மாமரத்தில் உள்ள பூக்கள் அனைத்தும் காய்களாக மாற இந்த கரைசலை மட்டும் கொடுங்கள் போதும்..!

Advertisement

Homemade Fertilizer for Mango Tree in Tamil

பொதுவாக நமது பாரம்பரியத்தில் மூக்கனிகள் என்று கூறுவார்கள். அதாவது மா, பலா, வாழை என்பது தான் அந்த மூக்கனிகள் ஆகும். இதில் முதலாவது உள்ள மா என்பது மாங்காய் ஆகும். இந்த மாங்காய் என்பது அனைவருக்குமே மிக மிக பிடிக்கும். அதனால் இதனை அனைவருமே இந்த மாமரத்தை தங்களது வீட்டில் வளர்ப்போம். ஆனால் ஒரு சிலரின் வீட்டில் உள்ள மாமரத்தில் நீண்ட நாட்களாக மாமரம் காய்க்காமல் இருக்கும். மேலும் ஒரு சிலரின் வீட்டில் உள்ள மாமரத்தில் அதிக அளவு பூக்கள் எல்லாம் வைக்கும். ஆனால் கொஞ்சம் நாள் கழித்து அவையாவும் மரத்திலிருந்து கீழே உதிர்ந்துவிடும். இப்படி உங்கள் வீட்டின் மாமரத்தில் உள்ள பூக்கள் அதிக அளவு கொட்டுகிறதா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இந்த பதிவில் இயற்கையான முறையில் உங்க வீட்டின் மாமரத்தில் உள்ள பூக்கள் அதிக அளவு கொட்டுவதை தடுத்து அதிக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க போகின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

காய்க்கவே காய்க்காத முருங்கை மரத்தில் கூட அதிக காய்க்கள் காய்க்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

Best Organic Fertilizer for Mango Tree in Tamil:

Best Organic Fertilizer for Mango Tree in Tamil

பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே மாங்காய், மாம்பழம் மிக மிக பிடிக்கும். அதனால் அனைவருக்குமே தங்களது வீட்டில் மாமரத்தை வளர்க்கிறார்கள். அப்படி நாம் வளர்க்கும் மரத்தில் அதிக காய்கள் காய்க்க வில்லை என்றால் நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.

அதனால் இயற்கையான முறையில் உங்க வீட்டின் மாமரத்தில் உள்ள பூக்கள் அதிக அளவு கொட்டுவதை தடுத்து அதிக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம் வாங்க.

முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. வாழைப்பூ – 1
  2. சின்ன வெங்காயம் – 10
  3. புளித்த தயிர் – 1 கப் 
  4. தண்ணீர் – 1 லிட்டர் 

பூக்காத முல்லை பூச்செடியும் இதை ஒரு முறை ஊற்றினால் காடு போல் பூக்கும்

வாழைப்பூவை எடுத்து கொள்ளவும்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 வாழைப்பூவினை நன்கு பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

சின்ன வெங்காயத்தை எடுத்து கொள்ளுங்கள்:

அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 10 சின்ன வெங்காயத்தை நன்கு பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

பாத்திரத்தை எடுக்கவும்:

பின்னர் நாம் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூ மற்றும் சின்ன வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் புளித்த தயிர் மற்றும் 1 லிட்டர் தண்ணீரையும் ஊற்றி கொள்ளுங்கள்.

தென்னை மரத்தின் குரும்பை மற்றும் பூக்கள் கொட்டுவதை தடுக்க இதை செய்யுங்க போதும்

பிறகு இதனை நன்கு மூடி 2 முதல் 3 நாட்கள் அப்படியே விடுங்கள். அதன் பிறகு இதனை ஒரு பெரிய பாத்திரத்தில் வடிகட்டி ஊற்றி கொள்ளுங்கள். அதனுடன் 5 லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து உங்களது மாமரத்தின் வேரில் ஊற்றி கொள்ளுங்கள்.

இதனை வாரம் இருமுறை அல்லது மூன்றுமுறை என தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் மாமரத்தில் உள்ள அனைத்து பூக்களும் காய்களாக மாறுவதை நீங்களே காணலாம்.

பூக்காத செம்பருத்தி பூச்செடியில் கூட அதிக அளவு பூக்கள் போக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement