Guava Tree Fertilizer in Tamil
அனைவரது வீட்டிலும் வளர்க்கக்கூடிய மரங்களில் முக்கியமான மரம் கொய்யா மரம். இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் வீட்டில் ஒன்றிற்கு இரண்டு மரம் என வளர்த்து வருவார்கள். ஆனால் ஒரு சில மரங்கள் வளர்ந்துகொண்டே இருக்கும் ஆனால் காய்கள் வைக்கவே வைக்காது. இன்னும் சில மரங்கள் வளரவே வளராது. அப்படி வளராமல் இருக்கும் மரங்களுக்கு நாம் சில ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய உரத்தினை அளிக்க வேண்டும். அப்போது தான் மரம் செழிப்பாக வளர தொடங்கும். எனவே, இப்பதிவில் கொய்யா மரம் செழிப்பாக வளர என்ன உரம் கொடுக்க வேண்டும் என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
How to Grow Guava Tree Faster in Tamil:
உரம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
- எள்ளு புண்ணாக்கு – 1/4 கிலோ
- புளித்த மோர் – 2 கப்
முதலில் பெரிய அகலமான பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து கொள்ளுங்கள். இதில் எள்ளு புண்ணாக்கு மற்றும் புளித்த மோரினை சமமான அளவில் எடுத்து கொள்ளுங்கள்.
இத்துடன் 2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 1 வாரம் வரை நொதிக்க விடுங்கள்.
கருவேப்பிலை செடி மரமாக மாற இதை மட்டும் செய்யுங்க போதும்..
1 வாரத்திற்கு பிறகு, இந்த கரைசலில் 1/2 லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கொய்யா மரத்தின் வேர்ப்பகுதியில் ஊற்றி விடுங்கள்.
இந்த கரைசலை வாரத்திற்கு ஒருமுறை மரத்திற்கு உரமாக கொடுத்து வந்தால் கொய்யா மரத்தில் எளிதில் பிஞ்சு வைக்க தொடங்கும்.
முக்கியமாக, கொய்யா மரம் வைத்திருப்பவர்கள் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று கவாத்து செய்து விடுதல். கொய்யா செடி வளர வளர அதன் பக்கவாட்டு கிளைகள் அல்லது நுனிப்பகுதியை கவாத்து செய்து விடுவதன் மூலம் கொய்யா செடி அதிகமாக காய்க்க தொடங்கும்.
Homemade Fertilizer for Guava Tree in Tamil:
- வேர்க்கடலை புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு
- வேப்பம் புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு
- காய்கறி கழிவு – 2 கைப்பிடி அளவு
- தண்ணீர் – 4 லிட்டர்
பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 லிட்டர் தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள்.
வேர்க்கடலை புண்ணாக்கிணை கலந்து கொள்ளவும்:
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வேர்க்கடலை புண்ணாக்கிணை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
வேப்பம் புண்ணாக்கிணை சேர்த்து கொள்ளவும்:
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கிணையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
காய்கறி கழிவுகளை கலக்கவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு காய்கறி கழிவுகளையும் சேர்த்து நன்கு கலந்து இதனை பத்து நாட்கள் அப்படியே விடுங்கள். பிறகு இதனை வடிக்கட்டி உங்க வீட்டில் உள்ள கொய்யா மரத்தின் வேர்களில் ஊற்றி கொள்ளுங்கள்.
இதனை வாரத்திற்கு இரு முறை என்று தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் கொய்யா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
மேலே கூறியுள்ள இரண்டு உரத்தில் எந்த உரத்தினை வேண்டுமென்றாலும் நீங்கள் கொய்யா மரத்திற்கு கொடுத்துக்கலாம். வருடத்திற்கு மூன்று முறையாவது இந்த உரத்தினை கொடுக்க மறக்காதீரக்ள்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |