புதிதாக வீடுக் குடிப்போறவர்கள் கட்டாயமாக இதை பண்ண வேண்டும்
புதிதாக வீடுக் குடிப்போறவர்கள் கட்டாயமாக வீட்டின் முன் விநாயகர் சிலை அல்லது, விநாயகர் புகைப்படம் போன்றவற்றை வைப்பது நல்லது, ஏனென்றால் விநாயகர் பார்ப்பதற்கும் மங்களரமானது கண்திருஷ்டிகள் படாமல் பாதுகாப்பதற்கும், அதிர்ஷ்டத்தை பெருக்கிடவும். செழிப்பை அதிகரிக்கவும், தடைகளை அகற்றிடவும் செய்கிறது. நாம் எந்தவொரு சுபகாரியங்களை செய்வதற்கு முன்பும் விநாயகரை வழிப்பட்டுவிட்டு தொடங்குகிறோம். ஏனென்றால் விநாயகரின் எல்லா உறுப்புகளும் ஒவ்வொரு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதனால் நமக்கு எதிர்மறையான ஆற்றலை தடுத்து நன்மையை அளிக்கிறது.
மேலும், விநாயகர் சிலையை மேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் விநாயகரை வைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. விநாயகரை தெற்கு நோக்கி வைத்தால் தடையாக கருதப்படுகிறது மற்றும் உங்கள் வீட்டின் நுழைவாயிலின் வெளியேறும் திசையை நோக்கி விநாயகரை வைக்க வேண்டும். கூறப்பட்டுள்ள திசையில் விநாயகரை வைப்பதன் மூலம் வீட்டை சுற்றி இணக்கமாகவும் ,நேர்மறை ஆற்றலை அளிக்கிறது.
வீட்டின் எந்த இடத்தில் விநாயகர் சிலையை வைக்க கூடாது:
- வீட்டின் படுக்கையறை, கழிவறை, குளியலறை போன்ற இடங்களில் விநாயகரை வைக்ககூடாது.
- வீட்டில் வெள்ளைநிற விநாயகரை வைப்பது நல்லது. சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பிரகாசமாக காட்சியளிக்கிறார்.
- ஆனால் ,வீட்டில் செழிப்பு, மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வம் பெறுக வெள்ளைநிற விநாயகர் சிறந்ததாகும்.
- விநாயகர் சிலை வைப்பவர்கள் விநாயகருக்கு கட்டாயமாக வாரம் 3 முறை பூஜை செய்திருக்க வேண்டும்.
- மேலும், விநாயகருக்கு முக்கியமான நாளான சதுர்த்தி போன்ற நாட்களில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

வீட்டில் எத்தனை சிலை வைக்கலாம்:
- வீட்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிலைகள் வைக்கலாம்.
- விநாயகர் சிலையை வைத்து வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி,செல்வம் பெருகுதல் போன்ற நன்மைகள் ஏற்படும்.
- விநாயகரின் தும்பிக்கை இடதுபுறமாக இருக்கிறதா என்பதை பார்த்து விநாயகர் சிலையை வாங்க வேண்டும்.
- மேலும்,விநாயகர் சிலையை மேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் வைக்க வேண்டும்.
விநாயகர் சிலையின் வகைகள்
- விநாயகர் சிலையை பல்வேறு வகைகளில் செய்வார்கள், நாம் தேர்ந்தெடுக்கும் பொருள்களின் மூலம் விநாயகரின் சக்தி ஆற்றலை பாதிக்கிறது.
- வெள்ளியால் செய்யப்பட்ட விநாயகர் புகழுக்காகவும், மரத்தால் செய்யப்பட்ட விநாயகர் நல்ல ஆற்றலை தந்து நீண்ட ஆயுள் மற்றும் வாஸ்து தோஷங்களை குறைகிறது.
- களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் எதிர்மறை எண்ணம் மற்றும் தூக்கத்தை அகற்றும்.
- வேம்பு , பீப்பால் போன்ற விநாயகர் அதிர்ஷ்டத்தை அளிக்கிறது.














