Patriotic Songs in Tamil
இந்திய சுதந்திர தினத்தை(Independence Day) வருடந்தோறும் கொண்டப்படுகிறது. நாடு முழுவதும் (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கலை, இலக்கிய போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகள் இருக்கும் அதில் மாணவ, மாணவிகள் பங்கு கொள்வார்கள். நமக்கு சுதந்திரத்தை வாங்கி தருவதற்காக பல வீரர்கள் பங்கு கொண்டனர். அந்த வகையில் இன்றைய பதிவில் தேசபக்தி பாடல்களை பற்றி அறிந்து கொள்வோம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேச பக்தி பாடல் வரிகள்
பாரத சமுதாயம் வாழ்கவே பாடல் வரிகள்:
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை ;
ஒப்பி லாத சமுதாயம்
உலகத்துக் கொருபுதுமை – வாழ்க !
(பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய …)
சரணங்கள்
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை யினியுண்டோ ? (புலனில்
வாழ்க்கை யினியுண்டோ ? – நாமிழந்த
வாழ்க்கை யினியுண்டோ ?)
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு –
கனியுங் கிழங்குந் தான்யங்களும்
கணக்கின்றித்தரு நாடு – (இது
கணக்கின்றித் தரு நாடு – நித்த நித்தம்
கணக்கின்றி தரு நாடு )
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினியுண்டோ ? ….
இனியொரு விதி செய்வோம் – அதை
எந்த நாளுங் காப்போம்
தனி யொருவனுக் குணவில்லை எனில்
ஜகத்தினை அழித் திடுவோம் (வாழ்க ! பாரத சமுதாயம் வாழ்கவே !)
(ஜய ஜய …)
“எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்”
என்றுரைத்தான் கண்ண பெருமான்
எல்லோரும் அமரநிலை யெய்துநன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் – (ஆம்,
இந்தியா உலகிற் களிக்கும் – ஆம், ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்) – இங்கு
(மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்க மினியுண்டோ ?)
எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்தியா மக்கள்
எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ! – (நாம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ! – ஆம் !
எல்லோரும் இந்நாட்டு மன்னர் !) – வாழ்க –
பாரத சமுதாயம் வாழ்கவே
(ஜய … ஜய)
விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்:
விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
வித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானே
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை
தடுக்கும் பாவத் தளைகளில் – விடுதலை
கொடுக்கும் தீய பழக்கத்தில் – விடுதலை
என்ன சந்தோஷம் இந்த – விடுதலை
எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம்
எரிக்கும் கோபப் பிடியினில் – விடுதலை
விதைக்கும் தீய பொறாமையில் – விடுதலை
அன்பர் இயேசுவே தந்த விடுதலை
இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே
அடுக்காய் பேசும் பொய்யினில் – விடுதலை
மிடுக்காய் வீசும் பெருமையில் – விடுதலை
ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே
தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |













