கொடி வகை காய்கறிகள் சாகுபடியை எப்படி அதிகரிக்கலாம்..?

கொடி வகை காய்கறிகள்

கொடி வகை காய்கறிகள் சாகுபடி:

  • பரங்கிகாய், பாகற்காய், சுரைக்காய், புடலங்காய், வெள்ளரிகாய் போன்ற கொடி வகை காய்கறிகளில் பூக்கள் பெருமளவு தோன்றினாளும், பூக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு காய்கள் உருவாகுவதில்லை.
  • இதற்கு காரணம் அதிக அளவு ஆண் பூக்கள் உற்பத்தியாவதே காரணம்.
    பொதுவாக 15 முதல் 25 ஆண் பூக்களுக்கு ஒரு பெண் பூ என்ற விகிதத்திலேயே பூக்கள் தோன்றும்.
  • பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி மகசூலை அதிகப்படுத்துவதற்க்கு, வளர்ச்சி உரங்களை பயன்படுத்துவது அவசியமான தொழில்நுட்பமாகும்.

சரி இப்போது கொடி வகை காய்கறிகள் மகசூலை எப்படி அதிகரிக்கலாம் என்பதையும், கொடி வகை காய்கறிகள் சாகுபடி முறைகளையும் இப்போது நாம் காண்போம்.

அதிக லாபம் தரும் சாமந்தி !!!

கொடி வகை காய்கறிகள் வளர்ச்சி உரங்கள்:-

  • கொடி வகை காய்கறிகள் வளர்ச்சியை அதிகரிக்க எத்ரல் என்ற வளர்ச்சி உரங்களை 250 பி.பி.எம் அதாவது 10 லிட்டர் நீருக்கு 2.5 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து, விதைப்பு செய்து 15, 22, 29, 36-வது நாட்களில் தெளிக்க வேண்டும்.
  • இவ்வாறு செய்வதன் மூலம் பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
  • பரிந்துரைக்கப்பட்ட உரங்களை அளிப்பதோடு மட்டுமில்லாமல் காய்கறி நுண்ணுட்ட கலவையினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து, விதைத்த 30, 45 மற்றும் 60 வது நாட்களில் இலை வழியாக தெளிப்பதன் மூலம் பிஞ்சுகள் பழுத்து உதிர்வது தவிர்க்கப்படுகிறது. தரமான காய்களை அதிக அளவு பெற முடிகிறது.

கொத்தமல்லி சாகுபடி செய்து 45 நாளில் 30 ஆயிரம் வரை லாபம் பெறலாம்..!

கொடி வகை காய்கறிகள் சாகுபடி முறை..!

இந்த கொடி வகை காய்கறிகள் சாகுபடி பொறுத்தவரை பாகற்காய், புடலங்காய், பீர்க்கன் காய் வகை காய்கறி பயிர்கள் செய்யலாம். தற்போது பாகற்காயில் விவேக், அபிஷேக், ப்ரித்தி ஆகிய ரக விதைகள், புடலங்காய் கோ-1, கோ-2, பிகேஎம்-1, எம்டியு பிஎல்ஆர்(எஸ்ஜி-1) ஆகிய ரக விதைகள், பீர்க்கன்காய் கோ-1, கோ-2, அர்கா சுமீத் மற்றும் அர்கா சுஜாத் ஆகிய ரக விதைகளை விதைக்கலாம்.

கொடி வகை காய்கறிகள் சாகுபடி பொறுத்தவரை தொழு உரம், நிலங்களை நன்கு உழவு செய்து சமன் செய்த பின், 2.5 அடி அகலத்திற்கு இரண்டு மீட்டர் நீளம் இடைவெளியில் குழிகளை தோண்ட வேண்டும்.

இவற்றில், 30க்கு 30 செ.மீ., அளவில் ஆழம் இருக்கும் அளவிற்கு குழிகள் அமைத்து, 10 நாட்கள் ஆறப்போட வேண்டும்.

ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழு உரம், 10 கிலோ இட வேண்டும். மேலும் அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் 6:12:12 என்கிற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து கலவையை, 100 கிராம் அளவிற்கு இட வேண்டும்.

கொடி வகை காய்கறிகள் சாகுபடி பொறுத்தவரை பூ பூக்கும் தருணத்தில் ஒவ்வொரு குழிக்கும் 10 கிராம் தழை சத்தை இடவேண்டும்.

கொடி வகை காய்கள் சாகுபடி முறையில் பாகற்காய் விதை ஒரு ஏக்கருக்கு 4.5 கிலோ, புடலங்காய் விதை 1.5 கிலோ, பீர்க்கன்காய் விதை 1.5 கிலோ விதைகளை, ஒரு கிலோ விதைக்கு கேப்டான் அல்லது திரம் மருந்து 2 கிராம் என்ற அளவிற்கு கலந்து 24 மணி நேரம் வைத்த பின், விதைக்க வேண்டும்.

ஒரு குழியில், நான்கு விதைகள் விதைக்க வேண்டும். நன்கு வளர்ந்தவுடன், குழிக்கு இரண்டு செடிகள் வீதம் விட்டு, மீதம் உள்ள செடிகளை நீக்கி விட வேண்டும்.

விதைகள் முளைக்கும்வரையில் தண்ணீர் வாரம் ஒரு முறை பாய்ச்ச வேண்டும். பின்னர் களை நீக்க வேண்டும்.

கொடி வகை காய்கள் படர, மூங்கில் தட்டிகள் 2 மீட்டர் உயரத்திற்கு அமைக்க வேண்டும். இவற்றில் கொடி படருமாறு செய்ய வேண்டும்.

எத்ரல் கரைசலை இரு இலைகள் விட்ட பின், வாரம் ஒரு முறை தெளித்தால் ஆண் பூக்கள் எண்ணிக்கை குறைந்து, பெண் பூக்கள் அதிகரிக்கும்.

இவற்றில், புடலங்காய்க்கு ஒரு மில்லி எக்ரல் 10 லிட்டர் நீரிலும், ஏனைய பயிர்களுக்கு 2.5 மி.லிட்டர் மருந்தை 10 லிட்டர் நீரிலும் கலக்க வேண்டும்.

சாம்பல் நோய் கட்டுப்படுத்த டை நோ காபர் ஒரு மில்லி அல்லது கார்பன்டைசிம் 0.5 கிராம் மருந்தை, ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அடி சாம்பல் நோய் கட்டுப்படுத்த மான்கோசெப் அல்லது குளோரோதளானில் இரண்டு கிராம், ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாட்கள் இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும்.

இந்த நுட்பத்தில் பாகற்காய் மற்றும் பீர்க்கன்காய்களை 60 நாட்களில் இருந்து அடுத்த ஒரு வாரம் வரையில் அறுவடை செய்யலாம்.

புடலங்காய் 80 நாட்களில் இருந்து அறுவடை செய்யலாம். இவற்றின் மூலம் 14 டன் பாகற்காய், 18 டன் புடலங்காய், 14 டன் பீர்க்கங்காய் அறுவடை செய்யலாம்.

மஞ்சள் சாகுபடி முறை..!

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்..!