மொபைலில் உள்ள கேம்களை விளையாடி கொண்டிருப்பதால் மூளைக்கு வேலை கொடுப்பதே இல்லை. உங்களின் பிள்ளைகளின் மூளைக்கு சற்று வேலை கொடுக்கும் விதமாக இந்த பதிவில் சில புதிர் விடுகதைகளை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Puthir Vidukathai:

1.ஒரு பெரிய ஆலமரத்தில் 100 குருவிகள் அமர்ந்திருந்தன. அங்கு வந்த வேட்டைக்காரன் ஒருவன் 100 குருவிகளில் இரண்டு குருவிகளை சுட்டு வீழ்த்தினான். அப்படியானால் அந்த மரத்தில் மீதி எத்தனை குருவிகள் இருக்கும்?

விடை :ஒரு குருவியும் இருக்காது வேட்டைக்காரனின் வேட்டு சத்தம் கேட்டவுடன் எல்லா குருவிகளுமே பறந்து போயிருக்கும்.

2. ஒரு வாத்திற்கு முன்னால் இரண்டு வாத்துக்கள் உள்ளன. ஒரு வாத்திற்கு பின்னால் இரண்டு வாத்துக்கள் உள்ளன. மத்தியில் ஒரு வாத்து உள்ளது. அந்த வரிசையில் குறைந்தது எத்தனை வாத்துக்கள் இருக்க வேண்டும்?

விடை :மொத்தம் மூன்று வாத்துக்கள்.

3. ஒருவன் கூடையில் ஆறு ஆப்பிள் பழங்களை எடுத்து வந்தான். அவன் அந்த பழங்களை ஆறு சிறுவர்களுக்கு சமமாக தர வேண்டும். எந்த பழத்தையும் அறுக்கவோ சிதைக்கவோ கூடாது. ஆனால் ஒரு பழம் கூடைக்குள் இருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு அவன் பழங்களை சிறுவர்களுக்கு சமமாக பிரித்து தந்தான். உங்களால் முடியுமா? எப்படி?

விடை :மற்ற ஐவற்கும் கைகளில் தந்து விட்டு ஒருவனுக்கு மட்டும் பலத்தை கூடைக்குள் வைத்து தந்தான்.

4. சென்னையில் இருந்து புதுவைக்கு ஒரு கார் இரண்டரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தது. ஆனால் அதே கார் புதுவையில் இருந்து சென்னைக்கு செல்ல 150 நிமிடங்கள் ஆயிற்று காரின் வேகமும் குறையவில்லை வழியில் தடங்கல் ஏதுமில்லை. அதற்கு என்ன விளக்கம் தர முடியும்?

விடை : 150 நிமிடங்கள் என்பது இரண்டரை மணி நேரம்தான்.

5. முடியும் இல்லாத முகத்தில் இல்லாத தாடி.

விடை : காத்தாடி

6.உலகெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?

விடை : கடல் அலை

7.இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது-அது என்ன?

விடை : பட்டாசு

8.காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

விடை : சாமரம்

9. இருட்டில் கண் சிமிட்டும் ஆனால் நட்சத்திரம் அல்ல அது என்ன?

விடை : மின்மினிப்பூச்சி

10. உள்ளேயிருந்தால் ஓடித்திரியும், வெளியே வந்தால் விரைவில் முடியும்?

விடை : மீன்

Puthir Vidukathai:

1.இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

விடை : தேள்

2.பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

விடை : தலைமுடி

3. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?

விடை : விழுது

4. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?

விடை : பூரி

5. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?

விடை : இமை

6. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?

விடை : சோளக்கதிர்

7. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?

விடை : உப்பு

8. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?

விடை : சைக்கிள்

9. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.

விடை : கொசு

10. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?

விடை : பூசணிக்கொடி

புதிர் விடுகதைகள்:

6. கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை அவன் யார்?

விடை : ஆமை

7. குடியிருக்க கோட்டை கட்டும் அந்த கோட்டையை உடைத்து வெளியே வரும் அது என்ன?

விடை : பட்டாம்பூச்சி

8. பாலாற்றின் நடுவே கருப்பு மீன் தெரியுது அது என்ன?

விடை : கண்

9. பேப்பர் கிடையாது வாய்ப்பாடு தெரியாது கணக்கிலோ புலி அது என்ன?

விடை : கால்குலேட்டர்

10. நாக்கு இல்லாவிட்டால் இவனுக்கு வேலையில்லை அவன் யார்?

விடை : மணி

Puthir Vidukathaigal in Tamil:

11. மூன்றெழுத்து பெயராகும், முற்றும் வெள்ளை நிறமாகவும் அது என்ன?

விடை :  பஞ்சு

12. ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன?

விடை : தேன்கூடு

13. நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால் அவன் சிரிப்பான் அவன் யார்?

விடை : கண்ணாடி

14. அடிக்காமல் திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?

விடை : வெங்காயம்

15. அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை அது என்ன?

விடை: தலைவகிடு

கடினமான விடுகதைகள்

புதிர் விடுகதை வினா விடைகள்:

16. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்?

விடை : சிலந்தி

17. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?

விடை : கல்வி

18. கல்லாலும்,மண்ணாலும் கட்டாத வீடு, காற்றிலே ஆடும் வீடு அது என்ன?

விடை : தூக்கனான் குருவி கூடு

19. ஓர் அரண்மனையில் 32 காவலர்கள் அது என்ன?

விடை : பற்கள்

20. கருப்பு சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன் அது என்ன?

விடை : பூட்டு

 புதிர் விடுகதைகள்:

21. வெட்டி கொள்வான் ஆனாலும் ஒட்டிக் கொள்வான் அவன் யார்?

விடை : கத்தரிக்கோல்

22. மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும் அது என்ன?

விடை: இரயில்

23. நாலு கால் உண்டு வீச வால் இல்லை அது என்ன?

விடை: நாற்காலி

24. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?

விடை:  கடிகாரம்

25. ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான். அது என்ன?

விடை : மூச்சு

புதிர் விடுகதைகள்:

26. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன?

விடை : வளையல்

27. காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன?

விடை : முட்டை

28. கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்?

விடை : புகை

29. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன?

விடை : மிருதங்கம்

30. பூ பூப்பது கண்ணுக்கு தெரியும், காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. இது என்ன?

விடை : வேர்க்கடலை

31. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?

விடை: பப்பாளி விதைகள்

32. நடக்கத் தெரியாதவன் நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்?

விடை: கைகாட்டி

33. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை அது என்ன?

விடை: தீக்குச்சி

34. தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும் அது என்ன?

விடை: தபால் தலை

35. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன?

விடை: தராசு

36. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?

விடை: வாழைப்பூ

37. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?

விடை: வாழைப்பூ

38. கண் உண்டு, ஆனால் பார்க்கமுடியாது அது என்ன.?

விடை : ஊசி

39. அடி பாதையில் இருக்கும், ஆனால் கால் இருக்காது.. அது என்ன.?

 விடை : நத்தை 

40.தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?

விடை : தொலைப்பேசி

தமிழ் விடுகதைகள் 400 With Answer
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now