வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழ் விடுகதைகள் | Tamil Vidukathaigal

Updated On: April 7, 2025 6:48 PM
Follow Us:
Vidukathai in Tamil
---Advertisement---
Advertisement

தமிழில் விடுகதைகள் கேள்வி பதில் | Vidukathai in Tamil With Answers

vidukathai in Tamil:- விடுகதை என்பது நாட்டுப்புற மக்களின் சிந்தனை திறனுக்கு தக்க சான்றிதழ் ஆகும். விடுகதை என்பது மறைபொருளிலிருந்து பொருள் விளக்கும் முயற்சியே விடுகதை. வினா எழுப்பி விடையளிக்குமாறு இவ்விடுகதைகள் அமையும். அறிவூட்டுவது சிந்தனையைத் தூண்டுவது இதன் நோக்கமாகும். இத்தகைய விடுகதைகளை விரும்பாதவர்கள் எவரும் இருக்க இயலாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விடுகதை மிகவும் பிடிக்கும். விடுகதைக்கு விடை தெரியவில்லை என்றால் அதற்கு விடை தெரிந்துகொள்ள வேண்டும் என்று அதிக ஆர்வம் கொள்வோம்.

அந்த வகையில் இந்த பதிவில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சில விடுகதைகளை விடையுடன் பட்டியலிட்டுள்ளோம். அவற்றை இப்பொழுது படித்தறிய தயாரா..?

Vidukathai in Tamil With Answer:

  1. நான் காற்றை போன்று எடை இல்லாதவன் ஆனால் நான் இருந்தால் எடை குறையும் நான் யார்?

விடை: ஓட்டை.

2. நீ அழுதால் நான் அழுவேன், நீ சிரித்தால் நான் சிரிப்பேன் நான் யார்?

விடை: கண்ணாடி.

3.காலால் தண்ணீர் குடித்து, தலையால் முட்டையிடுவான் அவன் யார்?

விடை: தென்னைமரம்.

4. மிருகங்கள் இல்லாத காடு எது?

விடை: முக்காடு.

5. அவனை தொட்டால் ஒட்டிக் கொண்டு உயிரை பறிப்பான் அவன் யார்?

விடை: மின்சாரம்.

6.சுடாத இரட்டை குழல் துப்பாக்கி, அது என்ன?

விடை: மூக்கு

7. கவசத்துடன் பிறந்தவன் நான் ஆனால் கர்ணன் அல்ல நான் யார்?

விடை: ஆமை.

8 அவன் வந்தாலும் பிரச்சனை, அவன் வரவில்லை என்றாலும் பிரச்சனை அவன் யார்?

விடை: மழை.

9 ராஜா உண்டு, ராணி உண்டு, ஏன் மந்திரியும் உண்டு ஆனால் நாடு இல்லை அது என்ன?

விடை: சீட்டு கட்டு.

10. மெல்ல மெல்ல செல்லும் ஆனால் கீழே வராது அது என்ன?

விடை: வயது.

11 இது உங்களுக்கு மட்டுமே சொந்தமானது ஆனால் உங்களை தவிர மற்றவர்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள் அது என்ன?

விடை: உங்கள் பெயர்.

12. உயரமான இடத்தில் இருந்து தூக்கி எரிந்தாலும் அதற்கு ஒன்றும் ஆகாது, ஆனால் தண்ணீரில் போட்டால் செத்துவிடும் அது என்ன?

விடை: காகிதம்.

13. இளமையில் இது நீளமாக இருக்கும், ஆனால் வயதானால் சுருங்கிவிடும் அது என்ன?

விடை: மெழுகுவர்த்தி

14. ராணியின் அம்மாவிற்கு 4 குழந்தைகள் அவர்கள் தருண், வருண், அருண் மற்றும் —–?

விடை: ராணி

15. எத்தனை முறை சுற்றினாலும் தலை சுற்றாது அது என்ன?

விடை: மின்விசிறி.

16. உடம்பு இல்லாத எனக்கு தலையுடன், பூ உண்டு நான் யார்?

விடை: நாணயம்

17. கண்ணில்லாத எனக்கு அழமுடியும் ஆனால் பார்க்க கூடியது நான் யார்?

விடை: := மேகம்.

18. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப்பலகை அது என்ன?

விடை: நாக்கு.

19. மழையில் வளர்ந்து வெயிலில் கிடக்கிறான் அவன் யார்?

விடை: காளான்.

20. எல்லோருக்கும் கிடைக்காத மதி, ஆனால் எல்லோரும் விரும்பும் மதி அது என்ன?

விடை: நிம்மதி.

விடுகதைகள் மற்றும் விடைகள் – Tamil Vidukathaigal:

1.பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்?

விடை: தேன்

2.நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?

விடை: சிலந்தி

3.உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?

விடை: தக்காளி

4,. ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன?

விடை: தோடு

5. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்?

விடை: நுங்கு

6. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?

விடை: தொலைபேசி

7. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்?

விடை: சிலந்தி

8. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன ?

விடை: ஊசி

காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன?

விடை:

10. ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?

விடை: துடைப்பம்

Vidukathai jokes in Tamil:

1.கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?

விடை:நெருப்பு

2.தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன?

விடை:க‌ண் இமை

3. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார் ?

விடை:மெட்டி

4. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன?

விடை:வாழை

5. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ?

விடை: தலை வகிடு

6. தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார்?

விடை: இள‌நீ‌ர்

7. வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன?

விடை: உப்பு

8. அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?

விடை: மயில்

9. வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி அது என்ன?

விடை: மயில்

10. காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம் கடுந்தவம் செய்கிறான் அவன் யார்?

விடை: கொக்கு

Vidukathai in Tamil With Answer Tamil:

1. பிடுங்கலாம் நட முடியாது அது என்ன..?

விடை: தலைமுடி

2. அடித்தாலும், உதைத்தாலும் அழ மாட்டான் அவன் யார்?

விடை: பந்து

3. யாரும் ஏறமுடியாத மரம், கிளைகள் இல்லாத மரம் அது என்ன?

விடை: வாழை

4. ஆயிரம் அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மிட்டாய் கடை அது என்ன?

விடை: தேன்கூடு

5. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்..?

விடை: கரும்பு

6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன..?

விடை: பட்டாசு

7. உதை வாங்கி, உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்வான் அவன் யார்?

விடை: தண்டோரா

அறிவியல் விடுகதைகள்

8. வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?

விடை: ஆமை

9. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?

விடை: பூரி

10. வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான் அவன் யார்?

விடை: மோதிரம்

11.இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

விடை: தேள் 

12. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

விடை : தலைமுடி

13. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?

விடை : வெங்காயம்

14. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?

விடை : கரும்பு

15. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?

விடை : விழுது

16. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?

விடை : வெண்டைக்காய்

17.எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?

விடை : அடுப்புக்கரி

விடுகதைகள் மற்றும் விடைகள் – Vidukathai Tamil With Answer

1. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன?

விடை: தராசு

2. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?

விடை: வாழைப்பூ

3. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?

விடை: விரல்கள்

4. இரவல் கிடைக்காதது, இரவில் கிடைப்பது அது என்ன?

விடை: தூக்கம்

5. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?

விடை: முட்டை

6. பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ அது என்ன?

விடை: வாழைப்பூ

7. இதயம் போல் துடித்திருக்கும் இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன?

விடை: கடிகாரம்

8. உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?

விடை: எதிரொலி

9. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?

விடை: இமை

10. காலைக்கடிக்கும் செருப்பல்ல காவல் காக்கும் நாயல்ல அது என்ன?

விடை: முள்

விடுகதை வினா விடைகள் | Vidukathai Tamil With Answer

1. அமைதியான பையன் ஆனால் அடிக்காமலேயே அழுவான் அவன் யார்?

விடை: ஐஸ் கட்டி 

2. சின்னச் சின்ன அறைகள் உண்டு, இது வீடு அல்ல. சிறந்த அழகு கொண்டிருக்கும் சித்திரமும் அல்ல. காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு. கோட்டையும் அல்ல அது என்ன?

விடை: தேன் கூடு 

3. ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் ஓடுவான்.. ஒருவன் நடப்பான் அவன் யார்?

விடை: கடிகாரம்

4. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?

விடை: உப்பு 

5. எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?

விடை: குடை 

6. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?

விடை: மீன் வலை 

7. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?

விடை: தொலைபேசி

8. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?

விடை: அலாரம்

9. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம் – நான் யார்?

விடை: அஞ்சல் பெட்டி 

10. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?

விடை: நிலா 

Comedy Vidukathai in Tamil With Answer

விடுகதைகள் மற்றும் விடைகள் – vidukathai in tamil with answer

11. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?

விடை: மெழுகுவத்தி

12. ஆடும் வரை ஆட்டம், ஆடிய பின் ஓட்டம் அது என்ன ?

விடை: இதயம்

13. நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன?

விடை: தலை முடி

14. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?

விடை: தேங்காய்

15. ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது. அது என்ன?

விடை: இதயம்

16. உங்களுக்கு சொந்தமான ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?

விடை: பெயர்

17. இலையுண்டு கிளையில்லை, பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை, பட்டை உண்டு கட்டை இல்லை, கன்று உண்டு பசு இல்லை அது என்ன?

விடை: வாழை

18. இவனும் ஒரு பேப்பர் தான் ஆனால், மதிப்போடு இருப்பான். அது என்ன?

விடை: பணம்

19. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.

விடை: கொசு

20. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?

விடை: தராசு

விடுகதை வினா விடைகள் 

21. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

விடை: கண்

22. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?

விடை: விக்கல்

23. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது?

விடை: செருப்பு

24. உணவு கொடுத்தால் வளரும் நீர் கொடுத்தால் அழியும். அது என்ன?

விடை: நெருப்பு

25.நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?

விடை: தென்றல்

26. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. அது என்ன?

விடை: வானம்

27. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன?

விடை: குளிர்

28. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன?

விடை: சூரியன்

29. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?

விடை: தொட்டா சுருங்கிச் செடி

30. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?

விடை: பம்பரம்

தமிழ் விடுகதைகள் வினா விடை 

31. அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?

விடை: நீர் 

32. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?

விடை: நிலா 

33. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?

விடை: கத்தரிக்கோல் 

34. மூன்றெழுத்து பெயர், முற்றும் வெள்ளை நிறம் அது என்ன?

விடை: பஞ்சு 

35. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?

விடை: விக்கல்

விடுகதை வினா விடைகள் 

  1. ஒட்டியவன் ஒருவன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன..?

விடை: கடிதம் 

2. அந்தரத்தில் தொங்குது சொம்பும் தண்ணீரும். அது என்ன..?

விடை: இளநீர்

3. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்..?

விடை: எறும்பு 

4. காலால் தண்ணீர் குடித்து தலையால் முட்டை விடுவான் அவன் யார்..?

விடை: தென்னை மரம் 

5. உடம்பு இல்லாத எனக்கு தலையுடன், பூ உண்டு நான் யார்..?

விடை: நாணயம் 

6. ஏழை படுக்கும் பாய் எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை அது என்ன..?

விடை: பூமி 

7. கண் இல்லாத நான் பார்வை இல்லாதவர்களுக்கு பாதை காட்டுவேன் நான் யார்..?

விடை: கைத்தடி

8. சின்னஞ் சிறு வீட்டில் சிப்பாய்கள் பல பேர் அது என்ன..?

விடை: தீக்குச்சி 

தொட்டால் மணக்கும் குடித்தால் புளிக்கும் அது என்ன..?

விடை: எலுமிச்சை பழம் 

9.முற்றத்தில் நடப்பாள் மூலையில் கிடப்பாள் அவள் யார்..?

விடை: துடைப்பம் 

10. உரசினால் போதும் உயிர் முடிந்து போகும் அது என்ன..?

விடை: தீக்குச்சி

11. கால் நான்கு நடக்காது கண் ஆயிரம் இமைக்காது அது என்ன..?

விடை: நாற்கட்டில் 

12. உயிர் இல்லாப் பறவை ஊர் விட்டு ஊர் செல்லும் அது என்ன..?

விடை: கடிதம் 

13. தாய் இனிப்பாள், மகள் புளிப்பாள், பேத்தி மணப்பாள் அது என்ன..?

விடை: பால், மோர், நெய் 

14. பறிக்க பறிக்க பெரிதாகும் அது என்ன..?

விடை: குழி 

15. கையும் இல்லை, காலும் இல்லை நான் ஓடிக்கொண்டே இருப்பேன் யார் தெரியுமா..?

விடை: நேரம்

 

மேலும் விடுகதை கேள்வி பத்திகளை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள்
விடுகதைகள் | Vidukathaigal
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள்
குழந்தைகளுக்கான விடுகதைகள்
விடுகதை விளையாட்டு விடைகள்
கணக்கு விடுகதைகள்
தமிழ் விடுகதைகள் 400 With Answer
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now