அனைவருக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்..! National Pension System in Tamil

Advertisement

இந்திய அரசின் அனைவருக்கும் ஓய்வூதிய திட்டம்..! NPS Scheme Details in Tamil..!

வணக்கம் நண்பர்களே..! (NPS Scheme Details in Tamil) மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் திட்டம் பற்றி தங்களுக்கு தெரியுமா..? இந்த திட்டத்தை பற்றி தெரியாதவர்களுக்கு தான் இந்த பதிவு… தேசிய ஓய்வூதியத் திட்டம் இதனை ஆங்கிலத்தில் National Pension Scheme என்று சொல்வார்கள். இந்த திட்டம் PFRDA திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. பொதுவாக அரசாங்கத்துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் தான் அரசு ஓய்வூதியம் பெற முடியும். மற்றபடி தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு அரசின் ஓய்வூதியம் பெற முடியாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பென்ஷன் இல்லாதபட்சத்தில் நமது இந்திய அரசாங்கம் இந்த தேசிய ஓய்வூதியம் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தாங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் இந்த திட்டத்தில் பயன்பெற இயலும்.

சரி இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயனடையலாம், இந்த (NPS Scheme Details in Tamil) திட்டத்தில் எப்படி நாம் முதலீடு செய்யலாம், இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அஞ்சல் துறையின் PPF Scheme..! ரூ.1000 முதலீடு செய்தால் வட்டி ரூ.1,45,455/- கிடைக்கும்..!

National Pension Scheme Tamil..!

NPS Scheme

தேசிய ஓய்வூதியம் திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம்?

  • இந்தியக் குடிமக்கள் அனைவருமே இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
  • வெளிநாட்டுகளில் வாழ்கின்ற இந்தியர்களும் (NRI) இந்த திட்டத்தில் இணையலாம்.
  • 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைவருமே இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.
  • இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைபவர்கள் கட்டாயம் தங்களுடைய நாமினியாக ஒருவரை நியமிக்க வேண்டும்.

இரண்டு வகையான கணக்குகள் / NPS Scheme Details in Tamil:-

தேசிய ஓய்வூதியம் திட்டத்தில் TIER-1 மற்றும் TIER-2 என இரண்டு வகை கணக்குகள் உள்ளது. அவற்றில் ஒரு சந்தாதாரர் தங்களுடைய நாமினியாக மூன்று நபர்களை நியமித்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் இணைந்தவுடன் தங்களுக்கு ஒரு PRAN நம்பர் ஒன்று தருவார்கள். அதனை ஓய்வூதிய கணக்கு எண் என்று சொல்வார்கள். இந்த 12 digit நம்பர் தான் தாங்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள (Identification) எண்ணாகும். இந்த கணக்கில் ஏற்கனவே நியமித்த நாமினியை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் இந்த PRAN எண்களை பெற்றவுடன் மாற்றிக் கொள்ளலாம்.

NPS scheme in tamil – தேசிய ஓய்வூதியம் திட்டத்தில் இணைய தேவைப்படும் ஆவணங்கள்:-

இந்த திட்டத்தில் இணைய ஆதார் அட்டை, பான் கார்ட், ரேஷன் கார்ட் அல்லது ஒட்டர் ஐடி இவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை தேவைப்படும். அதன் பிறகு முகவரி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் தேவைப்படும்.

NPS scheme in tamil – இத்திட்டத்தில் வரி சேமிப்பு உள்ளதா?

முதலீட்டாளர்கள் இந்த National Pension Scheme திட்டத்தில் ரூபாய் 1,50,000/- வரை முதலீடு செய்யும்பொழுது 80 C-கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

அதேபோல் பிரிவு 80 CCDIB-யின் கீழ் கூடுதலாக ரூபாய் 50,000/- முதலீட்டிற்கு வரி விலக்கு பெறமுடியும்.

வரி விலக்குடன் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த NPS திட்டத்தில் இணைந்து முதலீடு செய்யலாம்.

National Pension Scheme Benefits

TIER-1 திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:-

1 அரசாங்கத்தில் வேலை செய்பவராக இருந்தால் 10% Basic Salary + DA (daily allowance) இரண்டையும் சேர்த்து முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். தாங்கள் PAY செய்யும் 10% முதலீடுகளுடன், அரசாங்கமும் தனது பங்குக்கு இதே போல் 10% கட்டணத்தை செலுத்தும்.

2 தாங்கள் தனியார் துறைகளில் பணிபுரிபவராக இருந்தால் தங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது அதாவது NPS அல்லது EPS என இரண்டு வகையான வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்பெறலாம். இவற்றிலும் 10% Basic Salary + DA (daily allowance) தங்களுடைய முதலீட்டினை செலுத்த வேண்டியதாக இருக்க வேண்டும். தாங்கள் PAY செய்யும் 10% முதலீடுகளுடன், தங்களுடைய நிறுவனமும் தனது பங்குக்கு இதே போல் 10% கட்டணத்தை செலுத்தும்.

3 இந்த TIER 1 திட்டம் பொறுத்தவரை ஓய்வுக்காலத்திற்கு பின் தான் இக்கணக்கிலிருந்து சேமிப்பாளர்களின் பணத்தைத் திரும்பப் பெறமுடியம். இருப்பினும் தேசிய ஓய்வூதியத் திட்டம் விதி முறைகளுக்கு உட்பட்டு வெளியரும் பொழுது மட்டுமே தாங்கள் முதலீடு செய்த  தொகையினை திரும்ப பெற இயலும்.

4 இந்த TIER 1 திட்டத்தில் தாங்கள் முதலீடு செய்வதாக இருந்தால் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்ச தொகையாக ரூபாய் 500/-யினை மாதம் மாதம் செலுத்த வேண்டும். வருடத்திற்கு 6000 முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு முதலீடு செய்யாவிட்டால் இந்த ஓய்வூதிய கணக்கு முடங்கிவிடும்.

5 மீண்டும் இந்த கணக்கினை செயல்படுத்த வேண்டும் என்று நினைத்தால், தாங்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் சிறிய அளவிலான அபராத தொகையினை செலுத்தினால் மீண்டும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

TIER-2 திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:-

இந்த திட்டத்தில் கணக்கு துவங்கினால் முதலீட்டாளர்கள் தங்களுடைய வசதிக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யவும் அதனை திரும்ப பெறவும் முடியும்.

முதலீட்டாளர்கள் TIER 1-யில் ஓய்வூதியம் கணக்கு திறந்திருந்தால் மட்டுமே அடுத்து TIER 2 யில் கணக்கு தொடங்க முடியும்.

இவையான கணக்கில் ஒரு நிதி ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2,000/- ரூபாயினை முதலீடு செய்யலாம்.

இந்திய தபால் துறையின் டைம் டெபாசிட் திட்டம்..! 1 லட்சம் டெபாசிட்டுக்கு வட்டி ரூ.39,406 கிடைக்கும்..!

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நமக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?

உதாரணத்திற்கு ஒருவர் 30 வயதில் இருந்து மாதம் மாதம் 500 ரூபாய் சேமிக்கிறார் என்று வைத்து கொள்ளலாம். ஒரு வருடத்துக்கு 500 X 12 = 6,000/- செலுத்த வேண்டியதாக இருக்கும்.

அவருடைய ஓய்வுக்காலம் 60 வயது. எனவே அவர் 30 ஆண்டுகள் வரை ஆண்டுதோறும் 6,000/- ரூபாய் முதலீடு செய்யும்பொழுது அவர்களுக்கு முதிர்வு காலத்தில் 6,000 X 30=1,80,000 சேர்த்திருக்கும். இவர் எதிர்பார்க்கும் வருமானம் 10% அளிக்கும்பொழுது. இவர்களுக்கு 11,39,663 கிடைக்கும் தொகை ஆகும்.

இந்த தொகையை அவருடைய 60 வயதில் முழுமையாக பெறமுடியாது.. இந்த தொகையில் 60% தொகையினை அவருடைய 60 வயதில் பெற முடியும். மீதமுள்ள 40% தொகையினை மாதம் மாதம் அவர்களுக்கு பென்ஷன் தொகையாக வழங்கப்படும்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement