வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க வீட்டில் உள்ள பன்னீர் ரோஜா செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க தண்ணீருடன் இதை மட்டும் கலந்து ஊற்றுங்கள் போதும்..!

Updated On: July 10, 2023 7:31 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Homemade Fertilizer for Paneer Rose Plant in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே செடிகள் வளர்ப்பதில் அதிக  ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் கொண்டுள்ளனர். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் பல வகையான பூச்செடிகளில் இந்த பன்னீர் ரோஜா பூச்செடியும் ஒன்று. நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் பன்னீர் ரோஜா பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கவலைப்படும். இப்படி உங்க வீட்டில் உள்ள பன்னீர் ரோஜா பூச்செடியிலும் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லையா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்க வீட்டில் இருக்கும் பன்னீர் ரோஜா பூச்செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

 பூச்செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க போதும்

Natural Fertilizer for Paneer Rose Plant in Tamil:

Natural Fertilizer for Paneer Rose Plant in Tamil

பெண்களுக்கு மிகவும் பிடித்த பல பூக்களில் இந்த பன்னீர் ரோஜா பூவும் ஒன்று. அதனால் இதனை பலரும் தங்களின் வீட்டில் விரும்பி வளர்ப்பார்கள். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் பன்னீர் ரோஜா பூ செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

  1. கடுகு – 50 கிராம் 
  2. வேர்க்கடலை – 50 கிராம் 
  3. வேப்பம் புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு 
  4. தண்ணீர் – 2 லிட்டர் 

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 50 கிராம் கடுகு  மற்றும் 50 கிராம் வேர்க்கடலையை ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள 2 லிட்டர் தண்ணீரை ஊற்றி அதனுடனே நாம் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

உங்க வீட்டில் இருக்கும் முல்லை பூச்செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க போதும்

வேப்பம் புண்ணாக்கிணை கலந்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கிணையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனை பத்து நாட்கள் அப்படியே விடுங்கள்.

பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் கலந்து வைத்துள்ள கரைசலை ஊற்றி அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதில் இருந்து 1 கப் மட்டும் எடுத்து உங்கள் பன்னீர் ரோஜா பூ செடியின் வேர்களில் ஊற்றி கொள்ளுங்கள்.

இதனை வாரத்திற்கு இரு முறை என்று தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் பன்னீர் ரோஜா பூ செடி கொத்து கொத்தாக பூக்கள் பூக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

மிளகாய் செடியில் கொத்து கொத்தாக காய் காய்க்க வேண்டுமா அப்போ இதை மட்டும் ஊற்றினால் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now