அப்துல் கலாம் பற்றி 10 வரிகள்.!

Advertisement

அப்துல் கலாம் பற்றி 10 வரிகள் | 10 Lines About Abdul Kalam in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அப்துல் கலாம் பற்றி 10 வரிகளில் பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம்.  அப்துல் கலாம் அவர்கள் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி அன்று இராமேஸ்வரத்தில் பிறந்தார். ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் என்பது இவரது இயற்பெயர் ஆகும். படகு ஓட்டியும் மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் என்பவருக்கும் ஆசியம்மா என்பவருக்கும் ஐந்தாவது மகனாக பிறந்தவர் அப்துல் கலாம் அவர்கள்.

இவருக்கு நான்கு சகோதரர் மற்றும் ஒரு சகோதரி. இவர் தந்தை ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி இடையே மக்களை படகில் ஏற்றி செல்லும் வேலை செய்து கொண்டிருந்தவர். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து பல்வேறு சாதனைகளை செய்து வெற்றி பெற்றவர். இவர் பல்வேறு தடைகளை தாண்டி இவ்வுலகையே திரும்பி பார்க்க வைத்து சாதனை படித்துள்ளார். இவர் ஒரு அறிவியலாளர் மட்டுமின்றி குடியரசு தலைவராகவும் திகழ்ந்தவர். எனவே, APJ அப்துல் கலாம் அவர்கள் பற்றிய சில தகவல்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.

அப்துல் கலாம் பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்.!

10 Points About Abdul Kalam in Tamil:

அப்துல் கலாம் பற்றி 10 வரிகள்

  1. தாய்மொழியான தமிழ் மொழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனை படைத்தவர் APJ அப்துல் கலாம் அவர்கள்.
  2. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி நாள் வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் துளிக்கூட விலகாமலே இருந்தார்.
  3. அப்துல் கலாம் அவர்கள் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.
  4. அப்துல் கலாம் அவர்கள் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக இருந்தது.
  5. அப்துல் கலாம் அவர்களிடம் நான் என்ற அகந்தை எண்ணம்  துளி அளவு கூட இருந்ததில்லை. வாழ்நாள் முழுவதும் எளிமையாகவும், மரியாதைக்குரியவராகவும் இருந்தவர். இந்திய ஜனாதிபதிகளில் மிகவும் எளியவராக இருந்தவர் இவர் ஒருவர் மட்டுமே.
  6. படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய விஷயத்தை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தி சென்றவர.
  7. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். வாழ்நாள் முழுவதும் நேர்மையாக வாழ்ந்த மனிதர். அப்துல் கலாம் அவர்கள், அவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.
  8. அப்துல் கலாம் அவர்களிடம் நகைச்சுவை உணர்வு அதிகமாக இருந்தது. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையாக/நேர்மறையாக பேசி பிறரை மகிழ்ச்சியாக வைத்து கொள்வார்.
  9. அப்துல் கலாம் அவர்கள் தினமும் திருக்குரான் படிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். அதில் ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகள் அவருக்கு பிடித்த வரிகள் ஆகும்.
  10. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் படித்து முடித்தவர்.குறிப்பாக, திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே கூறலாம். , ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்பியவர். அவர் கடைசி மூச்சியிலும் இந்த பணியில் தான் நிறைவுற்றது. அப்துல் கலாம் அவர்கள், 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி அன்று இயற்கை எய்தினார்.

டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு…!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement