வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காலை மாலை பெயர் எப்படி வந்தது தெரியுமா..? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!

Updated On: September 21, 2023 12:02 PM
Follow Us:
kaalai maalai peyar karanam in tamil
---Advertisement---
Advertisement

காலை மாலை பெயர் காரணம் 

ஹலோ பிரண்ட்ஸ்..! தினமும் ஏதாவது ஒரு சுவாரஸ்யமான தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்..! அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு. இன்று நாம் ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்கபோகிறோம். பொதுவாக நம் அன்றாட வாழ்க்கையில் நாம் தினமும் பேசும் வார்த்தைகளில் இதுவும் ஓன்று. எது என்று யோசிக்காதீர்கள். காலை மாலை என்ற வார்த்தையை தான் சொல்கிறேன். பெரும்பாலும் நாம் பேசும் ஒவ்வொரு தமிழ் வார்த்தைகளுக்கும் பின் ஒரு காரணம் இருக்கும். எடுத்துக்காட்டுக்கு சொல்லவேண்டுமென்றால், இந்த பெயர் எதற்காக வந்தது, இந்த பெயர் வர காரணம் என்ன என்று இதுபோல நிறைய இருக்கும். அப்படி நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு வார்த்தை தான் இந்த காலை மாலை. இதற்கு பெயர் வந்த காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

காலை மாலை பெயர் வர காரணம் என்ன..? 

பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஓன்று தான் இந்த காலை மாலை. சூரியன் உதிக்கும் நேரத்தை காலை எனவும், மறையும் நேரத்தை மாலை என்றும் கூறுவார்கள் என்று நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இதற்கு பின்னால் ஒரு வரலாற்று கதை இருக்கிறது.

நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா காலை மாலை என்ற பெயர் எப்படி வந்தது என்று. சரி வாங்க நண்பர்களே இந்த காலை மாலை என்ற பெயருக்கு பின்னால் இருக்கும் வரலாற்று கதை என்னவென்று தெரிந்து கொள்வோம்.

ஏன் விளக்கு வைத்த நேரத்தில் ஒருவருக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று கூறுகிறார்கள் தெரியுமா

காலை நேரத்தில் சூரியன் உதிக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும். அந்த நேரத்தில் சூரியன் சர்வ வியாபியான விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளைச் சரணடைந்து தன் அன்றாட பணிகளை செய்ய தொடங்குகிறார். அப்படி திருமாலின் திருவடிகளை தரிசிக்கும் நேரம் என்பதால் அந்த நேரத்தை காலை என்று அழைத்தனர். 

அதுபோல சூரியன் மறையும் மாலை நேரத்தில் திருமாலின் அடி முதல் முடி வரை தரிசிப்பார். அப்படி அடி முதல் முடி வரை தரிசிக்கும் நேரத்தை மாலை என்று அழைத்தனர். இப்படி தான் காலை மாலை என்று பெயர் வந்தது.

பிள்ளையார் சிலையை ஏன் நீரில் கரைக்கிறார்கள் என்று தெரியுமா

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now