வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மிளகாய் செடியின் வளர்ச்சி மேம்படுத்தி மகசூலை அதிகரிக்க….

Updated On: April 9, 2025 7:13 PM
Follow Us:
chilli plant fast growth in tamil
---Advertisement---
Advertisement

மிளகாய் மகசூலை அதிகரிக்க 

நமது வீட்டிற்கு தேவையான காய்களை நமது வீட்டிலே பயிர் செய்தால் அது மனதிற்கு புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமான காய்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கும். ஆனால் நம்மால் வீடுகளில் காய்களை பயிர் செய்ய  முடியுமா ? கண்டிபாக முடியும். ஆனால் அதனை நாம் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். சில வீடுகளில் காய்களை பயிர் செய்து இருப்போம் ஆனால் அது சரியாக வளர்ச்சி அடைந்து போதுமான காய்களை வழங்காது. அதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லாதது தான்.

செடிகளை பயிரிட்டு அதற்கு தேவையான தண்ணீரை விட்டால் போதாது, அதனை நாம் முறையாக பராமரிக்க வேண்டும். அந்த செடிக்கு தேவையான சத்துக்களை குறிப்பிட்ட காலத்திற்கு சரியாக வழங்க வேண்டும். இன்றைய பதிவில் வீட்டு தோட்டத்தில் மிளகாய் எப்படி பயிர்செய்வது என்றும் அதன் மகசூலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்றும் பார்க்கலாம்.

மிளகாய் மகசூலை அதிகரிக்க:

நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் முக்கியமானதாக இருக்கும் பச்சை மிளகாய் விளைச்சலை, இனி உங்க தோட்டத்தில் சிறப்பான முறையில் செய்ய சில டிப்ஸ்…

காலநிலை:

மிளகாய் வளர வருடம் 25 முதல் 30 cm மழை உள்ள பகுதிகள் ஏதுவானது. தேவைப்படும்.

நிலத்தில் சரியான அளவு ஈரப்பதம் இருந்தால் மகசூல் அதிகரிக்கும்.

இது மழைக்காலத்திலும் இந்த பயிர்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும்.

மண் தேவை:

மிளகாய் அனைத்து வகையான மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது.

மிளகாய் அதிக விளைச்சலுக்கு களிமண் சிறந்தது.

மண்ணின் pH மதிப்பு  6 முதல் 6.8 வரை இருந்தால் சிறந்தது.

நிலம் தயாரித்தல்:

மிளகாய் மகசூலை அதிகரிக்க 

மிளகாய் பயிரிட போகும் நிலத்தை 2 அல்லது 3 முறை உழவு செய்ய வேண்டும்.

நிலத்தினை உழவு செய்யும் போது, ​​நன்கு மக்கிய தொழு உரம் எக்டருக்கு 25 டன் என்ற கணக்கில் ஈட்டு ம்,மண்ணினை தயார்படுத்த வேண்டும்.

வேப்பம் பிண்ணாக்கு செடியின் வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகரிக்க உதவும்.

விதைக்க கூடிய காலம்:

கோடை காலத்தில், 1 எக்டருக்கு 5 முதல் 6 கிலோ விதைகளை விதைக்கலாம். அதுவே மழைக்காலத்தில், 8 முதல் 12 கிலோ விதைக்க வேண்டும்.

விதைகளை விதைப்பதற்கு முன் பாவிஸ்டின் (0.2%) கரைசலில் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த விதைகளை நிழலில் உலர வைக்க வேண்டும்.

மழை காலத்தில் 60 x 30 செ.மீ இடைவெளியிலும், கோடை காலத்தில் 30 x 30 செ.மீ இடைவெளியிலும் விதைகளை விதைக்க வேண்டும்.

நீர்ப்பாசனம்:

கோடையில், பயிர் வேகமாக வளர மண்ணில் பொருத்தமான ஈரப்பதம் தேவைப்படுகிறது.  முழு விளைச்சலுக்கு சீரான ஈரப்பதம் தேவைப்படுவதால் சொட்டு நீர் பாசனம் பயிர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உரங்கள் மற்றும் உரங்கள்:

மிளகாய் வளர்ச்சிக்கு அதிக கரிம உரம் தேவைப்படுகிறது. அதனால் நிலத்தை உழும் போதே தொழு உரம் ஈட வேண்டும்.

அறுவடை:

நடவு செய்த 35-40 நாட்களில் பூக்கத் தொடங்கிவிடும். 55 முதல் 65 நாட்களில் அறுவடை செய்யலாம்.

பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருட்களை கொண்டு உங்க ரோஜா செடியை கொத்து கொத்த பூக்க வைக்கலாம்.

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now