இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் | Freedom Fighters Names in Tamil
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்கள் பெரிதும் பாடுபட்டுள்ளனர். நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 நாள் இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு பல்வேறு போராட்ட வீரர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். போராட்டத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த அனைவர்க்கும் மரியாதை செலுத்தும் விதமாக புதுதில்லியில் இந்தியா கேட் என்ற நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் நாம் அனைவரும் இந்திய நாட்டில் சுதந்திரத்துடன் வாழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்த சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை நாம் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, அந்த வகையில் இப்பதிவில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் அயராது பாடுபட்ட தலைசிறந்த போராட்ட வீரர்களின் பெயர்களை பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம்.
What are The 5 Freedom Fighters of India:
சர்தார் வல்லபாய் படேல் அவர்கள்:
சர்தார் வல்லபாய் படேல் அவர்கள், 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பிறந்தார். இவர், இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும், இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் அழைக்கப்படுகிறார். ஆரம்ப காலகட்டத்தில் வழக்கறிங்கராக பணியாற்றிய இவர் இந்திய ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்திய நாட்டை காப்பற்ற தனது வழக்கறிஞர் பதிவியை விட்டு விலகி சுதந்திர போராட்டத்திற்காக போராடினார். பிறகு, இந்திய சுதந்திரத்தை தெடர்ந்து நாட்டின் துணை பிரதமராகவும் நியமிக்கப்பட்டார். அப்போது அவர், இந்திய ஒன்றியத்திற்குள் சமஸ்தானங்களை கொண்டுவர பெரிதும் பாடுபட்டார். இவரின் அயராது உழைப்பு மற்றும் அர்பணிப்புக்காக பாரத ரத்னா விருதினையும் பெற்றார். பிறகு, 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
2. ஜவஹர்லால் நேரு அவர்கள்:
சாச்சா நேரு என்று பிரபலமாக அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு அவர்கள் 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி பிறந்தார். இவர் குழந்தைகள் மீது அதிகம் பாசம் கொண்டவராக திகழ்ந்தார். இவர் குழந்தைகளை அதிகம் நேசித்த காரணத்தினால் இவரின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. வழக்கறிஞராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள், சுதந்திர போராட்ட வீரராகவும் அரசியல் வாதியாகவும் திகழ்ந்தார். பிறகு, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதியாக, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் முதல் பிரதமராகவும் நியமிக்கப்பட்டார். அதன் பின், 1964 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
3. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள்:
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் மிக முக்கியமானவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள். மகாத்மா காந்தி அவர்கள் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்தார். மேலும், இவர் “தேசத்தின் தந்தை” என்றும் போற்றப்படுகிறார். இந்தியா எப்படி ஆங்கிலேயர்களால் ஆளப்படுகிறது என்பதை கண்டு தீவிரமாக விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல அகிம்சை போராட்டங்கள் மேற்கொண்டார். இவரின் அயராது உழைப்பினால் இந்திய சுதந்திரம் பெற்றது. அதன், பிறகு ஜனவரி 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
சுதந்திர போராட்ட வீரர் காந்தியை பற்றி கட்டுரை
4. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்:
லால் பகதூர் சாஸ்திரி அவர்கள், 1904 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள முகல்சராய் என்ற நகரில் அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்தார். அவர் மகாத்மா காந்தி நடத்திய உப்பு சத்தியாகிரகப்போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் மற்றும் வெள்ளையனே வெளியேறு போன்றவற்றில் விடுதலைப் போராளியாகச் சேர்ந்தார். சுதந்திரப் போராட்ட வீரராக இருந்த அவர், சிறையில் அதிக வாழ்க்கையை செலவிட்டார். அதன் பிறகு, 1964 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 ஆம் ஆண்டில் “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” போன்ற சொற்றொடர்கள் அவரால் உருவாக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
5. டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1884 ஆம் ஆண்டு டிசம்பர் 3 அம தேதி பிறந்தார். இவர், சுதந்திர நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக திகழ்ந்தார். இந்தியாவின் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும், மகாத்மா காந்தியின் தீவிர வழக்கறிஞராகவும் இருந்தார். பிறகு, 1962 ஆம் ஆண்டில், பிரசாத் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னாவையும் பெற்றார். இவ்வளவு சிறப்பாக பணியாற்றிய டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1963 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை
6. சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்:
நேதாஜி என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி ஒரிசாவில் பிறந்தார். அவர் ஜாலியன் வாலாபாக் படுகொலையால் அதிர்ச்சியடைந்து 1921 இல் இங்கிலாந்தை விட்டு இந்தியாவிற்கு சென்றார். அவர் இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினராக இருந்த இவர், கீழ்ப்படியாமை இயக்கத்திலும் பங்கேற்றார். காந்திஜியின் அகிம்சை முறை சுதந்திரத்தின் மீது அதிருப்தி ஏற்படுத்தியதால் ஜெர்மனியில் உதவியை நாடினார், இறுதியாக ஆசாத் ஹிந்த் அரசு & ஆசாத் ஹிந்த் என்ற ஆர்மியை நிறுவினார். இந்தியா சுதந்திரம் பெற அயராது பாடுபட்ட இவர் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |