முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்
முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் இதற்காக தினமும் கிரீம்களை அப்ளை செய்து முகத்தை பளபளப்பாக வைத்து கொள்கின்றோம். ஆனால் இதனை பயன்படுத்தும் போது சில நேரங்கள் மட்டும் தான் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ளும். சிறிது நேரம் கழித்து முகத்தில் உள்ள பளபளப்பு குறைந்து பொலிவிழந்து காணப்படும். அதனால் இந்த பதிவில் நாள் முழுவதும் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு இயற்கை முறை சிறந்த தேர்வாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
முகம் பளபளப்பாக இருக்க கேரட்:
ஒரு கேரட் எடுத்து சீவி கொள்ளவும்.
பிறகு ஒரு கடாய் எடுத்து அதில் சீவிய கேரட், 5 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அடுப்பை குறைவான தீயிலே வைத்து 2 அல்லது 3 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
கொதித்த கலவை ஆறியதும் வடிக்கட்டியை பயன்படுத்தி வடிக்கட்டி சாற்றை மட்டும் எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
இந்த கேரட் ஆயிலில் பீட்டா கரோட்டீன் இருப்பதால் வயதான தோற்றம் ஏற்படாமல் இளமையாக வைத்து கொள்ள உதவுகிறது. கண்ணை சுற்றியுள்ள கருவளையம் மறைந்து முகமா பளபளப்பாக காட்சியளிக்கும், முகத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள உதவுகிறது. கேரட்டில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் முகத்தில் உள்ள பள்ளங்களை மறைய செய்கிறது. கேரட் ஆயிலை மட்டும் பயன்படுத்தாமல் தினமும் கேரட் ஜூஸ் அல்லது 1 கேரட் சாப்பிட்டு வந்தால் நிரந்தரமாக முகம் பிரகாசமாக மாறிவிடும்.தயார் செய்து வைத்துள்ள கேரட் பேக்கை தினமும் தூங்குவதற்கு முன்பு 1 அல்லது 2 சொட்டு எடுத்து முகம் முழுவதும் அப்ளை செய்து இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் எழுந்து கழுவி விடவும். இந்த பேக்கை தினமும் ஒரு தடவை அப்ளை செய்யவும். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் இந்த பேக்கை இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டாம். ஒரு 10 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடவும்.
இது ஒன்று போதும் 15 நிமிடத்தில் உங்க முகம் பளிச்சென்று மாறிவிடும்..
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |