அதிக லாபம் தரும் வாடாமல்லி பூ பயிரிடும் முறை மற்றும் பயன்கள் !!!

Advertisement

வாடாமல்லி பயிரிடும் முறை மற்றும் பயன்கள்..!

என்றும் வாடாமல் இருப்பதினால் இதற்கு வாடாமல்லி பூ என்று பெயர்.

இது வறண்ட பகுதியில் கூட வளரக்கூடிய ஒரு செடியாகும்.

இந்த செடி குறிப்பாக 1 அல்லது 2 அடி உயரம் வரைதான் வளரும்.

வாடாமல்லி பூ வயலட் நிறத்தில் இருக்கும். இது சந்தையில் அதிகளவு விற்பனையாகும் பூவாகும்.

இதையும் படிக்க –> ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!

சரி வாங்க இன்று வாடாமல்லி பூ வகைகள் மற்றும் பயிரிடும் முறைகள் பற்றி பார்க்கலாம்.

வாடாமல்லி சாகுபடி முறை:

வாடாமல்லி சாகுபடி – இரகங்கள்:

இவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வயலட் நிறம் மற்றொன்று வெள்ளை நிறம் என்று இரண்டு ரகங்கள் உள்ளன.

வாடாமல்லி சாகுபடி – பருவகாலம்:

இந்த சாகுபடிக்கு ஆனி மாதம் பயிர் செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

வாடாமல்லி சாகுபடி- மண்:

தண்ணீர் தேங்காத செம்மண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றது.

விதையளவுகள்:

ஒரு ஏக்கருக்கு சாகுபடி செய்ய 10 ஆயிரம் நாற்றுகள் வரை தேவைப்படும்.

வாடாமல்லி சாகுபடி நாற்றுகள் தயாரித்தல்:

நிலத்தை நன்கு உழுது 3 x 10 செ.மீ அளவுள்ள பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பாத்தியின் மேல் மக்கிய தொழுஉரம் இட வேண்டும்.

பின்பு விதைகளை சீராக படுக்கையின் மீது தூவ வேண்டும்.

பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

இதையும் படிக்க –>செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!

விதை நேர்த்தி செய்யும் முறை:

500 கிராம் அசோஸ்பைரில்லத்தை 10 லிட்டர் நீரில் கரைத்து நடுவதற்கு முன் நாற்றை நனைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும்.

வாடாமல்லி சாகுபடி -நடவு முறை:

நிலத்தின் தன்மையை பொறுத்து, தேவைப்படும் அளவிற்கு ஏற்ப, பார்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

30 – 35 நாள் வயதுடைய நாற்றை 2 அடிக்கு 1 அடி என்ற விகிதத்தில் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். நாற்றை பார்களின் இருபுறமும் நடவு செய்யலாம்.

நீர் நிர்வாகம்:

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 5 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாசனம் செய்தால் போதுமானது.

வாடாமல்லி சாகுபடி உரமிடுதல்:

களை எடுத்தப்பின் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 25 கிலோ கடலைப்புண்ணாக்கு கலந்து செடிகளின் அடிப்பகுதியில் வைத்து மண் அணைக்க வேண்டும்.

வாடாமல்லி சாகுபடி பாதுகாப்பு முறை:

களை எடுக்க வேண்டும்:

நடவு செய்த 20வது நாள் மற்றும் 40 நாட்களில் களை எடுக்க வேண்டும். வயலில் களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு முறை:

காஞ்சாரை நோய் தாக்குதல்:

காஞ்சாரை நோய் தாக்குதல் என்பது செடியின் நுனி கருகி காணப்படும். அதே போல் வாடாமல்லி பூ கருகி காய்ந்துவிடும்.

இவற்றை கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து பயிருக்கு தெளிக்க வேண்டும்.

நூற்புழு தாக்குதல்:

நூற்புழு தாக்கினால் செடி மேலிருந்து கீழாக பட்டுக்கொண்டே வரும்.

இதனை கட்டுப்படுத்த நட்ட 40ம் நாள் அல்லது முதல் களையின் போது போரெட் அல்லது பியூரடான் குருணை மருந்துடன் டி.ஏ.பி அல்லது வேப்பம் புண்ணாக்கை சேர்த்து வயலில் தூவி விட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

வாடாமல்லி சாகுபடி – அறுவடை:

பூக்களின் தேவையைப் பொறுத்து சுழற்சி முறையில் அறுவடை செய்யலாம்.

வாடாமல்லி பூவின் பயன்கள்:

  • வாடாமல்லி பூக்களை பயன்படுத்தி சளி, இருமல், ஆஸ்துமாவுக்கான மருந்தை தயாரிக்கலாம்.
  • வாடாமல்லியை அரைத்து அதன் விழுது ஒரு கப், தயிர் ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து சருமத்தில் பூசினால், சருமமானது மிருதுவாக காட்சியளிக்கும்.
  • தோலின் கரிய நிறம் மாற்றம் அடையும். நுண் கிருமிகளை அழிக்கக் கூடிய தன்மை இந்த மலருக்கு உள்ளது.
  • நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக வாடாமல்லி விளங்குவதால், உடலின் அனைத்து உள்ளுறுப்புகளையும் பாதுகாக்கும் தன்மை உடையதாக விளங்குகிறது.
  • பீட்டா சயனீஸ், ஆல்பா சயனீஸ் என்று சொல்லக் கூடிய வேதிப்பொருட்கள் வாடாமல்லியில் காணப்படுகிறது.
  • இது போன்ற பல்வேறு வேதிப் பொருட்கள் காரணமாக வாடாமல்லி ஆன்டி பயாட்டிக்காக செயல்படுகிறது. .
  • இதனால் இருமலை தடுக்கக் கூடியதாகவும், காய்ச்சலை தணிக்கக் கூடியதாக வாடாமல்லி வேலை செய்கிறது.

இதையும் படிக்க –>கனகாம்பர பூக்கள் பயிரிடும் முறை மற்றும் பயன்கள்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும் – Pothunalam.com

 

Advertisement