Indoor Plants For Home in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக வீட்டினுள் வைக்க வேண்டிய அழகிய தாவரங்கள் எது என்பதை பற்றி தான் கூறப்போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே வீட்டை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் சிலருக்கு வீட்டை சுற்றியும் வீட்டினுள்ளும் அழகிய மற்றும் கலர் கலரான பூச்செடிகளை வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் என்ன செடிகளை வைத்தால் அழகாக இருக்கும் என்ற யோசனை எல்லோருக்கும் வரும். ஆகையால், இந்த பதிவின் வாயிலாக வீட்டினுள் வைக்க வேண்டிய வகையான அழகிய தாவரங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க..!
வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்
வீட்டினுள் வைக்க வேண்டிய அழகிய தாவரங்கள்:
Coleus – கோலியஸ்:
கோலியஸ் என்பது வீட்டினுள் வளர்க்க வேண்டிய அழகிய செடி ஆகும். இந்த கோலியஸ் செடியானது பச்சை நிறத்தில் இருந்து சிவப்பு, ரோஸ் கலர், இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறம் வரை பல நிறங்களில் காணப்படுகிறது. இதை நாம் வீட்டினுள் வளர்க்கும் போது இந்த கோலியஸ் செடியானது வீட்டிற்கு தனி அழகைக் கொடுக்கிறது.
- கோலியஸ் செடிகளை வீட்டிற்குள் வளர்ப்பது கடினம் அல்ல ஆனால் வெளிச்சம் மற்றும் வெப்பநிலையில் வைப்பது அவசியம்.
- மண்ணை சற்று ஈரமாக வைத்திருக்க தவறாமல் தண்ணீர் பாய்ச்சவும் வறண்டு போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
- செடியின் நுனிகளை அடிக்கடி வெட்டி விடவும்.
- பூக்கள் பூத்தால் அவற்றை அகற்றவும் ஏனெனில் அவை வண்ணமயமான இலைகளிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன.
- வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் ஒரு வாரத்திற்கு அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உரம் போடவும்.
Caladium – காலடியம்:
இந்த Caladium காலடியம் செடியானது பொதுவாக இதய வடிவிலான பெரிய இலைகளைக் கொண்டிருக்கும். இந்த காலடியம் செடியானது சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை உள்ளிட்ட பல நிறங்களில் இருக்கிறது. இந்த செடியை நாம் வீட்டில் வளர்க்கும் போது வீட்டிற்கு பிரகாசத்தை கொடுக்கும்.
- இந்த செடி எப்பொழுதும் ஈரப்பதத்தில் இருக்க வேண்டும்.
- கலாடியங்களுக்கு அதிக உரம் தேவையில்லை, ஏனென்றால் உரத்தை அதிகமாகப் பயன்படுத்தினால் இலைகள் எரிந்து விடும்.
- இந்த காலடியம் செடியை செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைக்கவும்.
- இலைகள் அல்லது தண்டுகளில் இருந்து வரும் சாறு கூட சிறிய தோல் எரிச்சலை ஏற்படுத்தும்.
இந்த மூன்று செடிகள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்..
Croton – குரோட்டன்:
குரோட்டன் (Croton) செடியானது பச்சை, கருஞ்சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பல வண்ணங்களில் இலைகளை கொண்ட செடியாகும். இந்த குரோட்டன் செடிகளை நாம் வீடு அல்லது தோட்டத்தில் வளர்க்கும் போது அது வீட்டிற்கு அழகு சேர்க்கிறது.
- இந்த குரோட்டன் செடியானது பெரிய புதர்களாக வளரும். 10 அடி உயரத்தை எட்டும்.
- குறிப்பாக இந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளும் விஷத்தன்மை கொண்டவை ஆகவே செல்லப்பிராணிகள் அல்லது குழந்தைகள் உள்ள வீடுகளில் இதைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை.
- இந்த செடியில் இருந்து வரும் பால் ஆனது தோலில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகள்
Polka Dot Plant – போல்கா டாட்:
இந்த போல்கா டாட் செடியானது இது பிரகாசமான வண்ணமயமான இலைகளைக் கொண்ட ஒரு மூலிகை செடி என்று சொல்லப்படுகிறது.
போல்கா டாட் தாவரங்கள் இளஞ்சிவப்பு நிறத்துடன் கூடிய பச்சை நிற இலைகளைக் கொண்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் ஊதா, வெள்ளை அல்லது சிவப்பு நிறத்துடன் கூடிய வகைகளும் இருக்கின்றன. இந்த செடி வீட்டிற்கு அழகு சேர்க்கிறது.
- பிரகாசமான, மறைமுக ஒளி அல்லது பகுதி நிழலுடன் சூடான, ஈரப்பதமான நிலையில் போல்கா டாட் செடி சிறப்பாக வளரும்.
- போல்கா டாட் செடியை வளமான, நன்கு வடிகட்டிய பாட்டிங் கலவையில் நடவும்.
- போல்கா டாட் செடிகளை பிரகாசமான, மறைமுக ஒளி உட்புறம் அல்லது பகுதி சூரியன் வெளியில் ஒரு சூடான இடத்தில் வைக்கவும்.
- மேல் அரை அங்குல மண் காய்ந்தவுடன் உங்கள் போல்கா டாட் செடிக்கு தண்ணீர் ஊற்றவும்.
- வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் மாதத்திற்கு ஒரு முறை தாவரங்களில் உரம் போடவும்.
Nerve Plant – நரம்பு தாவரம்:
இந்த நரம்பு செடியானது சாதாரணமாக ஒரு தொட்டியில் வீட்டு தாவரமாக வளர்க்கப்படுகிறது. இந்த செடியானது வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் நரம்பு போன்ற வடிவங்களில் இருக்கிறது. இந்த செடியை நாம் வீட்டில் வளர்க்கும் போது அது அழகாக தோன்றுகிறது. இந்த செடியை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |