புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி.? | Purampokku Nilam Patta Vanguvathu Eppadi
சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக உள்ளது. அந்த வகையில் இன்றைய பதிவில் புறம்போக்கு நிலத்திற்கு எப்படி பட்டா வாங்குவது என்று தெரிந்து கொள்ளலாம். புறம் போக்கு நிலம் என்பது அரசுக்கு உரிமையுடையது. பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் நிலங்களை புறம்போக்கு நிலம் ஆகும். அதாவது வேளாண்மை செய்ய முடியாத நிலங்கள், சாலைகள், நீர்நிலைகள் போன்றவை புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றன. இந்த நிலத்திற்கு பட்டா எப்படி வாங்குவது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..
புறம்போக்கு நிலத்தை பட்டா வாங்குவது எப்படி.?
புறம்போக்கு நிலம் என்பதை அரசின் சொத்து என்று கூறலாம். பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் நிலங்களை புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றனர். அதாவது நம் நாட்டில் வேளாண்மை செய்யமுடியாத நிலங்களை புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றனர். இதனை பலரும் பயனப்டுத்தி வருகின்றோம். ஆனால் இதற்கு பட்டா வாங்க முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். உங்களின் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக இந்த பதவு இருக்கும். புறப்பொக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி என்று கீழே படித்து அறிந்து கொள்ளுங்கள்.
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாம் என்று தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டு தெரிவித்தது. அது எப்படி என்றால் புறம்போக்கு நிலத்தை 5 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் அந்த நிலத்தை சொந்தமாக்கி கொள்ளலாம்.அரசு புறம்போக்கு நிலங்களை இரண்டாக பிரிக்கலாம். அவை
ஆட்சேபனையற்ற புறம்போக்கு( Un objectionable Poramboke)
ஆட்சேபனையுள்ள புறம்போக்கு (Objectionable Promboke)
ஆட்சேபனையற்ற புறம்போக்கு( Un objectionable Poramboke):
ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் என்பது ஊரில் உள்ள கிராம நத்தம் நஞ்சை, தரிசு, புஞ்சை போன்றவை தான். இதில் கிராம நத்தம் என்பது மக்கள் வசிக்கின்ற அளவிற்கு மேடான பகுதியை தான் கிராம நத்தம் என்று கூறுவார்கள். இந்த நிலங்களில் பட்டவை பெறுவதற்கு அரசிடம் விண்ணப்பிக்கலாம். பட்டா கொடுப்பது அரசின் முடிவு. அரசு பயன்பாட்டிற்கு என்று கருதினால் பட்டா தரமாட்டார்கள்.
பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..?
ஆட்சேபனையுள்ள புறம்போக்கு (Objectionable Promboke):
ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலம் என்பது குளம், குட்டை, வாய்க்கால், ஏரி, கண்மாய் போன்ற நீர்வழி நிலங்களை தான் ஆட்சேபனையுள்ள புறம்போக்கு என்று கூறுகிறோம். பொதுமக்கள் நீர்நிலை புறம்போக்கு, மயானம்,சாலை , காடுகள், வாய்க்கால் , தோப்பு , களம்,பவுண்டு போன்ற ஆட்சேபனை உள்ள நிலங்களை வாங்கவோ அல்லது பட்டா கோரவோ இயலாது. தங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.
பட்டா வாங்க செயல்முறை:
- முதலில் நிலமானது புறம்போக்கு நிலமாக உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.
- உங்கள் பகுதியில் உள்ள வருவாய் துறை அலுவலகம் அல்லது தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு, பட்டா பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை வாங்க வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், அடையாள அட்டை, வசிப்பு சான்று, வருமானச் சான்று, நிலத்தின் மீதான கட்டண ரசீதுகள் (எலெக்ட்ரிசிட்டி பில், வீட்டுவரி ரசீது) போன்ற ஆதாரங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.
- விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, அதிகாரிகள் நிலத்தை நேரில் ஆய்வு செய்து, உங்கள் தகுதிகளை மதிப்பீடு செய்வார்கள். அனைத்து சரிபார்ப்புகளும் நிறைவு பெற்ற பின், பட்டா உங்கள் பெயரில் வழங்கப்படும்.
| இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |














