தென்னைமரம் வேகமாக வளர இதை மட்டும் உரமாக கொடுத்தால் போதும்..!

Advertisement

How to Grow Coconut Tree Faster  | வீட்டில் தென்னை மரம் வளர்ப்பு 

பொதுவாக நாம் நம்முடைய வீட்டில் மரம் வளர்த்தால் தான் மழை பொழியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக உள்ளது. அந்த வகையில் நாம் நம்முடைய வீட்டில் மற்ற மரக் கன்றுகளை நடுகின்றோமோ இல்லையோ கண்டிப்பாக வாழைமரம், தென்னை மரம், வேப்ப மரம் மற்றும் இதர பூக்கன்றுகளையும் வளர்த்து வருவோம். அந்த வகையில் எல்லோருடைய வீட்டிலும் தேங்காயின் அத்தியாவசிய தேவைக்காக கண்டிப்பாக தென்னை மரம் வைத்து இருப்பார்கள். ஆனால் அதனை எப்படி சரியாக பராமரிப்பது என்று தெரியாமல் இருப்பார்கள். இவ்வாறு நாம் சரியாக பராமரிக்கவில்லை என்றால் தென்னை மரம் வளர்ச்சி இல்லாமல் போய்விடும். மேலும் தேங்காய்களை காய்க்காமல் போகிவிடும். அதனால் இந்த பதிவில் தென்னை மரத்தினை எளிய முறையில் பராமரித்து வளர்ப்பதற்கான டிப்ஸினை தான் பார்க்கப்போகிறோம்.

தென்னை மரம் நடுவது எப்படி.? 

தென்னை மரத்தை பொறுத்தவரை இது மற்ற மரங்களை போல கிடையாது. அதனால் தென்னை மரத்தை எப்போதும் நடுவதற்கு முன்பாக சூரிய ஒளி படும் இடத்தில் நடுவது நல்லது.

அதேபோல் சூரிய இல்லாமல் நிழலாக இருக்கும் இடத்தில் மரத்தினை நடுவதால் மரம் நன்றாக வளர்ச்சி இல்லாமல் போய்விடும்.

உங்க வீட்டில் உள்ள நெல்லிக்காய் மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்கதண்ணீருடன் இதை மட்டும் கலந்து ஊற்றுங்கள் போதும்

Thennai Maram Uram Vaikum Murai:

தென்னை மரம் நடுவது எப்படி

தென்னை மரத்தினை நடும் போது ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடைவெளியாக 7.5 மீட்டர் விட வேண்டும். இவ்வாறு செய்யாமல் அருகிலேயே வைத்தால் மரம் வளராமல் போய்விடும்.

உங்களுடைய வீட்டில் 5 வருடத்திற்கு மேல் உள்ள தென்னம்பிள்ளை இருக்கிறது என்றால் அதற்கு உரம் இடுவதற்கு கீழே பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

  1. பொட்டாசியம்- 3 1/2 கிலோ 
  2. பாஸ்பேட்- 2 கிலோ 
  3. யூரியா- 1 1/4 கிலோ 
  4. மக்கிய உரம்- 50 கிலோ 
  5. வேப்பம் புண்ணாக்கு- 5 கிலோ

இப்போது இத்தகைய பொருட்கள் அனைத்தினையும் இரு பிரிவாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு பாதியை எடுத்து நன்றாக ஜூன் To ஜூலை முதல் தென்னை மரத்திற்கு உரம் அளித்து விட வேண்டும்.

அடுத்த பாதி உரத்தினை இடையில் 3 மாதம் இடைவெளி விட்டு டிசம்பர் To ஜனவரி மாதத்தில் அளித்து விட வேண்டும். இத்தகைய முறையில் உரம் அளித்தால் போதும் தென்னை மரம் நன்றாக வளர்ந்து விடும்.

நீர் பாய்ச்சும் முறை:

தென்னையின் வேர் நன்றாக ஆழமாக இருக்கும். அதனால் தென்னையின் அருகில் ஒரு குழியினை வெட்டி அதில் தண்ணீர் விட வேண்டும். மரம் காய்ந்து போகாத அளவிற்கு நன்றாக தண்ணீர் விட வேண்டும்.

இவ்வாறு நாம் சரியான முறையில் தென்னை மரத்தினை பராமரித்து வருவதன் மூலம் தென்னை நன்றாக வளர்வதோடு மட்டும் இல்லாமல் தேங்காயும் காய்க்கும்.

Fertilizers For Coconut Trees in Tamil:

வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தென்னை மரத்திற்கு தொழுவுரம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு மற்றும் இலுப்பை புண்ணாக்கு கலந்த கலவையை இட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், அதிக விளைச்சலை பெறலாம். அதுமட்டுமில்லாமல், தென்னை மரத்திற்கு இரசாயன உரம் முக்கியமான ஒன்று.

இரசாயன உரங்கள்:

best fertilizer for coconut trees in tamil

இரசாயன உரங்களில் பல வகையான சத்துக்கள் உள்ளது. அதில் முக்கியமான மூன்று சத்துக்கள் என்னெவென்றால் மணிச்சத்து, கந்தகச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து ஆகும். அதில் மிக முக்கியமானது மணிச்சத்து ஆகும். இச்சத்துக்கள் நிறைந்த உரங்களை தென்னை மரத்திற்கு இடுவதன் மூலம் தேங்காய் அதிகமாக காய்க்கும்.

மணிச்சத்து உரங்கள்:

சந்தைகளில் பல வகையான மணிச்சத்து நிறைந்த இரசாயன உரங்கள் உள்ளது. குறிப்பாக சூப்பர் பாஸ்பேட்டில் மணிச்சத்து நிறைந்துள்ளது. இந்த சத்தானது, தென்னை நாற்றில் இருந்து முளைத்து வரும் குருத்தின் பருமனை அதிகரிக்கவும், தென்னன் வேர்கள் பூமியில் ஆழமாக வேரூன்றி நிற்பதற்கும் உதவுகிறது. இதனால், மரத்தின் வளர்ச்சி அதிகரித்து விளைச்சல் பெருகுகிறது.

தென்னை உர மேலாண்மை பற்றிய ஆலோசனைகள்..!

கந்தகச்சத்து உரங்கள்:

கந்தக சத்தானது, கொப்பரை தேங்காயில் எண்ணெயின் அளவு கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. மேலும், தேங்காய் பருப்பு ரப்பார் போன்று ஆகிவிடாமல் கெட்டியாக உருவாகவும் இது உதவுகிறது. எனவே, தென்னை மரத்திற்கு கந்தகச்சத்து நிறைந்த சூப்பர் பாஸ்பேட் உரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சுண்ணாம்புச்சத்து உரங்கள்:

தென்னை மரம் வலிமையாக வளர சுண்ணாம்புச்சத்து மிகவும் முக்கியம். எனவே, தென்னை மரத்திற்கு சுண்ணாம்புச்சத்து நிறைந்த உரங்களை இட வேண்டும். இச்சத்து, மரங்களின் கட்டமைப்பு செல்களின் சுவர்களிலும், வேரின் வளர்ச்சியிலும் சர்க்கரை மற்றும் தனிமங்களை கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது தவிர சூப்பர் பாஸ்பேட்டில் அடங்கியுள்ள தனிமச்சத்துக்களான போரான், குளோரின் மற்றும் சோடியம் போன்றவை தென்னை மரத்தின் வளர்ச்சிக்கு அதிக பங்களிக்கின்றன.

எனவே, மேற்கூறியுள்ள சத்துக்கள் அடங்கிய உரங்களை தென்னை மரத்திற்கு இடுவதன் மூலம் தென்னை மரம் அதிக விளைச்சல் தரும்.

தென்னை மரத்தில் உள்ள குரும்பைகள் மற்றும் பூக்கள் கொட்டுவதை தடுத்து காய்கள் காய்க்க இதை மட்டும் செய்யுங்க போதும் 

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement