வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தோட்டத்தில் பூச்செடிகளை வளர்ப்பவர்கள் கண்டிப்பாக இந்த தவறுகளை மட்டும் பண்ணிடாதீங்க..!

Updated On: June 24, 2025 6:16 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Flower Gardening Mistakes to Avoid in Tamil

என்ன தான் இன்றைய சூழலில் அனைவரின் வீடுகளிலும் ஒரு சிறிய அளவிலான தோட்டம் அல்லது மாடி தோட்டத்தை அமைத்து அதில் பலவகையான செடிகளை வளர்த்தாலும் நமது வீடுகளில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே மிக மிக பிடித்து வளர்க்கும் செடிகள் என்றால் அது பூச்செடிகள் தான். ஏனென்றால் பூச்செடிகள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும்.

அதாவது அவற்றின் நறுமணம் மற்றும் வண்ணங்களினால் பார்ப்பவர்களின் மனதில் இடம் பிடித்து மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆனால் நாம் நமது தோட்டத்தில் வளர்க்கும் பூச்செடிகள் அதிக அளவு பூக்கவில்லை என்றால் நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் தான் நாம் நமது தோட்டத்தில் பூச்செடிகளை வளர்க்கும் பொழுது ஒரு சில தவறுகளை செய்துவிடுவோம். அது என்ன தவறு அதனை செய்யாமல் தவிர்ப்பது என்பதை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம்.

பூச்செடிகளை வளர்க்கும் பொழுது செய்ய கூடாத தவறுகள்:

Flowers

தவறான நீர்ப்பாசனம்:

ஒரு தாவரம் வளர வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக தேவைப்படுவது நீர்ப்பாசனம். நாம் அனைவருமே தாவரங்களின் மேற்பகுதியில் தான் நீர்ப்பாசனம் செய்வோம். ஆனால் அது தவறு நாம் முதலில் வேர்களுக்கு தான் தண்ணீரை அளிக்க வேண்டும்.

அதேபோல் செடிகளுக்கு நன்கு வெயில் உள்ள நேரங்களில் தண்ணீர் பாய்ச்சகூடாது. மேலும் அதிக அளவு தண்ணீரை பாய்ச்சகூடாது.

தாவரங்களை நறுக்கிவிட வேண்டும்:

பொதுவாக ஒரு தாவரத்தின் இறந்துபோன அல்லது பூக்காத பகுதிகளை சரியாக நறுக்கி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தாவரங்களின் ஆற்றல் சேமிக்கப்பட்டு மற்ற பகுதிகளுக்கு சென்று அவற்றுக்கு பலத்தை அளிக்கும்.அது போல இலைகள் ஆனது வாடி போகிருந்தாலும் சரி, பூச்சி வந்திருந்தாலும் அந்த பகுதியை நறுக்கி விட வேண்டும். அப்போது தான் மற்ற பகுதிகளை பாதிக்கமால் இருக்க கூடும்.

இதை 1 கிளாஸ் ஊற்றுங்கள் காய்காத நெல்லிக்காய் மரமும் கிலோ கணக்கில் காய்க்க தொடங்கும்

காலநிலை:

நாம் தாவரங்களை நடவு செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று காலநிலை நிலைமைகள். ஏனென்றால், தாவரங்கள் பழுக்க வைப்பதில் காலநிலை முக்கிய பங்கு வகிக்கிறது. வளர வாய்ப்புள்ள காலநிலையில் நீங்கள் நடவு செய்வது முக்கியம் ஆகும்.

இடம்:

Flower Gardening Mistakes in Tamil

சில தாவரங்கள் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நேரடி சூரிய ஒளி தேவை. இத்தகைய செடிகளை நேரடி சூரிய ஒளிபடும் இடங்களில் நடவு செய்தால் அது நன்கு வளரும். மாறாக இத்தகைய செடிகளை நீங்கள் நிழலில் வைத்து வளர்த்தால் அது சரியாக வளராமல் போகிவிடும். ஒரு செடி வளர்வதற்கு சூரிய ஒளி முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

அதேபோல் தாவரங்களை மிக நெருக்கமாக வைப்பது தவறான நடைமுறையாகும். தாவரங்கள் வளர தேவையான இடத்தைப் புறக்கணிப்பது நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த நோய்கள் ஒரு தாவரத்திலிருந்து மற்றொரு தாவரத்திற்கு பரவும், இதனால் அனைத்து தாவரங்களும் அழிக்கப்படுகின்றன. ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் இடைவெளி இருந்தால் தான் செடிகள் நன்றாக வளரசபை அடையும்.

மேலும், செடிகளை மிக அருகில் வைப்பதால் அவை வளர இடம் கிடைக்காது. எனவே, இரண்டு தாவரங்களுக்கு இடையில் போதுமான இடைவெளி வைத்திருப்பது முக்கியம்.

கொத்தமல்லி செடியில் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now