வாழைத்தார் பெருக்க | Banana Bunch Feeding in Tamil
பொதுவாக அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் கண்டிப்பாக உள்ள ஒரு பழம் என்றால் அது வாழைப்பழம் தான். வாழைப்பழத்திற்க்கு என்று தனி சிறப்புகள் உள்ளது. இத்தகைய வாழைப்பழத்தில் செவ்வாழை, பூவம் பழம், கற்பூரவள்ளி மற்றும் பச்சை வாழைப்பழம் என பல வகைகள் இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் பெரும்பாலன வீடுகளேயே வாழை மரம் வளர்த்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பூவம் வாழை மரத்தினை அதிகமாக வளர்த்து வருவார்கள். நாம் வாழைமரக் கன்றினை சிறியதில் இருந்து பார்த்து பார்த்து நிறைய ஊட்டச்சத்துக்களை போட்டு வளர்த்து வருவோம். ஆனால் பெரிதாக மரம் வளர்ந்த பிறகு அதில் வைக்கும் வாழைக்குலை மட்டும் மிகவும் சிறியதாக காணப்படும். இந்த பிரச்சனை பெரும்பாலான வீடுகளில் காணப்படுகிறது. ஆகையால் இத்தகைய பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் விதமாக இன்று வாழைமரத்தில் வைக்கும் வாழைத்தார் பெருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
செடி முருங்கைக்கு இந்த ஒரு கரைசலை கொடுங்கள்.. தாறுமாறாக காய்கள் காய்க்கும்
Banana Bunch Feeding:
உங்களுடைய வீட்டில் வாழை மரம் இருந்தால் அதனை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அதன் பிறகு வாழை மரம் மரத்திற்கு சரியான அளவில் தண்ணீர் மற்றும் உரங்களை அளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்து முடித்த பிறகு நீங்கள் நடவு செய்த வாழைமரம் 3 மாதத்திற்கு பிறகு குலைகள் விட ஆரம்பித்து விடும். இப்போது இத்தகைய குலைகள் பெரிதாக வளர்வதற்கு சில முறைகளை பின்பற்ற வேண்டும்.
வாழை குலை பெருக்க:

- யூரியா- 7.5 கிராம்
- சல்பேட் பொட்டாசியம்- 7.5 கிராம்
- மாட்டுச்சாணம்- 500 கிராம்
- தண்ணீர்- 100 மில்லி
ஊட்டச்சத்து தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு பெரிய வாலியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த வாலியில் யூரியா மற்றும் பொட்டாசியத்தை சேர்த்து சிறிது நேரம் கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு வாலியில் உள்ள பொருளுடன் எடுத்துவைத்துள்ள மாட்டுச்சாணம் மற்றும் தண்ணீரை அதில் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். இப்போது ஊட்டச்சத்துக் கரைசல் தயார்.
பயன்படுத்தும் முறை:

தயார் செய்து வைத்துள்ள ஊட்டச்சத்து கரைசலை ஒரு பாலீத்தீன் கவற்றில் ஊற்றி பின்பு அந்த கவரை வாழைக்குலையின் நுனியில் சணலால் கட்டி வைத்து விடுங்கள்.
15 நாட்கள் கழித்த பிறகு இந்த கவரை மரத்தில் இருந்து வெளியேற்றி விடுங்கள். இத்தகைய முறையினை பின்பற்றுவதன் மூலம் 15 நாட்கள் கழித்து 10 செ.மீ முதல் 12 செ.மீ வரை நீளமாக வளர்ந்து இருக்கும்.
மற்றொரு டிப்ஸ்:
இந்த ஊட்டச்சத்து கரைசல் முறையினை நீங்கள் பின்பற்றினாலும் கூட வாழைக்குலையின் நுனியில் உள்ள சூழ்முடியினை நாம் கிள்ளி விடுவதன் மூலம் வாழைத்தார் நன்றாக பெரிதாக வளரும்.
தழைச்சத்து உரங்கள்:
வாழை மரத்திற்கு தழைச்சத்தை கொடுப்பதன் மூலம் வாழை மரம் நன்றாக காய்க்க தொடங்கும். எனவே, நம் முன்னோர்கள் வாழை மரத்திற்கு தழைச்சத்து நிறைந்த உளுந்தினை உரமாக கொடுத்து வந்தனர்.
ஆனால், தழைச்சத்தினை யூரியா என்ற பெயரில் கடைகளில் வாங்கி உரமாக கொடுக்கிறோம். மேலும், தழைச்சத்திற்கு மீன் அமிலம் மற்றும் மாட்டு கோமியம், ஆட்டு எருது, கடலை பிண்ணாக்கு கரைசல் போன்றவற்றில் அதிக தழைச்சத்து உள்ளது. எனவே, இதனை வாழை மரத்திற்கு உரமாக கொடுப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.
தென்னை மரத்தின் குரும்பை மற்றும் பூக்கள் கொட்டுவதை தடுக்க இதை செய்யுங்க போதும்
மணிச்சத்து உரங்கள்:
தாவரத்திலன் மகசூலை அதிகப்படுத்தி தருவதில் முக்கிய பங்கு வகிப்பது மணிச்சத்து உரங்கள் தான். எனவே, இயற்கையான மணிச்சத்து அடங்கிய எள்ளுப்புண்ணாக்கு கரைசலை உரமாக கொடுக்கலாம் அல்லது செயற்கையாக சூப்பர் பாஸ்பேட் உரத்தினை கொடுக்கலாம்.
சாம்பல் சத்து:
வாழை மரத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாம்பல் சத்து மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே, வாழைமரத்திற்கு சாம்பல் கரைசலை உறங்க கொடுக்கலாம் அல்லது பொட்டாசியம் உரத்தினை கொடுக்கலாம்.
இந்த மூன்று சத்துக்களையும் வாழை மரத்திற்கு கொடுப்பதன் மூலம் அதிக மகசூலை பெறலாம்.
உரம் மற்றும் ஊட்டச்சத்து:
நைட்ரஜன் – தளிர்கள் வளர்ச்சிக்கு வேண்டும்.
பாஸ்பரஸ் – வேர்வளர்ச்சிக்கு உதவுகிறது.
பொட்டாசியம்– பழங்களின் தரத்திற்கும் அளவிற்கும் தேவைப்படுகிறது.
தரமான நாற்று தேர்வு செய்யவும்
வாழை மரத்துக்கு போதுமான நீர் மற்றும் உரங்கள் அளிக்கவும்
குலை வளர்ச்சி அதிகரிக்க மலரை முற்றிலும் நீக்க வேண்டும்.
பழத்துக்கான பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.
மாமரத்தில் பூ வைக்க வில்லையா.. அப்போ இதை மட்டும் மாமரத்திற்கு போடுங்கள்.. தாறுமாறாக பூ வைக்கும்…
| இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |














