Dried Cape Gooseberry Business in Tamil
இன்றைய கால கட்டத்தில் அனைத்து இடங்களிலும் பணத்தின் தேவை என்பது அதிக அளவில் உள்ளது. அதிலும் குறிப்பாக நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட பணத்தின் தேவை என்பது மிகுந்து காணப்படுகின்றது. அதனால் நமக்கு தேவைப்படும் பணத்தை நாமே சம்பாதிக்க அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழில் அல்லது வியாபாரத்தை தொடங்க வேண்டிய அவசியம் உள்ளது.
அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் Dried Cape Gooseberry தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
Dried Cape Gooseberry Business Plan in Tamil:
இந்த Cape Gooseberry அல்லது சொடக்கு தக்காளி எனப்படும் காய்களில் பல வகையான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளதால் இதனை பலவகையான மருந்து பொருட்கள் தயாரிக்க ஒரு மூலப்பொருளாக உள்ளது.
அதனால் இந்த தொழிலை நீங்கள் தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைப்பது உறுதி.
தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த தொழில் தொடங்குவதற்கான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள சொடக்கு தக்காளி காய்கள், Fruit and Vegetable Dryer Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.
இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். அதே போல் Fruit and Vegetable Dryer Machine விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 4,000 ஆகும்.
Fruit and Vegetable Dryer Machine-னை பயன்படுத்தி ஒரு முறையில் 5 கிலோ காய்ந்த சொடக்கு தக்காளியை தயாரித்து கொள்ளலாம்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்கள் கையில் வெறும் 100 ரூபாய் இருந்தால் போதும் நீங்களும் முதலாளி ஆகலாம்
தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:
இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
மேலும் நீங்கள் தயாரிக்கும் காய்ந்த சொடக்கு தக்காளி நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள அல்லது பரித்து வைத்துள்ள நல்ல நிலையில் உள்ள சொடக்கு தக்காளி காய்களை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை Fruit and Vegetable Dryer Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான காய்ந்த நிலையில் உள்ள சொடக்கு தக்காளியை தயாரித்து தந்து விடும்.
பின்னர் அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளலாம்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த தொழில் செய்வதற்கு 1 ரூபாய் கூட முதலீடு தேவையில்லை ஆனால் லாபம் சும்மா அள்ளும்
வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:
நாம் காய வைத்து பேக்கிங் செய்து வைத்துள்ள சொடக்கு தக்காளியை நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்து தயாரிக்கும் இடம் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.
அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ காய வைத்த சொடக்கு தக்காளியின் விலை 580 ரூபாய் – 600 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால் தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 20 கிலோ காயவைத்த சொடக்கு தக்காளியினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 11,600 ரூபாய் – 12,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
தோராயமாக ஒரு மாதத்திற்கு 3,48,000 ரூபாய் – 3,60,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த காயவைத்த சொடக்கு தக்காளியை விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> நிறைய நபர்களுக்கு தெரியாத இந்த தொழிலை நீங்கள் தொடங்கினீர்கள் என்றால் என்றும் நஷ்டமே ஏற்படாது
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |