Sildenafil Citrate Tablets Uses in Tamil
நம் தாத்தா பாட்டிகள் எல்லாம் தம்முடைய வாழ்நாள் முழுவதும் எந்த நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கே நோய்கள் ஏற்படுகிறது. இதனால் சரி செய்வதற்காக மருத்துவரை பார்த்தால் மாத்திரை, மருந்து தான் எழுதி தருகின்றனர். இதனால் நாம் வாழ்நாள் முழுவதும் எடுத்து கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படும். அதனால் நீங்கள்எடுத்து கொள்ளும் மாத்திரையின் நன்மை மற்றும் தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Sildenafil Citrate மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைமற்றும் ஊசி போன்றவற்றை தானாக வாங்கி பயன்படுத்த கூடாது..!
Sildenafil Citrate Tablets Uses:
Sildenafil Citrate மாத்திரையானது விறைப்பு குறைபாடு, நுரையீரல் உயர் இரத்த அழுத்தம், ஆண்குறி கோளாறுகள் போன்றவற்றை சரி செய்வதற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
பக்க விளைவுகள்:
- தலைவலி
- வயிற்றுப்போக்கு
- செவித்திறன் கேளாமை
- தூக்கமின்மை
- மூக்கடைப்பு
- தலைசுற்றல்
- நீரிழிவு நோய்
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை வேறு பக்க விளைவுகள் இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும்.
Fentanyl இன்ஜெக்ஷன் எதற்காக பயன்படுத்தப்படுகிறது
முன்னெச்சரிக்கை:
- இந்த மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை. மேலும் பெண்களுக்கு இந்த மாத்திரையை பரிந்துரைக்கப்படுவதில்லை.
- சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
- அலர்ஜி பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
- மேலும் நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டாலும் அதனை பற்றிய முழு தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
- உங்களுக்கு வேறு ஏதேனும் மாத்திரை எடுத்து கொண்டு அதனால் ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டிருந்தால் அதனை பற்றிய தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
- மேலும் இந்த மாத்திரைக்கு எடுத்து கொள்ளும் போது மயக்கம் ஏற்படும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
மருந்தளவு:
இந்த மாத்திரையை மருத்துவரை கூறிய அளவில் தான் விழுங்க வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது. அது போல இந்த மாத்திரையினை காபி அல்லது டீயில் விழுங்க கூடாது. தண்ணீரில் தான் விழுங்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |