Puthumanai Pugu Vizha Thirukkural
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Puthumanai Pugu Vizha Thirukkural பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. புதுமனை புகுவிழா திருக்குறள் பற்றி நாம் அனைவரும் தேடி இருப்போம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் புதுமனை புகுவிழா திருக்குறள் பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
திருக்குறள்:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
மு.வரதராசன் விளக்கம்:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.
கலைஞர் விளக்கம்:
பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
மணக்குடவர் உரை:
இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை. (தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்) என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின்பாற்பட்ட விரதங்கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
மனைவி மக்களோடு வாழ்ந்து குடும்பம் நடத்துகிறவன் சமுதாயத்திலுள்ள உறவினர், நண்பர்கள், எளியவர்கள் ஆகிய மூன்று இனத்தாருக்கும் நல்ல முறையில் உதவியாக இருப்பவன்.
வீ. முனிசாமி உரை:
இல்லறத்தோடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் இயல்பாகவே தன்னைச் சார்ந்திருக்கும் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூன்று திறத்தார்க்கும் நல்லலொழுக்க நெறியில் நின்ற சிறந்த துணையாக இருப்பவனாவான்.
தமிழ்க்குழவி உரை:
இல்லறம் மேற்கொள்பவர், தம் மனைவி, மக்கள், பெற்றோர் ஆகியோர்க்கு நல்லறம் பேணி நற்றுணையாய் வாழ்தல் வேண்டும்
புதுமனை புதுவிழா வாழ்த்துக்கள் 2024..!
திருக்குறள்:
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
மு. வரதராசன் விளக்கம்:
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா விளக்கம்:
வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.
மு. கருணாநிதி விளக்கம்:
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.
மணக்குடவர் உரை:
ஒருவன் கருமஞ்செய்தற்கு நான் ஒழியே னென்று சொல்லுகின்ற பெருமைபோலப் பெருமையுடையது பிறிது இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஒருவன் தான் பிறந்த குடித்தனத்தைப் பெருமையுள்ள தாக்குவதற்கு) ‘வேலை செய்யத் தயங்க மாட்டேன்’ என்று சொல்லும் மன உறுதியைவிடச் சிறந்த உபாயம் வேறில்லை.
வீ. முனிசாமி உரை:
தன் குடி உயர எண்ணிய செயல் செய்வதற்கு தான் தொடங்கிய பணியினைக் கைவிடமாட்டேன் என்று கூறும் முயற்சிப் பெருமையினைப் போல ஒருவனுக்கு சிறந்த பெருமை பிறிதொன்றும் இல்லை.
தமிழ்க்குழவி உரை:
தான்பிறந்த குடும்ப மேன்மைக்காக ஒருவன் பணிகள் செய்ய முன் வருவான் ஆயின் அப்பெருமையைக் காட்டிலும் மேலானது வேறொன்றும் இல்லை.
திருக்குறள்:
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
மு. வரதராசன் விளக்கம்:
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.
மு. கருணாநிதி விளக்கம்:
ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.
மணக்குடவர் உரை:
முயற்சியும் நிரம்பின அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே குடி உயரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அந்த மன உறுதிக்குத் துணையாக) விடாமுயற்சி, காரியத்துக்கு வேண்டிய அறிவு ஆகிய இரண்டும் எப்போதும் சேர்ந்திருக்கும்படி காரியம் செய்தால் குடித்தனம் உயர்வடையும்.
வீ. முனிசாமி உரை:
முயற்சியும் நிறைந்த அறிவும் என்ற இரண்டினையும் கொண்டு ஓய்வின்றிச் செய்கின்ற செயலால் ஒருவனுடைய குடி உயரும்.
தமிழ்க்குழவி உரை:
விடாமுயற்சி, பரந்த அறிவு இவ்விரண்டும் அடிப்படையாக அமைய தொடர் முயற்சி இருப்பின் ஒருவன் குலப்பெருமை நிலைத்து நிற்கும்.
திருக்குறள்:
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
மு. வரதராசன் விளக்கம்:
என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.
மு. கருணாநிதி விளக்கம்:
தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.
மணக்குடவர் உரை:
குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்குத் தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும். மடிதற்றல் – தொழில்செய்வார் ஆடையை இறுக உடுத்தல்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அந்த உறுதி இருந்தால்) குடித்தனத்தின் நிலைமையை உயர்த்துவேன் என்று உறுதிகொள்ளும் ஒருவனுக்குத் தெய்வம் தானாகவே வந்து கச்சை கட்டிக்கொண்டு உதவி செய்யும்.
வீ. முனிசாமி உரை:
‘என் குடியினை உயரச் செய்வேன்” என்று முயன்று செயல்புரியும் ஒருவனுக்குத் தெய்வம் ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு தான் முன் நின்று துணை செய்யும்.
தமிழ்க்குழவி உரை:
தன் குடியை மேம்படச்செய்வதற்காக உழைக்கிறேன் என முன்வருவார்க்கு தெய்வம் தானே வந்து உதவி செய்யும்.
| இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |














