முடி கொட்டுவது நின்று முடி காடுபோல வளர இந்த எண்ணெயை மட்டும் தடவுங்கள்..!

How To Make Hair Growth Oil At Home in Tamil

Hair Growth Oil At Home

நீளமாக முடி இருக்க வேண்டும் என்பது பெண்களின் ஆசையாக இருக்கிறது. இந்த ஆசை அனைத்து பெண்களுக்குமே இருக்கும். முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்ற ஆசையில் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் இருக்கின்ற முடியும் இல்லாமல் போகிறது. அந்த வகையில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்த பதிவின் மூலம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How To Make Hair Growth Oil At Home in Tamil:

  1. கரிசலாங்கண்ணி இலை (Bhringraj)2 கைப்பிடி அளவு
  2. கற்றாழை – 1 தண்டு
  3. தேங்காய் எண்ணெய் – 300 ml
  4. வெந்தயம் – 2 ஸ்பூன்
  5. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு

எண்ணெய் தயாரிக்கும் முறை: 

ஸ்டேப் -1 

கரிசலாங்கண்ணி

முதலில் கரிசலாங்கண்ணி இலைகளை தண்டு இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -2 

கற்றாழை

அடுத்து ஒரு தண்டு கற்றாழையை எடுத்து தோல் சீவி விட்டு அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3 

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 300 ml தேங்காய் எண்ணெயை ஊற்றி  கொள்ள வேண்டும்.

முடி கொட்டுவது சரியாகி 3 மடங்கு முடி நீளமாக வளர இதை ட்ரை பண்ணுங்க..!

ஸ்டேப் -4 

எண்ணெய் தயாரிக்கும் முறை

எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் நாம் அரைத்து எடுத்து வைத்துள்ள கரிசலாங்கண்ணி இலையை போட வேண்டும்.

ஸ்டேப் -5 

பின் எண்ணெய் நன்றாக கொதிக்க விட வேண்டும். பின் அடுப்பை குறைத்து வைத்து கற்றாழை ஜெல்லை அதில் போட்டு கொதிக்க விட வேண்டும்.

ஸ்டேப் -6 

எண்ணெய் தயாரிக்கும்

எண்ணெய் நன்றாக கொதித்த பிறகு அதில் வெந்தயத்தை இடித்து போட வேண்டும். பின் அதில் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலையை போட்டு 20 நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2 மடங்கு முடி வளர்ச்சிக்கு இதை மட்டும் Follow பண்ணுங்க

ஸ்டேப் -7 

20 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும். பின் இந்த எண்ணெயை அடுப்பில் இருந்து இரக்கி ஆறவிட வேண்டும். எண்ணெய் ஆறியதும் அதை ஒரு பாட்டிலில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் எண்ணெய் தயார்..!  இந்த எண்ணெயுடன் 100 ml தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தடவி வரலாம். அல்லது இந்த எண்ணெய்யை வாரத்திற்கு 3 முறை தலையில் தடவி 10 நிமிடம் வைத்திருந்து குளித்து வரலாம்.  இதுபோல செய்து வருவதால் முடி உதிர்வது நின்று, முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.  

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு பொருள் போதும் உங்கள் வெள்ளை முடி மற்றும் செம்பட்டை முடியை கருமை ஆக்கிடும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil