ஆண்டு முழுவதும் கை நிறைய சம்பாதிக்க வேண்டுமா..? இந்த தொழிலை மட்டும் தொடங்கி பாருங்கள்..!

Advertisement

Avarampoo Tea Powder Manufacturing Business in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் குறிப்பாக சுயதொழில் ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் உங்களுக்கு பயன்படும் வகையில் தினமும் ஒரு சுயதொழில் பற்றி பார்த்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஆவாரம் பூ டீ பொடி தயாரிக்கும் தொழிலை பற்றிய தகவலை விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள ஆவாரம் பூ டீ பொடி தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Avarampoo Tea Powder Manufacturing Business Paln in Tamil:

Avarampoo Tea Powder Manufacturing Business Paln in Tamil

ஆவாரம் பூவில் பல சத்துக்கள் உள்ளதால் இதனை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இதனை அப்படியே தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிப்பது சிலருக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை.

எனவே நீங்கள் ஆவாரம் பூவை டீ பொடியாக தயார் செய்து விற்பனை செய்தீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் உடனடியாக இந்த ஆவாரம் பூ டீ பொடி தயாரிக்கும் தொழிலை தொடங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Avarampoo tea powder making business in tamil

இந்த ஆவாரம் பூவை டீ பொடி தயாரிக்க தேவையான பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள ஆவாரம் பூ, ஏலக்காய், கிராம்பு, பட்டை, சுக்கு, தேயிலை, மிக்சி மற்றும் Packing Machine போன்றவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> சும்மா கிடைக்கக்கூடிய பொருளை பயன்படுத்தி மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..!

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள ஆவாரம் பூ டீ பொடியினை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் மட்டும் போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் முதலில் நாம் வாங்கி வைத்துள்ள ஆவாரம் பூக்களை தண்ணீரை ஊற்றி நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அது நன்கு சருகு போல மாறும் வரை வெயிலில் காயவைத்து கொள்ளுங்கள்.

பிறகு ஒரு மிக்சி ஜாரில் நாம் காய வைத்து எடுத்து வைத்துள்ள ஆவாரம் பூக்கள், ஏலக்காய், கிராம்பு, பட்டை, சுக்கு மற்றும் தேயிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து சலித்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள ஆவாரம் பூ டீ பொடியை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் நாட்டு மருந்து கடைகள் போன்ற கடைகளுக்கு நீங்கள் நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படியில்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ ஆவாரம் பூ டீ பொடியின் விலை 350 – 450 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 கிலோ ஆவாரம் பூ டீ பொடியினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 3,500 – 4,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

ஒரு மாதத்திற்கு 1,05,000 – 1,35,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த ஆவாரம் பூ டீ பொடி தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> எவ்வளோ நாளைக்கு தான் ஒரே தொழிலை செய்வீங்க கொஞ்சம் Different-ஆ இந்த தொழிலை செய்து பாருங்க..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement