மாடித்திட்டத்தில் செங்காந்தள் செடி வளர்ப்பது எப்படி ?
இன்றைய பதிவில் செங்காந்தள் செடி வளர்ப்பது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம். செங்காந்தள் செடி நன்றாக வளர்வதற்கு, அதனை ஊன்றிவைக்கும்போது மாட்டு எருது மட்டும் ஆட்டு எருதுகளை மண்ணில் கலந்து விட வேண்டும். அதன் பிறகு, தண்ணீர் ஊற்றி மண்ணை நன்றாக தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதன் பிறகு,செங்காந்தள் செடியை ஊன்ற வேண்டும். ஊன்றிய பிறகு, நாம் சில முக்கியமான உரங்களை அதற்கு கொடுக்க வேண்டும். செங்காந்தள் கோல்ச்சிகேஷி குடும்பத்தை சேர்ந்த மருத்தவ பெயராகும். மேலும், செங்காந்தள் சாகுபடியில் தமிழ்நாடு கடந்த 20 வருடமாக முன்னிலையில் உள்ளது. அந்த வகையில் மாடித்தோட்டத்தில் செங்காந்தள் செடி பயிரிடுவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க…
செங்காந்தள் நடவு செய்யும் முறை :
- செங்காந்தள் செடி வைப்பதற்கு உகந்த காலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில்செங்காந்தள் செடியை நடவு செய்யலாம். அரை அடி ஆழமாக குழி வெட்டி அதுக்குள் செடியை வைத்து செம்மண் போட்டு தண்ணீர் ஊற்றி வைக்கவும். முக்கியமாக செங்காந்தள் செடி சூரிய ஒளிபடும் இடத்தில் வைப்பது அவசியம்.
- செங்காந்தள் செடியில் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் அதற்கு தண்ணீர் மருந்து மற்றும் சாணி கரைசல் போன்றவற்றை அடித்துவிட வேண்டும். மேலும், செங்காந்தள் செடிக்கு தண்ணீர் அதிகம் தேங்க விடாமல் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.
நீர்மேலாண்மை:
செங்காந்தள் செடியை விதைத்தவுடன் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பூகின்ற சமையத்தில் வாரம் ஒருமுறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். காய்கள் முளைக்கும் நேரத்தில் சரியான நீர்ப்பாசன வசதி தேவை. காய்கள் முதிர்ச்சி அடையும் நேரத்தில் நீர்பாசனம் செய்ய தேவையில்லை. சொட்டுநீர் பாசனம் செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும்.
மண்வளம் :
செங்காந்தள் செடிக்கு மண்வளம் ஆனது செம்மண், பொறைமண், சுண்ணாம்பு சத்துள்ள மண் வகைகளில் பயிரிட ஏற்றது. மண்ணின் அமிலே தன்மை 6 முதல் ஆக இருக்க வேண்டும். இப்பயிருக்கு வடிகால் வசதியுள்ள ஏற்றவை.
மாடித்தோட்டம் ரோஜா பயிரிடும் முறை..!
செங்காந்தள் செடி அதிகமாக பூக்க:
- செங்காந்தள் செடி அதிகமாக பூக்க வேண்டுமென்றால், முதலில் செங்காந்தள் செடியை களைகள் செய்து விடுதல் வேண்டும். அதாவது, செடியின் பக்கத்தில் வளர்ந்து வரும் புள் போன்றவற்றை அகற்ற வேண்டும். வளர்ந்து வரும் செங்காந்தள் கொடி மற்றும் கொடியின் நுனி பகுதிகள் சேதமடையாமல் களையை அகற்ற வேண்டும்.
அறுவடை காலம் :
கிழங்குகள் முளைத்த 160 முதல் 180 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம். விளைந்த காய்கள் பச்சை நிறம் மற்றும் பழுப்பு நிறத்திலும் மற்றும் இளம்பச்சையாக மாறி காய்கள் சுருங்கி விடும். பறித்த காய்களை 7 முதல் 10 நாட்கள் வரை உலர்த்த வேண்டும். ஒவ்வொரு விதையிலும் 70 முதல் 100 விதைகள் இருக்கும்.
| இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம் |














