முல்லை செடியில் கொத்து கொத்தாக பூ பூக்க
இன்றைய கால கட்டத்தில் அனைவருமே வீட்டு தோட்டம் அமைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்ப்பதில் அதிக ஈடுபாடுடன் காணப்படுகின்றனர். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் பல வகையான பூச்செடிகளில் இந்த முல்லை பூச்செடியும் ஒன்று. நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் முல்லை பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கவலைப்படும். அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் இருக்கும் முல்லைச் செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுவதுமாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன்பெறுங்கள்…
கொத்து கொத்தாக பூ பூக்க:
மண் மற்றும் காலநிலை:
முல்லை செடி வளர்ப்புக்கு வெப்பமண்டல சூழ்நிலை மிகவும் அவசியம்.
முல்லை செடி வளர்வதற்கு செம்மண் அல்லது மணல் கலந்த களிமண் மண் சிறந்தது.
ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை முல்லை செடிகளை நடவு செய்தல் மகசூல் அதிகரிக்கும்.
மல்லிகை செடியில் பூக்கள் அதிகமாக பூக்க:
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை
புதினா எண்ணெய்
உப்பு
உரங்கள்:
தொழு உரம் முல்லை சாகுபடியை அதிகரிக்கும். செடி நட்ட பின்னர் இதனை இடுவதால் செடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
உங்கள் முல்லை செடியில் சிலந்திகள் தோன்றுவதால், முல்லையின் வளர்ச்சி குறையலாம். அதற்கு முதலில் சிலந்தியினை கட்டுப்படுத்த வேண்டும்.

அதற்கு ஒரு கப் தண்ணீரில் 12 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 8 சொட்டு புதினா எண்ணெயை சேர்க்கவும். பிறகு இந்த கரைசலை உங்கள் செடிகளின் மீது தெளிப்பதால் சிலந்தி கட்டுப்படுத்துவது மட்டும் அல்லாமல், எலுமிச்சையில் உள்ள துத்தநாக சல்பேட் முல்லைச்செடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
உங்கள் அசுவினிகள் தாக்குவதால் கூட உங்களின் விளைச்சல் குறையலாம். அதற்க்கு அரை லிட்டர் தண்ணீரில் 1 தேக்கரண்டி உப்பு சேர்ந்து கரைத்து, 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்ந்து செடிகளில் தெளிப்பதால் முல்லையில் ஏற்படும் நோய்த்தாக்குதல் குறைந்து அதிக பூ பூக்க ஆரம்பித்து விடும்.

நீங்கள் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை 1 லிட்டர் தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்து, வாரத்திற்கு இரண்டு முறை மண்ணுக்கு தண்ணீர் ஊற்றலாம். இந்த எலுமிச்சை கரைசல் இலைகளில் படுவதால் ஒளிச்செயற்கையில் பாதிப்பு ஏற்படலாம். அதனால் பயன்படுத்தும் போது கவனம் தேவை.
இலை உண்ணும் கம்பளிப்பூச்சி இலை:
உண்ணும் கம்பளிப்பூச்சியை குயினால்பாஸ் 25 இசி 2 மிலி/லிட் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

முல்லை பூக்கள் சிறந்த முறையில் மலர மற்றும் சிறந்த வாசனைக்கு போதுமான அளவு சூரிய ஒளி தேவை. 6 மணிநேரம் சூரிய ஒளியும் பின்பு நிழலும் இருப்பதுபோல் உங்கள் செடியை நட்டுவைத்தல் அதிக விளைச்சலை தரும். முல்லை செடிக்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை.
முல்லை பூக்கள் பூத்து முடித்ததும் முல்லை செடிகளை கிளைகளை சிறிது வெட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் செடி மீண்டும் துளிர்த்து அதிகப்படியான விளைச்சலை தரும்
| இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |














