தென்னை மரம் பற்றி 10 வரிகள்
உலகில் பள்ளயிரம் கணக்குகளில் மரங்கள், செடிகள், கொடிகள் இருக்கிறது. இதில் உள்ள ஒவ்வொரு மரங்களும் ஒவ்வொரு பயனை தரக்கூடியதாக இருக்கிறது. அதில் ஒன்று தான் தென்னை மரம். இந்த தென்னை மரமானது பெரும்பாலான வீடுகளில் காணப்படும். இதில் நிறைய விதமான நன்மைகள் கிடைக்கிறது. அதுவும் தேங்காயின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனாலே ஒரு தென்னை கன்றையாவது நட்டு விடுகிறார்கள். இதில் உள்ள யழனி ஆனது வயிற்று புண்ணை சரி செய்ய உதவுகிறது. மேலும் இதில் உள்ள மட்டைகள் வீடு கூட பயன்படுத்தும் துடைப்பமாக பயன்படுகிறது. இப்படி பல வகையில் நன்மை வாய்ந்த தென்னை மரத்தை பற்றி 10 வரிகளில் காண்போம் வாங்க.
Thennai Maram Patri 10 Varigal Benefits:
கோக்கல் நியூசிஃபெரா என்பது தென்னை மரத்தில் தாவரவியல் பெயராக இருக்கிறது. சங்க காலத்தில் தென்னை மரத்திற்கு தெங்கு என்றும், தாழை என்ற பெயரும் இருக்கிறது. இந்த அம்மரத்தின் பூர்விகமாக இருப்பது இந்தியா மற்றும் இலங்கை ஆகும்.
பொதுவாக தென்னை மரங்கள் 60 மீட்டர் முதல் 90 மீட்டர் வரை வளர் கூடியதாக இருக்கிறது. இதற்கு கிளைகள் கிடையாது. மட்டை ஓலைகள் தான் காணப்படும். இந்த ஓலைகள் ஆனது 4.4 மீட்டர் வரை வளரக்கூடியது. தென்னை மரத்தில் பல வகைகள் இருந்தாலும் நெட்டை, குட்டை என இரண்டு வகைகள் தான் காணப்படுகிறது
குட்டை வகை தென்னை மரங்கள் ஆனது 30-40 வருடங்கள் வரை தன்னுடைய வாழ்நாளை கொண்டுள்ளது.
இந்த மரத்தில் அனைத்து பாகங்களும் நமக்கு நன்மையை தரக்கூடியதாக இருக்கிறது. இதில் இளநீர் ஆனது நம்முடைய உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. கோடைக்காலத்தில் தாகத்தை தணிக்க கூடிய சிறந்த பானமாக இருக்கிறது.
வீட்டில் தென்னை மரம் இருந்தால் மட்டும் போதாது இந்த விஷயமும் தெரிந்திருக்கணும்
இதில் உள்ள தேங்காய் ஆனது நம்முடைய நாட்டில் சமையலில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் தேங்காய் எண்ணெயானது சமையலுக்கு உதவுவது மட்டுமில்லாமல் தலைக்கு எண்ணெய் தடவவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதனுடைய தேங்காய் துருவல் ஆனது ஸ்வீட் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
தென்னையில் உள்ள மட்டையானது வீட்டை கூட்ட பயன்படுத்தப்படும் துடைப்பம் தயாரிக்கவும் பயன்படுகிறது. வீட்டு மேல் கூரையாக பயன்படுத்துவதற்கும் உதவுகிறது.
தென்னை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் காய்ந்து போன பிறகு அடுப்பு எரிக்க உதவுகிறது. இதில் உள்ள நார் ஆனது கயிறு தயாரிக்கவும், பாத்திரத்தை சுத்தப்படுத்தும் நாராகவும் உதவுகிறது.
தேங்காய் நாரிலிருந்து வரும் கழிவானது தாவரங்களுக்கு உரமாகவும் பயன்படுகிறது. தென்னை ஓலையினை பயன்படுத்தி விசிறி தயாரிக்கலாம்.
இதில் இருக்கும் குருத்தோலை பயன்படுத்தி வீட்டில் தோரணம் கட்டலாம். இதனுடைய வேரை கஷாயம் ஆக செய்து குடித்தால் உடலில் உள்ள படை சொறி, தோல் நோய், நாக்கு வரட்சி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |